பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பகவத் கீதை 6ம் அத்தியாயம்

அர்ஜூனனுக்கு மேற்கொண்டு யோக சந்நியாச தன்மையினை போதிக்கும் இந்த ஆறாம் அத்தியாயமே “ஆத்மஸம்யம யோகம்” கண்ணன் சொல்கின்றான், “அர்ஜூனா சந்நியாஸி என்பவன் யார்? எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே ஸந்நியாசி. அவனே யோகி . யாகத்தில் அக்கினியைப் பற்ற வைக்காததாலோ, கர்மங்களைத் துறந்ததாலும் ஒருவன் ச‌ந்நியாசி ஆக மாட்டான். அர்ஜூனா., ஸந்நியாசமென்று எதைச் சொல்லுகிறார்களோ அதையே யோகமென்று அறிவாயாக.கர்ம பலனைப் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆகமாட்டான். யோகநிலையில் முன்னேற […]

பகவத் கீதை- 5

அர்ஜூனக்கு கர்ம யோகமும் ஞான யோகமும் விளங்கிற்று, அவனை பொறுத்தவரை கடமையினை செவ்வனே செய்து கடவுளை காண்பது எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என நினைத்து அமைதி கொள்வது கர்மயோகம், கடவுளை சரணைந்து அவரிலே இளைவது ஞான சந்நியாக யோகம் இதில் குழம்பிய அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா, கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். மேலும் கர்ம யோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இவ்விரண்டிலும் எது உயர்ந்ததோ, அந்த ஒன்றைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முடிவு செய்து எனக்குச் சொல், நான் […]

பகவத் கீதை 4ம் அத்தியாயம்

கர்மயோகத்தை கேட்ட அர்ஜூனன் , கண்ணன் தன்னை போரில் ஈடுபட மட்டும் தூண்டுவதாக எண்ணி குழம்பியிருந்தான், இதை அறிந்த கண்ணன் 4ம் அத்தியாயத்தில் தொடர்கின்றான் “அர்ஜூனா இந்த‌ யோகத்தை நான் சூரியனுக்குச் சொன்னேன், சூரியன் மனுவிற்குச் சொன்னான் ,மனு இக்ஷ்வாகுவிற்குச் சொன்னான், இந்த யோகம் பரம்பரை பரம்பரையாக சொல்லபட்டது, அரசர்களும் ரிஷிகளும அதை அறிந்திருந்தார்கள், பின் இந்த யோகம் வெகு காலமாக மறைந்து போய் விட்டது. நீ என் சீடனும் என்னை சரணடைந்தவனுமாய் இருகின்றாய் அதனால் இந்த […]

சித்திரை விஷூ வாழ்த்துக்கள்.

தமிழர் புத்தாண்டு அதுவுமாக தமிழருக்கு கோவிலுக்கு செல்ல வழியில்லை, எல்லா ஆலயங்களும் பூட்டியிருக்கின்றன‌ அதனால் என்ன? மரத்தடி பிள்ளையார் முதல் கல்லில் இருக்கும் கருப்பசாமி வரை ஏன் வீதியெல்லாம் ஆலயங்களை அமைத்தார்கள் என்பதன் பொருளை இந்துக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர் ஆலயம் பூட்டியே இருக்கட்டும், அட வீதியினை விட்டு வெளியே வர வேண்டாம், கூடி பிரார்த்திக்கும் அவசியமில்லை. மரத்தடி போதும் அதில் இருக்கும் பிள்ளையார் போதும் , கல் போதும். கையில் இருக்கும் சூடம் போதும் அதுவுமில்லை என்றால் […]

பகவத் கீதை-3

கண்ணன் யோகியாக மாறி கடமையினை விருப்பு வெறுப்பின்றி செய் என சொன்னதும் அர்ஜூனன் மனதை மறுபடி மயக்கமேகம் மூடுகின்றது, அவன் தடுமாறி கேட்கின்றான், “கண்ணா, பெரும் யோகியாக இருக்கும் ஒருவனால் இந்த போர் எனும் படுபயங்கர கர்மத்தை செய்யமுடியுமா? நீ அதற்கு என்னை தூண்டலாமா?” “அர்ஜூனா யோகங்கள் பலவகை, நான் உனக்கு கர்ம யோகத்தை பற்றி சொல்கின்றேன். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஏற்றுகொண்ட கடமையே கர்மம், அவன் அதற்காகவே படைக்கபட்டிருகின்றான். அதை அவன் ஒரு யோகிக்குறிய மனநிலையில் […]

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம்.

