பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆண்டவன் எப்பவும் என்ன கண்காணிச்சிட்டே இருக்கான்

உலகம் பூரோ கொரொனா, தமிழ்நாட்டுல 144 ஆக இனி யாரும் பேச கூடாது, கூட்டம் போட கூடாது, நல்லது. நான் இந்நேரம் மக்களை கூட்டம் போட அனுமதிக்கமாட்டேன், ஏன் மணியன், மாரிதாஸ், பாண்டே கூட சந்திக்கமாட்டேன் இன்னும் ஒருவருஷம் இப்படியே இருப்ப்பேன், ஆமா கட்சிவிட ஆட்சிவிட மக்கள் நலன் முக்கியம் இனி யாரும் நம்மகிட்ட கட்சி பேசமாட்டாங்க, அரசியல் பேசமாட்டாங்க, கொஞ்ச நாளைக்கு நிம்மதியா விட்ருவாங்க, அப்படியே தேர்தல் வந்துரும், நேரமில்லன்னு சொல்லிட்டு தப்பிச்சிரலாம். ஆண்டவன் எப்பவும் […]

நிச்சயம் அது மடத்தனம்

தமிழக அரசு நேற்று பெரும் பைத்தியகாரதனம் செய்துவிட்டதாக தோன்றுகின்றது, நிச்சயம் அது மடத்தனம் தடை உத்தரவு என உடனே அறிவித்திருக்க வேண்டும், மாறாக ஒரு நாள் கழித்து தடை அதற்குள் ஊருக்கு செல்லுங்கள் என அனுமதிதத்து எல்லாம் மாபெரும் முட்டாள்தனம் போக்குவரத்து ஒன்றே கொரோனா பரவ 80% காரணம் என்கின்றது ஆய்வு, இந்நிலையில் சென்னைக்குள் ஓடிய 3500 பேருந்துகளை திருச்சிவரை இயக்குவோம் என்பதெல்லாம் அபத்தம் கவனியுங்கள் இந்த பயணிகள் வீட்டை விட்டு வந்து ஆட்டோவோ பொது போக்குவரத்திலொ […]

அந்நிய வடமாநில தொழிலாளருக்கு யார் உண்டு?

திரைதுறையில் பெப்சி என்றொரு அமைப்பு உண்டு , லைட்பாய், செட்டிங், போன்ற தொழிலாளர் அமைப்புகள் அவை, அந்த தொழிலாளர்கள் கூலிகள், இதனால் சூட்டிங் இல்லாவிட்டால் சம்பளம் கிடையாது இதனால் திரை நட்சத்திரங்கள் உதவ தொடங்கிவிட்டன, அவர்கள் உதவுவது தன் துறைக்காக ஆனால் கனவோ தமிழ்நாட்டை ஆள்வதற்காக‌ தமிழக அடிமட்ட மக்களை நினைத்துபார்த்தால் வேதனை மிஞ்சும், கட்டட தொழிலாளர், அடைத்துவிட்ட கடைகளின் வேலையாட்கள், சந்தையினை நம்பி இருந்த கூலிகள் , ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷனை நம்பியிருந்த கூலிகள் ஓட்டுநர்கள் […]

கொரோனா நேரம் விமானம் நிறுத்தபட்டதில் மகா சிக்கல்

உலக சுற்றுபயணிகளுக்கு மார்ச் 18ம் தேதிவரை சிக்கல் இல்லை, அதன்பின் காட்சிகள் மாறின, ஒவ்வொரு நாட்டு பயணியும் அந்நிய நாட்டில் சிக்கிகொண்டார் இந்தியா போன்றவை அந்நிய நாட்டில் இருந்த பயணிகளை விமானம் மூலம் அழைத்து வந்தது சில நாடுகளில் சர்ச்சை வந்தது அதாவது கல்வி, மருத்துவம், மத பயணம் என்றால் அரசு வரும் ஆனால் சுற்றுபயணிகள் சுற்றுலா நிறுவணங்களை நம்பி வந்தவை அல்லவா? இன்சூரன்ஸ் எல்லாம் கூட உண்டே அவர்கள் தங்கவோ உணவுக்கோ வழி செய்யலாம் அல்லவா […]

பழி கொரொனா மேல் விழும்

சிகரெட் அடிமைகள், மதுக்கடை குடிமகன்களின் ஈரலும் நுரையீரலும் தமிழக அரசியல் போல மிகவும் கெட்டுபோய் இருக்கும் ஒரு இருமலிலே சோலி முடிந்துவிடும் இருந்து பாருங்கள் , அந்த உயிரை எடுப்பது சிகெர்ட்டும் குடியுமாக இருக்கும் ஆனால் பழி கொரொனா மேல் விழும் உலகெல்லாம் 80% இதுதான் நடக்கின்றது என்கின்றார்கள், இந்தியாவிலும் நடக்கலாம் அதுவும் தமிழ்நாட்டில் பெரும் வாய்ப்பு உண்டு, அங்கு விற்படும் சிகரெட் முதல் டாஸ்மாக் சரக்கு வரை எல்லாமே பெரும்பாலும் மட்டம்..

நடப்பது முன் எச்சரிக்கையான விஷயம் மட்டுமே

போர்காலங்களில் முதலில் சாவது உண்மை என்பார்கள், ஆம் அவ்வளவு வதந்திகள் கொடிகட்டி பறக்கும் கொரோனாவிலும் அப்படி பரவ ஆரம்பித்தாயிற்று, பெரும் அச்சமும் அவநம்பிக்கையும் தமிழகத்தில் சூழ்ந்திருக்கின்றது முதலில் ஒரு உண்மையினை தெரிந்து கொள்ள வேண்டும், நடப்பது முன் எச்சரிக்கையான விஷயம் மட்டுமே, மாறாக கொரொனா எல்லோரின் கழுத்தையும் நெறித்துகொண்டிருக்கின்றது என்பதல்ல‌ கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பது உண்மை சந்தேகமில்லை, ஆனால் டெங்கி போன்ற ஏராளாமான நோய்களுக்கும் மருந்தே இல்லை, எல்லாமே ஆரம்பகட்டத்தில் வந்தால் குணப்படுத்திவிடலாம் டெங்கிங்கு அஞ்சா […]

வெறியாட்டம் ஆடுகின்றது கொரோனா

192 நாடுகளில் கால் பதித்து வெறியாட்டம் ஆடுகின்றது கொரோனா, சில பல உயிரிழப்பு பாதிப்பு அதை விட அது கொடுக்கும் அச்சம் என கலங்கி நிற்கின்றன நாடுகள் நிச்சயம் கொரோனா பெரும் ஆபத்து இல்லைதான், ஆயிரம் பேருக்கு வந்தால் அது கொல்வது சிலரையே மீதமுள்ளோர் எளிதாக வெளிவருவர் எனினும் அந்த முடக்கமும் அச்சமுமே கலங்க வைக்கும் விஷயம் முதியோர்களால் தாங்கமுடியவில்லை, கர்பிணிகள் எளிதாக பாதிக்கபடுகின்றார்கள் அதுவும் இளையோருக்கு வராது என்பதையெல்லாம் நொறுக்குகின்றது லண்டனில் நிகழ்ந்த 20 வயது […]

கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை […]

ஏன் இப்படி இழுக்கின்றார்கள்?

தமிழ்நாட்டில் மிக சாதாரண விஷயத்தை அதாவது சன்னிலியோன் என்றால் ஆபாச வீடியோக்காரி, ஆட்டோ சங்கர் என்றால் கொலைகாரன் அப்படி ஈரோட்டு ராம்சாமி என்றால் இந்து கடவுளை அடித்திருப்பார் என கடந்து செல்லவேண்டிய இயல்பான விஷயத்தை ஏன் இப்படி இழுக்கின்றார்கள் பத்திரிகை நிறைய அதையே ஏன் வருமாறு பார்க்கின்றார்கள் என்றால் விஷயம் வேறுமாதிரியானது இதோடு தஞ்சாவூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு என இன்னும் அழுத்தமாக தஞ்சாவூர் கோவிலையே பிரதானபடுத்தி தஞ்சையின் இன்னும் சில செய்திகளை மறைக்கின்றார்கள் என்றால் அதிலும் […]

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது புதிய நீர்மூழ்கிகளில் இரு வழிகள் உண்டு முதலில் வெளிநாட்டில் முழுக்க தயாரிப்பது இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இந்த இரண்டாம் வழி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பாஜக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது, இந்திய பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றும் என்பது அந்த நிலைப்பாடு அது மிக சரியானதும் கூட‌ இந்த பல்லாயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை அதானியும் அம்பானியும் பெறுவார்கள், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications