பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவியின் சோகம் …. வருத்ததில் ரசிகர்கள்…….

தலைவியின் ரசிக கண்மணிகள் எல்லாம் மிகுந்த சோகமும் துயரமும் வருத்தமும் தரும் விஷயத்தை தலைவி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் உலக பத்திரிகைகள் எல்லாம் இதனை பெரும் செய்தியினை துயரமாக பதிந்து வருகின்றன‌ தலைவியின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் உடல்நலகுறைவால் அவதிபடுகின்றார்களாம், இது தலைவியின் மிக பெரும் துயரத்திற்கு காரணமாயிற்று இத்தகவலை கேட்டவுடன் சங்க உறுப்பினர்கள் மிகுந்த துயர் அடைந்து விட்டார்கள், கண்ணீர் கோலம் பூண்டுவிட்டார்கள். உலகெமெல்லாம் தலைவியின் தொண்டர்கள் விரதம், பிரார்த்தனை , நேர்ச்சை கடன் […]

தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும்

இந்த கமலஹாசன் என்பவர் கலைஞரிடம் வாழ்த்துபெற்றதை வரவேற்கலாம் ஆனால் ரஜினி, விஜயகாந்த் என தொடர்ந்து யாரிடமெல்லாமோ வாழ்த்து பெறுகின்றாராம் தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும் என சங்கம் எச்சரிக்கின்றது தலைவியினை விட மிக சிறந்த அரசியல்வாதி யாருண்டு? ரஜினிக்கும் கமலுக்கும் முன்பே அரசியல் களம் கண்ட அரசியல்வாதி அவர்தான் ஆக கமலஹாசன் குஷ்புவிடம் ஆசி வாங்காமல் செல்வது அரசியல் நாகரிகமாகாது, அறம் ஆகாது, அரசியல் தர்மம் ஆகாது என சங்கம் மிக கடுமையான கருத்துக்களை […]

நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து !!!

கரூரில் தங்க தலைவிக்கு பெரும் கூட்டம் சேர்ந்தது என்ற மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியினையும், அங்கு தலைவி பக்கோடா கொடுத்து மோடியினை தில்லாக கலைத்திருக்கின்றார் எனும் அதிரடி செய்தியினையும் கேட்டு சங்கம் பெரு மகிழ்வு கொள்கின்றது உலகிற்கெல்லாம் இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து சொல்வதில் சங்கம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது

இன்று திருச்சிக்கு வருகின்றார் தங்க தலைவி

செயலாளர் Periya Samy கவனத்திற்கு இன்று திருச்சிக்கு வருகின்றாராம் தங்க தலைவி, முடிந்தால் அவரை சந்தித்து கட்சியின் கொள்கை, கோட்பாடு, அதன் அயரா உழைப்பு, மிக பெரிய நோக்கம், சிந்தனை , தலைவிக்காக சங்கம் நடத்தும் போராட்டம் இவற்றை பற்றி தெரியபடுத்தவும் ஒரு வேளை தலைவி மிக பரபரப்பாக இருந்து சந்திக்க முடியாவிட்டால் பரவாயில்லை, அதற்காக தீகுளிக்கும் முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம். இன்னொருநாள் பெரும் படையுடன் சென்று நீதி கேட்டுவிடலாம் திருச்சி வரும் எங்கள் தலைவிக்கு, “இரண்டாம் மங்கம்மாளுக்கு” […]

ஆடிய ஆட்டம் என்ன ….

சங்கத்திற்கு பெரும் கோபமூட்டும் விஷயத்தை சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அதாவது எங்கள் தங்க தலைவி எங்கோ ஒரு பார்ட்டியில் நடனமாடினாராம், அது வீடியோவாக வந்துவிட்டதாம். உடனே பார் உன் தலைவியின் ஆட்டத்தை என வீடியோ அனுப்பிவிட்டார்களாம், அவர்களுக்கு அதிலொரு சந்தோஷம். அட பதர்களா? எம் தலைவி ஆடாத நடனமா? எவ்வளவு அழகான நடனங்களை எல்லாம் கொடுத்தவர் இதிலென்ன அதிசயம் கண்டீர்கள்? இன்றுவரை அவரின் நடனகாட்சிகள் வராத டிவி உண்டா? இன்னொருவர் அப்படி ஆடியது உண்டா? பத்மா சுப்பிரமணியத்தின் நடனம் […]

பத்தி எரியுது பாருங்கடா….

“இந்த புள்ள வரக்கூடாதுண்ணு கட்சி அலுவலகத்தை பூட்டினால் ஆண்டவனுக்கே பொறுக்குமா? தமிழகம் முழுக்க கோயில்கள் எரிய தொடங்கியது இந்த அநியாயத்தை கண்டபின்புதான் அந்த நெல்லை காங்கிரஸ்கார பயல்களுக்கு தகுந்த தண்டனை கொடுப்பதே ஒரே பரிகாரம்”.”

இதே கண்கள்…

“ஓரு கண் உயிரை கொல்லும், ஒரு கண் உயிரை கொடுக்கும்” என வள்ளுவன் சொன்னான். “மானினும் மருண்ட கண்கள் தேனினும் இனிய கண்கள்..” என்றான் கம்பன் “விருந்தும் மருந்தும் உன் கண்களே..” என கவியரசர் சொன்னார். அவை சாட்சாத் இந்த கண்கள்தான், இதே கண்கள்.

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்ததுதான் என்ன?

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்த விஷயங்களை சங்கம் சும்மா விடுமா? தீவிர புலனாய்வில் சங்கத்தின் உளவுபடை இறங்கியது, அது கொடுத்த தகவல் அறிக்கை இப்படி சொல்கின்றது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையினை விட குழப்பங்கள் அதிகமுள்ள கட்சி காங்கிரஸ் என்பது உலகறிந்தது. கோஷ்டிக்குள்ளும் கோஷ்டிகள் இருக்கின்றது என்பது யாரும் அறியாதது அதாகபட்டது நெல்லை பகுதி பொறுப்பில் இருப்பவர்கள் சங்கரபாண்டியன் எனும் கோஷ்டியினராம். இவர்கள் பெயரை பார்த்தாலே சில விஷயங்கள் உங்களுக்கு புரியலாம் ஆம், இவர்கள் சில […]

தங்க தலைவிக்கு பெரும் சோகம்

தங்க தலைவிக்கு பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது, யார் கண் பட்டதோ தெரியவில்லை அவரின் மனம் துயரில் நிறைந்துவிட்டது ஆம் தலைவியின் வளர்ப்புநாயான Chilli இறந்துவிட்டது. தலைவி அமைச்சராக வரும்பொழுது வாலாட்டி வரவேற்க காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை தலைவியின் துயரில் சங்கம் பங்கெடுக்கின்றது, அந்த ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றது, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது அருமை தலைவியின் வீட்டை காத்த அந்த காவல்கார ஜீவனுக்கு துக்கம் செலுத்தும் விதமாக சங்க நடவடிக்கைகள் ரத்து செய்யபடுகின்றன‌ சங்கத்து […]