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம். ஸாங்கியம் என்றால் இல்லாத ஒன்றுக்கும் இருக்கும் ஒன்றுக்குமான தொடர்பினை சொல்லும் தத்துவம் குழம்பி தவிக்கும் அர்ஜூனனிடம் மெல்ல கேள்விகளை எழுப்புகின்றான் கண்ணன் “அர்ஜூனா இம்மாதிரி குழப்பங்கள் உனக்கு வந்ததே இல்லையே, இது உனக்கு சிறப்பை தராது, உயர்ந்த லட்சியத்தில் உள்ளவனுக்கு இக்குழப்பம் வீழ்ச்சியினை கொடுக்கும், இந்த பலவீனத்தை தள்ளிவிட்டு எழு” அர்ஜூனன் குழப்பத்தின் உச்சியில் சொல்கின்றான் “அவர்கள் அயோக்கியராயினும் பெரியவர்கள், அவர்கள் ரத்தத்தில் நான் வென்று ஆகபோவது ஒன்றுமில்லை, என்னால் […]

கீதையின் முதல் அத்தியாயமே எவ்வளவு சரியாய் இருக்கின்றது பார்த்தீர்களா?

பாரதத்தின் மிக பெரும் ஞான பொக்கிஷம் கீதை, அதை கொண்டாடா நாடு இல்லை, அதன் புகழ் பாடாத விஞ்ஞானியும் மேதைகளுமில்லை படிக்கும் ஒவ்வொருவனும் எந்த மனநிலையில் இருந்து படிப்பானோ அவனுக்குரிய தெளிவினை கீதை வழங்கும், அது விஞ்ஞானியோ நிர்வாகியோ பாமரனோ யாராக இருந்தாலும் சரி அது யாரையெல்லாமோ எட்டி எங்கெல்லாமோ ஒளி வீசியது, அணு விஞ்ஞானி முதல் மகாத்மா காந்தி வரை அதனால் தெளிவு பெற்றார்கள் அந்த ஞான தொகுப்பின் தன்மை அப்படியானது , ‍ இந்தியாவின் […]

பெரிய வியாழன் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் யூதாசும் நினைவுக்கு வருவான்.

அந்த யூதாஸை துரோகி என சொல்வதை எல்லாம் நாம் ஆதரிப்பதில்லை, சீசரை கொன்ற புரூட்டஸுக்கும் கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பனுக்கும் உள்நோக்கம் கெடுதலாய் இருந்தது, தெரிந்தே கொன்றார்கள் ஆனால் யூதாஸ் அப்பாவி, தெரியாமல் சிக்கி கொண்டவன், அந்த வலி காரணமாகவே அவன் செத்தான். தான் ஏமாற்றபட்டதாலே தற்கொலை செய்தான் இல்லையேல் ஒரு வட்டிகடை முதலாளியாக வாழ்ந்திருப்பான் இயேசுவின் காலம் அவர்கள் ரோமருக்கு அடிமையாய் இருந்த காலம், இன்று பாலஸ்தீனில் இருக்கும் போராளி குழுக்கள் போல அன்றும் ஏராளமான […]

காக்கையினை நம் முன்னோர்கள் என சொல்கின்றது இந்துமதம்.

இப்பொழுதெல்லாம் காலையிலே வாசலுக்கு வந்துவிடுகின்றது காகங்கள், இரு வாரங்களில் அதுவும் நமக்கு நட்பாகிவிட்டது நானும் அதுவும் ஒரே நிறம் என்பதும் காரணமாக இருக்கலாம்.. காகம் மானிட வாழ்வில் அக்காலம் தொட்டே வரும் பறவை, சாணக்கியன் வள்ளுவன் என எல்லா மேதைகளும் கவனித்த பறவை அது சாணக்கியன் சொல்வான் “பறவைகளில் தந்திர சாலி காகம்மிருகக்ங்களில் தந்திர சாலி நரிபெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி (இதை வேலைக்காரி என்றும் சொல்லலாம்)” அது தந்திரசாலி மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. பறவைகளில் […]

பங்குனி உத்திர திருவிழா!

updated on March 24, 2024 பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது. மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும் சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications