திருவிளையாடல் புராணம் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம்.
திருவிளையாடல் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம். சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து கீரனை எரிக்க அந்த வெம்மை தாளாமல் நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்பதோடு அந்தத் திருவிளையாடலின் அதாவது தருகிக்குப் பொற்கிழி கொடுத்த படலம் முடியும். அதன் தொடர்ச்சித்தான் இந்தத் திருவிளையாடல். பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த கீரன் தவித்துப் போய்க்கிடந்தார். அவரால் வெளிவரமுடியவில்லை. குளத்தினைக் கடக்க எழுந்தாலே பெரும் வெப்பம் அவரை வாட்டத் தொடங்கிற்று, இதனால் நீரிலே அமிழ்ந்து கிடந்தார், அவருக்குத் […]