பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடவுளின் கணக்குகள் மிக மிக ஆழமாக கவனித்தால் ஞானத்தால் கவனித்தாலன்றி புரியாது

ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவினை ஊடுருவும் வழியினை கிரேக்கர் தொடங்கி வைத்தனர், குப்த பேரரசு அலெக்ஸாண்டரின் செலூகஸை கட்டுபடித்தி வைத்தது அவனாலும் உள்ளே வரமுடியவில்லை தொடர்ந்து வந்த கனிஷ்கர் உட்பட பல அரசர்கள் ஆப்கானியர்களை அடக்கியே வைத்தனர், இன்று சுத்தமான ஆப்கன் இனம் என அது இல்லை அங்கு கிரேக்க கலப்பு மங்கோலிய கலப்பு என எல்லாம் கலந்து இருக்கின்றது, யுத்தமும் கொள்ளையும் அவர்கள் ரத்தத்திலே ஊறியது எனினும் ஆயிரம் வருடம் முன்புவரை சிக்கல் இல்லை, அன்று மகா […]

கள வியூக படம்

இது வங்கபோரில் இந்தியா படை நகர்த்திய விதம், ராணுவ பரிபாஷையில் “கள வியூக படம் ” என்பார்கள் இம்மாதிரி படங்கள் எல்லா யுத்த களத்திலும் உண்டு அலெக்ஸாண்டரில் தொடங்கி சிரிய யுத்தம் வரை உண்டு இந்த படத்தில் இந்திய நிலைகள் காவி நிறத்திலும் பாகிஸ்தானிய நிலைகள் பச்சை நிறத்திலும் குறிக்கபட்டிருப்பதை கவனிக்கலாம் இது 1970 இந்திய நிலவரம் அன்றே இத்தேசம் காவி நிறத்தில்தான் தன்னை நிறுத்தியிருக்கின்றது இந்திரா செய்தால் சரி , ஆனால் இனி மோடி செய்தால் […]

இருவர் நிலத்திடையே ஒரு சுவர் வந்தால் அது பொதுசுவர்

இருவர் நிலத்திடையே ஒரு சுவர் வந்தால் அது பொதுசுவர் என்ற வகையில்தான் வரும், ஆக அந்த சுவரில் இருதரப்புக்குமே பங்கு உண்டு இப்பக்கம் பட்டா நிலமும் அப்பக்கமும் பட்டா நிலமும் இருந்தால் இந்த சாவில் இருவருக்குமே பங்கு உண்டு இப்பக்கம் பட்டா நிலமும் அப்பக்கம் பட்டா இல்லா நிலமாக இருந்தால், அவர்கள் நிலமற்று அதில் வசித்து வந்திருந்து பட்டா கொடுப்பதில் காலதாமதமாகியிருந்தால் இதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு ஒரு பக்கத்துக்காரனை மட்டும் பிடித்து உள்ளே போடுவது சரியல்ல, […]

நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது

நாம் ஒரு கிறிஸ்தவன் என்பதால் நித்திசாமியினை பழிக்க தொடங்கியிருப்பதாக சிலர் கடுமையாக விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள் நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது இந்து மதத்தை மிக அணுக்கமாக பார்ப்பவன் எனும் முறையிலும் பண்டைய இந்து ரிஷிகள், அவதாரங்கள் வரிசையினை கவனித்தவன் என்ற முறையிலுமே சொல்கின்றோம் துறவு வரிசை வேறு, அவதார வரிசை வேறு ராமனையும் கண்ணனையும் தவிர எந்த அவதாரமும் அரசாண்டது இல்லை,, அய்யப்பனே அரசு வேண்டாம் என சொன்னவர் ராமனும் கண்ணனும் கூட […]

இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம் இந்திய கடற்படை எத்தனையோ வெற்றிகளை பெற்றது, குறிப்பாக 1971 வங்கபோரில் உண்மையில் ஆடியதே இந்திய கடற்படைதான். ஏன் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் ஆனது என்றால் விஷயமிருக்கின்றது மகா திரில்லான விஷயம் அது கிழக்கு பாகிஸ்தானில் கடும் மனித உரிமை மீறலில் பாகிஸ்தான் இறங்க , கற்பழிப்பும் படுகொலைகளும் எல்லை மீறி செல்ல, அகதிகள் இங்கு குவிய, இனி பொறுப்பதில்லை என‌ இந்தியா களமிறங்கியது. கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல […]

