பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வராக துவாதசி / வராஹ ஜயந்தி

இன்று இந்துக்களின் வராக துவாதசி, இந்நாள் வராஹ அவதாரத்துக்குரியது. இந்துக்களின் 12ம் புராணம் வராஹ புராணம். அது இந்த அவதாரத்தின் பெரும் சிறப்பினைச் சொல்கின்றது. மூன்றாம் அவதாரமாக வந்த அந்த அவதாரமே பூமியினை மீட்டெடுத்தது. இரணியாக்ஷன் எனும் அரக்கனை அழித்து பகவான் பூமியினை மீட்டெடுத்த புராணம் அது. அர்ஜூனக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல் போல பூமாதேவிக்கும் வராக கோல பகவானுக்கும் நடந்த உரையாடலும் தத்வார்த்தமானது ஆழமான ஞானமானது. இன்று அந்த அவதாரத்தை இந்துக்கள் நோன்பிருந்து வழிபடுவார்கள். இந்துக்களின் […]

நாச்சியார் திருமொழி : 51

அன்றுல கம்மளந் தானையுகந்தடி… ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை. அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான். தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் […]

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

திருமுருகாற்றுப்படை : 09

திருமுருகாற்றுப்படை : 09 (126 முதல் 137 வரிகள்) சீரை தைஇய உடுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வால்நரை முடியினர்மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புக” இனி பாடலின் பொருளைக் காணலாம். நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்செந்தூரை அடுத்து திருஆவினன்குடி […]

வசந்த பஞ்சமி

இன்று வசந்த பஞ்சமி வசந்த காலத்தில் வரும் நவராத்திரியின் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என கொண்டாடபடும் என்றாலும் சில கணக்கீடுகள் அடிப்படையில் இந்த சியாமளா நவராத்திரியின் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை சாதாரணம் அல்ல, மிக மிக முக்கிய பண்டிகையாக தேசமெங்கும் ஒரு காலத்தில் இருந்தது, பின் பவுத்த குழப்பம் அந்நிய படையெடுப்பு என பல குழப்பங்களால் சுருங்கிவிட்டாலும் இன்று மெல்ல மெல்ல அது மீண்டெழுந்து வருகின்றது. இந்தக் கொண்டாட்டம் முன்பு பாரதம் […]

சியாமளா நவராத்திரி

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை எனக் கொண்டாடப்படுது […]

மாயம்மா

இந்துமதம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மதம். அவர்களை தெய்வமாக, அரசியாக, கவிஞர்களாக இன்னும் பலவாக உயர்த்திக் கொண்டாடிய மதம். பெண்கள் சன்னியாச கோலம் கொள்ளவும் முழு சுதந்திரம் அளித்தது. பெண்களுக்கு முழு ஆன்மீக சுதந்திரம் அளித்தமதம் இந்துமதம், அதுவே அவ்வகையில் மானுட சமூகத்துக்கே வழிகாட்டிற்று. அந்த வழியில் வந்தவள் மாயம்மா. மகா சித்திபெற்ற மாயம்மா, நாளை (10/02) அவளின் குருபூஜை நாள். பாரத தேசத்தின் மகா முக்கிய சக்தி மையம் காசி. பிரபஞ்ச பெரும் ஆற்றலும் […]

திருமுருகாற்றுப்படை : 08

(104 முதல் 125 வரையான வரிகள்) “ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபுவண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியதுஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகைநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகைஅங்குசங் கடாவ ஒருகை இருகைஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்பஒருகை மார்பொடு விளங்க ஒருகைஒருகை தாரொடு பொலிய, ஒருகைகீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப ஒருகைபாடின் படுமணி இரட்ட, ஒருகைநீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகைவானர மகளிர்க்கு வதுவை சூட்டஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்றஅந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்வயிர்எழுந் […]

திருமுருகாற்றுப்படை : 07

(90 முதல் 103 வரிகள் வரை) “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்மந்திர விதியின் மரபுளி வழாஅந்தணர் வேள்விஓர்க் கும்மமே ஒருமுகம்எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்” இனி பாடலின் பொருளைக் காணலாம். இந்த வரிகள் முருகப்பெருமானின் […]

தை அமாவாசையில் அபிராமி அந்தாதி

அபிராமி பட்டரின் பக்தி தை அமாவாசையில் ஏகப்பட்ட வழிபாடுகள், பக்தி காரியங்கள் உண்டு என்றாலும் மிக முக்கியமானதும் தவிர்கக கூடாததுமானது அபிராமி அந்தாதி பாடலை பாடுவது. காரணம் ஒரு தை அமவாசையில்தான் அபிராமி பட்டருக்கு சோதனை வந்து, அவரைக் காக்க அன்னையே வந்து தன் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி வீசி அமாவாசை அன்று பவுர்ணமி வர செய்து தன் உன்னத பக்தனான பட்டரை காப்பாற்றினாள். இந்த சம்பவம் என்றோ நடந்தது அல்ல, சுமார் 400 ஆண்டுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications