பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதம் துலங்குகிறது

சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌. இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும். காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான […]

மாசி மகம்

இந்துக்களின் வானியல் அறிவு அக்காலத்திலே உன்னதமாய் இருந்தது, தங்களின் மாபெரும் தவவலிமையால் விண்ணக இயக்கத்தின் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த ஞானியர் அதனை வகை வகையாக சொல்லி வைத்து, ஒவ்வொரு கோளின் இயக்கமும் இந்த பூமியில் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கண்ணுக்கு தெரியாத வானலோக கதர்வீச்சும் சக்தியும் மானிட மனதை குணத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் உணர்ந்தனர். அப்படியே அவர்கள் அதனில் இருந்து தப்பவும் இன்னும் உன்னதமான பலன்களை அடையவும் பல போதனைகளையும் ஏற்பாடுகளையும் செய்தனர். […]

திருமுருகாற்றுப்படை : 10

(138 முதல் 154 வரை உள்ள வரிகள்) “புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்றுஅழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்உமையமர்ந்து […]

வராக துவாதசி / வராஹ ஜயந்தி

இன்று இந்துக்களின் வராக துவாதசி, இந்நாள் வராஹ அவதாரத்துக்குரியது. இந்துக்களின் 12ம் புராணம் வராஹ புராணம். அது இந்த அவதாரத்தின் பெரும் சிறப்பினைச் சொல்கின்றது. மூன்றாம் அவதாரமாக வந்த அந்த அவதாரமே பூமியினை மீட்டெடுத்தது. இரணியாக்ஷன் எனும் அரக்கனை அழித்து பகவான் பூமியினை மீட்டெடுத்த புராணம் அது. அர்ஜூனக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல் போல பூமாதேவிக்கும் வராக கோல பகவானுக்கும் நடந்த உரையாடலும் தத்வார்த்தமானது ஆழமான ஞானமானது. இன்று அந்த அவதாரத்தை இந்துக்கள் நோன்பிருந்து வழிபடுவார்கள். இந்துக்களின் […]

நாச்சியார் திருமொழி : 51

அன்றுல கம்மளந் தானையுகந்தடி… ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை. அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான். தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் […]

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

திருமுருகாற்றுப்படை : 09

திருமுருகாற்றுப்படை : 09 (126 முதல் 137 வரிகள்) சீரை தைஇய உடுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வால்நரை முடியினர்மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புக” இனி பாடலின் பொருளைக் காணலாம். நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்செந்தூரை அடுத்து திருஆவினன்குடி […]

வசந்த பஞ்சமி

இன்று வசந்த பஞ்சமி வசந்த காலத்தில் வரும் நவராத்திரியின் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என கொண்டாடபடும் என்றாலும் சில கணக்கீடுகள் அடிப்படையில் இந்த சியாமளா நவராத்திரியின் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை சாதாரணம் அல்ல, மிக மிக முக்கிய பண்டிகையாக தேசமெங்கும் ஒரு காலத்தில் இருந்தது, பின் பவுத்த குழப்பம் அந்நிய படையெடுப்பு என பல குழப்பங்களால் சுருங்கிவிட்டாலும் இன்று மெல்ல மெல்ல அது மீண்டெழுந்து வருகின்றது. இந்தக் கொண்டாட்டம் முன்பு பாரதம் […]

சியாமளா நவராத்திரி

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை எனக் கொண்டாடப்படுது […]

மாயம்மா

இந்துமதம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மதம். அவர்களை தெய்வமாக, அரசியாக, கவிஞர்களாக இன்னும் பலவாக உயர்த்திக் கொண்டாடிய மதம். பெண்கள் சன்னியாச கோலம் கொள்ளவும் முழு சுதந்திரம் அளித்தது. பெண்களுக்கு முழு ஆன்மீக சுதந்திரம் அளித்தமதம் இந்துமதம், அதுவே அவ்வகையில் மானுட சமூகத்துக்கே வழிகாட்டிற்று. அந்த வழியில் வந்தவள் மாயம்மா. மகா சித்திபெற்ற மாயம்மா, நாளை (10/02) அவளின் குருபூஜை நாள். பாரத தேசத்தின் மகா முக்கிய சக்தி மையம் காசி. பிரபஞ்ச பெரும் ஆற்றலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications