எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை
எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை, கற்பனை கதைகளை படைப்பதில் இவர்கள் கல்கியையும், வர்ணிப்பதில் கம்பனையும் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றார்கள். அதாவது காமராஜர் குடிநீர்டேங்க் கட்ட சென்றாராம், இன்சினியர் இது டெக்கினிக்கலாக முடியாது என மல்லாக்க படுத்துவிட்டாரம், கோபமடைந்த காமராசர் “முடியாதுண்ணு சொல்லவா நீ படிச்ச” என சொல்லி நெஞ்சிலே மிதிச்சாராம், 4 மிதியாம். உடனே அந்த இஞ்சினியர் அண்ணாமலை ரஜினியாக எழும்பி, லிங்கா ரஜினியாக கட்டி முடித்தாராம், உடனே பாகுபலி ரம்யாகிருஷ்ணனாக காமராஜர் வெற்றிபுன்னகை புரிந்தாராம். இதுவரை சிக்கல் இல்லை, […]