போலந்து நாடு தன் மாபெரும் பொக்கிஷ்த்தை மீட்டிருக்கின்றது

போலந்து நாடு தன் மாபெரும் பொக்கிஷ்த்தை மீட்டிருக்கின்றது ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனால் விழுங்கபட்ட முதல் நாடு போலந்து. எனினும் முன் கூட்டியே தன் பணத்தை தங்கமாக மாற்றி பிரிட்டனுக்கு அனுப்பிவிட்டது மேற்கொண்டு படிக்கும் முன் அருகில் ஒரு மருத்துவரை வைத்துகொள்வது நல்லது முடியாவிட்டால் ஒரு சோடா பாட்டிலாவது இருக்கட்டும் எவ்வளவு தங்கம் தெரியுமா? அதிகம் அல்ல 100 டன்கள் தான். ஆம் நூறே நூறு டன்கள் மட்டுமே ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ எனில் […]

வரலாற்று வெற்றி வங்கப்போர்

சுதந்திர இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வரலாற்று வெற்றி வங்கப்போர், வங்கம் இரண்டாக பிரியும் எனவும் அதை பாகிஸ்தான் எனும் புதுநாடு கொண்டுபோகும் எனவும் அதை தனி நாடு என உருவாக்க இந்தியா சண்டையிடும் எனவும் 120 ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்து கூட பார்த்திருக்கமுடியாது வெள்ளையனின் நரி தந்திரம் அதை செய்ய வைத்தது, 1971ல் அந்த யுத்தத்தில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். […]

கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே

திமுக அருந்ததிய மக்களுக்கு பெரும் முன்னேற்ற திட்டங்களை செய்தது, மனித கழிவினை மனிதனே அகற்றும் கொடுமைக்கு பாடுபட்டது, இப்பொழுதும் மேட்டுபாளையத்துக்கு திமுகவே பெரும் குரல் கொடுக்கின்றது : உபிஸ் “அருந்ததிய சமூகம் உய்ய திமுக அரும்பாடு பட்டதா? ஆமாம், மனித கழிவினை மனிதனே அகற்றுவது பெரும் கொடுமை. கருணாநிதியுடன் கடைசிகாலத்தில் இருந்தது யார்? நித்யா.. அவர் யார்? அருந்ததிய சமூகத்தவர் கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே ஆமாம், எடுத்து போட்டது வரை அவர்தான் சரி நீ கிளம்பு..”

இனிதான் இருக்கின்றது விஷயம்

தூத்துகுடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கபடும் என மத்திய அரசு சொல்லிவிட்டது, இது நல்ல அறிவிப்பு என்றாலும் இனிதான் இருக்கின்றது விஷயம் இந்த திட்டம் வெறும் 1 ஏக்கர் நிலத்தில் அமையபோவதில்லை மாறாக 2400 ஏக்கர் நிலம் வேண்டும் , இவ்வளவு பெரும் அரசு நிலம் அப்பக்கம் கிடையாது, நிச்சயம் தனியார் நிலத்தில் கை வைக்க வேண்டும் விடுவார்களா கோஷ்டிகள்? எம்.பி வேறு அக்கா கனிமொழி வாழ்வாதாரம் கெடுகின்றது, மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு ராக்கெட் […]

சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராது

செட்டிநாட்டு செட்டிகளுக்கு சில சாபங்கள் உண்டு, பலருக்கு குழந்தை இருக்காது, சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராதுஏகபட்ட உதாரணங்கள் அங்கு உண்டு எனினும் கண்முன் கண்ட சாட்சி எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார்மிகபெரும் தனவானாக இருந்தும் இறுதிகாலங்களில் வளர்ப்புமகனால் அவர் படாதபாடுபட்டு நிம்மதியின்றி தவித்தார்ப.சிதம்பரத்துக்கும் அந்த செட்டிநாட்டு சாபம் தொட்டுவிட்டதுதான் மகா சோகம்..