பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்துல் கலாம் என்னதான் செய்தார்?

அப்துல் கலாமினை விமர்சித்து சில திராவிட, தமிழ் குஞ்சுகள் பேசும் கொடுமைகளை என்ன சொல்லி அழுவது என்றே தெரியவில்லை.   1985களில் பள்ளி மாணவனாக இருக்கும்பொழுதே பல ஆசிரியர்கள் அப்துல் கலாமை மேற்கோள்காட்டுவார்கள், அந்த ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லிகாட்டாவிட்டால் கலாமை பற்றி 2002ல் தான் எமக்கெல்லாம் தெரியவந்திருக்கும். பிரித்வி, அக்னி,நாக், திரிசூல் என சூப்பர்ஹிட் ஏவுகனைகளாக வந்து குவிய குவிய அவர் பிரபலமானார். உச்சமாக காளி எனும் லேசர் கதிரில் எதிரி விமானங்களை சிதறடிக்கும் நுட்பத்தில் இந்தியா […]

நமது தலைமுறைக்கு அப்துல் கலாம் …

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாவே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, […]

காமராஜர் புன்னகைத்துகொண்டே இருப்பார்

இப்பொழுதும் இனிவரப்போகும் தமிழக மக்களுக்கு அவன் ஒரு அதிசயம், அப்படியும் ஒரு தலைவன் இருந்தான் என நம்ப மிகவும் கஷ்டம்தான், நம்ப முடியாத விஷயம்தான் ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், அவன் ஆண்ட காலத்தில் தமிழகத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்திருக்கின்றது கண்ணதாசன் வரிகளில் சொன்னால் “காலத்தின் கடைசி கருணை அவன்” மனிதநேயமிக்க, ஏங்கி நின்ற எந்த சாதி குழந்தையானாலும் அந்த இந்திய குழந்தைக்காக கண்கலங்கிய, தமிழக குழந்தை கல்விக்காக பிச்சை எடுத்த, அந்த பெருமகன் காமராஜரின் […]

கணித மேதை ராமானுஜம்

இந்திய கணித அறிவின் அடையாளமாக விளங்கியர் ராமானுஜம், அவரின் வாழ்க்கை படத்தினை இப்பொழுதுதான் பார்க்க வாய்ப்பு வந்தது மிக அழகாக ராமானுஜனின் வாழ்க்கையினை சொல்லியிருக்கின்றார்கள், பெரும் அறிவாளியான அவன் வறுமையில் வாடியது, வெள்ளையர்கள் லண்டனுக்கு அழைத்து அவனை பட்டை தீட்டியது, பெரும் கடவுள் நம்பிக்கை கொண்ட ராமானுஜம் இறுதிவரை அசைவம் தொடாமல் நோயுற்று செத்தது வரை அட்டகாசமாக செதுக்கியிருக்கின்றார்கள் எப்படிபட்ட மேதை ராமானுஜம், இன்றைய கணிப்பொறி காலத்திலும் அவன் கணக்கு இல்லாத விஞ்ஞான வசதியில்ல்லை, இன்றைக்கும் அவன் […]

சுவாமி விவேகானந்தர்

இந்தியா ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர். சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார். தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் […]

மரணமில்லா கவிஞனின் பிறந்தநாள் (ஜூன் 24)

மரணமில்லா கவிஞனின் பிறந்தநாள் (ஜூன் 24) வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் […]

ஒரு விபரீத செய்தி சே குவாரே பற்றி ….

ஒரு விபரீத செய்தி சே குவாரே பற்றி சுற்றி வருகின்றது, அதாவது அவர் ஒரு வெறியர், போதை பிரியர், பெண்களை கண்டால் விடவே மாட்டார் போன்ற பெரும் புரட்டு செய்திகள் இவை எல்லாம் எங்கிருந்து கிளம்புகின்றது என்றால் சாட்சாத் அமெரிக்க சி.ஐ.ஏயிடமிருந்து தனக்கு பிடிக்காதவன் ஆண்டவனே ஆனாலும் அவர்கள் அள்ளிவிடும் கதைகள் அப்படி, ஒரு மனிதன் எதிரி என தீர்மானித்துவிட்டால் முதலில் அவனின் இமேயினைத்தான் கொல்வார்கள் உலகம் முழுக்க உள்ள அவர்களின் கைப்பாவை ஊடகங்கள் அவற்றை பெரிதாக்கும், […]

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 03

சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், […]

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 02

அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை விரும்பாமல் தலைமறைவானார், இந்நிலையில்தான் […]

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 01

பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications