பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக அரிதான பூங்குருவி  இது

குருவிகளில் பல வகை உண்டு. தேன் சிட்டு, கரி குருவி, இரட்டை வால் குருவி, சிட்டு குருவி என ஏகபட்ட வகை உண்டு ஆனால் இந்த குருவி மிக அரிதானது, உலகில் ஒரே ஒரு முறை மட்டும் வரும் மிக அரிதான பூங்குருவி  இது. அவ்வகையில் தமிழர் அனைவரும் மகா பாக்கியசாலிகள்.  

பழைய ஏற்பாடு மோசடி எனும் முடிவுக்கு சங்கம் வந்தாயிற்று

“நீ ஏன் பைபிளை நம்புவதில்லை, குறிப்பாக பழைய ஏற்பாட்டை ஏன் யூதர்களின் மோசடி என்கின்றாய், ஜெருசலேம் விவகாரமா?” என பலர் கேட்கின்றனர் இன்று மேற்காசியா ரத்த களறியில் மிதப்பதற்கும், உலகெல்லாம் இஸ்ரேலின் நரிதந்திரம் , நன்றிகெட்டதனம் தெரியாமல் அனுதாபபடுவதற்கும் அந்த பழைய ஏற்பாடுதான் காரணம் என்றாலும் நமது கருத்து வேறு அதாகபட்டது கடவுள் 5 நாளில் உலகையும் சகல ஜீவராசிகளையும் படைத்துவிட்டு 6ம் நாளில் மனிதரை படைத்தாராம், 7ம் நாள் ஓய்வில் இருந்தாராம் முதலில் நம்பிகொண்டுதான் இருந்தேன், […]

நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி

நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி இதுதான், இதனை அறிமுகபடுத்துவதில் சங்கம் பெருமை கொள்கின்றது நீலம் தலைவியின் பெருமை வானத்தை போன்றது என்றும், வெண்மை அவரின் தூய்மையான மனம் என்றும், சிகப்பு அவர் மிக கடுமையான துணிச்சலான போராளி என்றும் என்பதையும் குறிக்கின்றது நாளைய தமிழகத்தையும் அதன் பின் அகிலத்தையும் ஆளபோகும் கொடி இதுதான் பிரெஞ்ச் புரட்சியின் பொழுது இந்த கொடி தான் இருந்தது, அடுத்து தமிழக புரட்சிக்கு அது தலைவியின் படத்தோடு வந்தாயிற்று […]

இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்?

சங்கமும் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்றொரு கட்சியினை தொடங்கலாம் என்றிருந்தது பெயரை பதிவு செய்யாமல் விட்டது எவ்வளவு பெரும் தவறு என புரிகின்றது, அதற்குள் முந்தி கொண்டார்கள் எனினும் இந்த அம்மாவினை கட்சியில் சேர்த்துவிட்டு தினகரன் கட்சி தொடங்கி இருந்தால் நாளைக்கே முதல்வர் ஆகியிருக்கலாம்  இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்? விரைவில் “நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” சங்கத்தால் தொடங்க படும்.

நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?

யாரோ மாரிதாஸாம் “நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?” என புத்தகம் எழுதி ரஜினியிடம் கொடுத்தாராம் , இப்படி பல செய்திகள் வருகின்றன. உடனே அந்த கோஷ்டி மோடியின் பெருமை பாரீர் என குதிக்கின்றன‌ இந்த புத்தகத்தை எழுத வேண்டியது அம்பானி , மல்லையா இன்னபிற தொழிலதிபர்கள் எழுதவேண்டிய தேவையும், தகுதியும் அவர்களுக்குத்தான் இருக்கின்றது, பின் ஏன் மாரிதாஸ் எழுதினார். ஆக யாரும் எதுவும் எழுதலாம் போல‌ இனி சங்கம் பொறுக்குமா? “நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?” என்ற […]

தாஜ்மகால் வரிசையில் தலைவி

நிலாவினை எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அழகு, தாஜ்மஹாலை எந்த கோணத்தில் நோக்கினாலும் அழகு அந்த நிலா, தாஜ்மகால் வரிசையில் தலைவி தோகை விரித்த மயிலாக அவர் நிற்கும் அழகு கண் கொள்ளா காட்சி. மயில் தோகை விரித்தால் மழை வரவேண்டும் அல்லவா? வங்ககடலில் புயல் ஏன் உருவானது என இப்பொழுது புரிகின்றதா? இயற்கையினையே தன் கட்டுபாட்டில் இயங்க வைப்பவர் எங்கள் தலைவி. “தேவதை கூந்தல் கருநிற நாகம்,  தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்” (அடேய் Babu Rao , […]

தங்கமே நீ வாழ்க, மங்களமே நீ வாழ்க‌

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது. படுசோம்பேறியும், சர்ச் பக்கம் செல்லாதவனுமான நானே, அதிகாலையில் சர்ச்சுக்கு சென்று அவருக்காக‌ பிரார்த்தனை செய்தாகிவிட்டது, இதற்காகவே தெய்வம் அவரை வாழ்த்தும் அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக […]

ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி

மயிலும் அன்னபறவையும் சந்தித்த மகா அற்புதமான தருணத்தை நினைவு கூர்ந்து ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி சங்கத்து சார்பாக தலைவியின் துயரில் பங்கெடுத்து , தொடங்கிவிட்ட இறுதி ஊர்வலத்தில் ஶ்ரீதேவிக்கு அஞ்சலியினை தெரிவிக்கின்றோம் இன்னும் ஶ்ரீதேவி உடல் தகனம் கூட நடைபெறவில்லை அதற்குள் ஶ்ரீதேவி நாடார் சாதியா? பிராமணரா? இல்லை தாய்வழி போல இல்லை தெலுங்கரா எனும் பெரும் ஆராய்ச்சிக்குள் பலர் சென்றாயிற்று. இங்கு நிற்கின்றான் தமிழன். அப்படியே துபாய் மருத்துவமனையில் புகுந்து ஶ்ரீதேவி பிளட் […]

தலைவி குஷ்பூ தமிழகத்தின் விடிவெள்ளி

இந்த தமிழ்சமூகம் எதையுமே தாமதமாகவே புரிந்துகொள்ளும் போல, நாம் முன்பே சொன்னால் புரிந்துகொள்ளாமல் பரிகசித்த விஷயத்தை இப்பொழுது ஆம் உண்மைதான் என ஒப்புகொள்கின்றது, விரைவில் தமிழகம் நம் கருத்தை ஏற்றுகொண்டு திரளலாம் விஷயம் இதுதான், இந்த கமலஹாசன் கட்சி தொடங்கினார் அல்லவா? அதில் ஸ்ரிப்பிரியா என்பவரை மேடையில் அமர வைத்ததில் தமிழ்சமூகம் சிந்தித்துவிட்டது இவருக்கெல்லாம் ஏன் அரசியல்? குஷ்பு இவரைவிட எவ்வளவு தைரியமானவர், எவ்வளவு எதிர்ப்புகளை மகா துணிச்சலாக எதிர்கொண்டு இன்று பெரும் இடத்தில் அமர்ந்திருக்கின்றார் என பாராட்டுகின்றார்கள் […]

தலைவிக்காக பிரார்த்தனை….

ஜெயா இருந்தவரை சில கேரள மாந்திரீகர்களை , ஜோதிடர்களை கேட்காமல் ஏதும் செய்ததில்லை, பல நேரங்களில் அவர்கள் கணிப்பு சரியானது. சில இடங்களின் அவர்கள் உண்மையினை மறைத்திருக்கலாம், “அம்மா நீங்கள் பிரதமர் ஆக முடியாது” என்றாலோ “அப்பல்லோவில் அனாதையாக மரிப்பீர்கள்” என சொல்லியிருந்தாலோ, அமைதிபடை சத்தியராஜ் ஜோசியரை சுட்டது போல சுட்டிருப்பார்கள் அதனால் ஜோதிடர்கள் உண்மையினை மறைத்திருக்கலம், ஆனால் கணித்திருப்பார்கள் இப்பொழுது ஏன் ஜோதிடர்கள் நினைவு வருகிறதென்றால், இந்நினைவு நீதிபதி ஆருமுகசாமிக்கு வந்திருக்க வேண்டும், மருத்துவத்தை விட […]