பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தை அமாவாசை

இன்று தை அமாவாசை. அமாவாசைகளில் தர்ப்பணம் என்பது இந்துக்களுக்கு முக்கியம். அதுவும் தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கான வழிபாடுகளைச் செய்யும் மகத்தான நாள். அவ்வகையில் இன்று இந்துக்களுக்கு கடமைகள் உண்டு. காலை காகத்துக்கு எள்சோறு வைத்தல், பசுவுக்கு உணவிடுதல் , மீன்களுக்கு இரையிடுதல் எனச் சில கடமைகள் கட்டாயம் உண்டு. இன்றைய நாள் கடலோரம், ஆற்றங்கரையோரம் முன்னோர் வழிபாடுகளைச் செய்து வழிபடுதல் நலம். அது மூதாதையர் ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுத்தரும். மூதாதையர் சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்வதல்ல வாழ்வு. அவர்களுக்கு […]

பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்

இந்துஸ்தானம் என்பது ரிஷிகளின் தேசம், அந்த மண்ணின் ஆயிரகணக்கான் ரிஷிகளில் வெகு சிலர் பெரும் அடையாளமாக எழுந்து நின்றார்கள், காலம் காலமாக மானுட இனம் வாழ வழிபல கண்டு சொன்னார்கள், எல்லா காலத்துக்கும் தாங்கள் காவல் நிற்கும் படி தங்கள் தவவலிமையினால் பிரபஞ்ச ரகசியங்களை மந்திரங்களாகவும் ஸ்லோகங்களாகவும் தந்தார்கள் பல இடங்களில் தங்களையே சோதனை கருவியாய் தந்து பெரும் போதனையினை தந்தார்கள், எப்படி வாழவேண்டும் என சொன்ன அவர்களே எப்படி ஒரு மனிதன் சறுக்க கூடாது என […]

திருமுருகாற்றுப்படை : 06

78 வரி முதல் 92 வரை “வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப கைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழைசேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இமைப்பத்தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே” இனி பாடலின் பொருளை காணலாம், முதலில் திருப்பரங்குன்றம் எனும் அறுபடை […]

திருமுருகாற்றுப்படை : 05

60 முதல் 77 வரிகள் வரை “இருபே ருருவின் ஒருபே ரியாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்துஎய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் .சேவடி படரும் செம்மல் உள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்பஇன்னே பெறுதிநீ முன்னிய வினையேசெருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடிவரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்பொருநர்த் தேய்த்த போரரு வாயில்திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்துமாடமலி மறுகின் கூடற் குடவயின்இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்தமுட்டாள் […]

பினாங்கு தைப்பூசம்

உலகெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசம் மலேசிய திருநாட்டின் பல பாகங்களிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பினாங்கு தீவில் நடந்த கொண்டாட்டமும் முக்கியமானது. இதே பினாங்கு தீவில்தான் பெரிய மருதுவின் மகன் துரைச்சாமியினை பிரிட்டிசார் சிறை வைத்தனர். இந்தியத் தமிழகம் சிவகங்கையில் இந்து அரசர்களாக இருந்த மருதுபாண்டியரை இந்து ஆலயத்தை இடிப்பேன் என மிரட்டி சரணடையச் செய்த பிரிட்டிசார் அவர்களை கொன்றுபோட்டு மகனை பினாங்குக்கு கடத்தினார்கள். இந்து ஆலயத்தை இடிப்போம் இந்து மதத்தினை ஒழிப்போம் என பீரங்கி துப்பாக்கி முனையில் […]

தைப் பூசம்

இந்திய தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் கொண்டாடப்படும் பண்டிகை தை பூசம். இது வான்கோள்கள் சஞ்சாரத்திலும் முக்கியமானது, இன்றைய நாளில் மகர ராசியில் சூரியனும் கடகத்தில் சந்திரனும் வரும் நாள், பவுர்ணமியும் கூடிவரும் நன்னாள். பவுர்ணமி என்றால் நிறைவு, கடக ராசி என்பது மோட்ச தத்துவம், மோட்ச கர்மாவினை உணரும் வழி அங்கே உண்டு. அதாவது இந்நாளில் ஞானம் பெருகும், தான் யார் என்பது புரியும் அதற்கான கிரகபலன்கள் அதிகம் சாதகமாக உண்டு. ஒவ்வொருவர் மனமும் […]

மாட்டுப்பொங்கல்

இன்று காளைமாடுகள் விவசாயத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. உழவு, வண்டி மாடு, ஏற்றம் இறைத்தல் என காளைகளின் எல்லா வேலைகளையும் எந்திரங்கள் பறித்துக்கொண்டன, காலமாற்றம். விவசாயம் மட்டுமல்லாது செக்கு இழுத்தல், பாரங்களை இழுத்தல் என எல்லா கனரக தொழிலிலும் காளைகள்தான் அக்காலத்தில் இருந்தன, இனி அப்படியான காலம் இல்லை. பாலுக்காகவும் உணவுக்காகவும் மட்டும் மாடுகள் பராமரிக்கப்படும் காலமிது, அந்த தேவையும் இல்லையென்றால் மாடுகளை இனி மனிதன் மறந்து விடுவான். குதிரைகளும், யானைகளும் மனிதனிடமிருந்து விலகியதைப் போல மாடுகளும் பின்னொரு காலத்தில் […]

ஜல்லிகட்டு காளை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை. அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும். களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் […]

பொங்கல் – சூரிய நாராயண ஸ்லோகங்கள்

இந்துக்கள் சூரியனுக்கான வணக்கத்தை தங்கள் முன்னோர் வகுத்த வகையில் சொல்லி போற்றுகின்றார்கள் “ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹபாஸ்கராய நமஹ! தினகராய நமஹதிரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹதிவாகராய நமஹ! லோகமித்ராய நமஹஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹவரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹசூர்யநாராயண சுவமியே நமஹ” என வணங்குகின்றார்கள் “சீலமாய் வாழ சீரருள் புரியும்ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுந்தரா போற்றிவீரியா போற்றி வினைகள் களைவாய்” என வணங்குகின்றார்கள் “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!அருள் […]

பொங்கல்

வேதங்களில் சூரியன் சங்க காலத்திலோ இல்லை பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை, 18ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை. தைமாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது, அதனால் இது அறுவடை விழா என சொல்லிவிடுவதிலும் அர்த்தமல்ல‌. உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்துமதம் அவரை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications