பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார் இந்நாட்டின் மிக பெரும் தடவியல் மேதை அவர், இந்நாட்டிற்கு தன் பணியால் பெரும் தொண்டு செய்தவர் உலகமே இதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லபட்ட ராஜிவ் கொலை வழக்கின் தடயவியல் சோதனையினை இவர்தான் செய்தார் அவர் ஒரு தமிழர், நாகபட்டினத்துக்காரர். ராஜிவின் கொலையினை செய்தது வெளிநாட்டு தமிழ் தீவிரவாதிகளாக இருந்தாலும் மிக நுட்பமாய் விசார்த்து உண்மையினை கொண்டுவந்தது கார்த்திகேயம், சந்திரசேகர் போன்ற இந்திய தமிழர்கள் Jebamani Mohanraj போன்ற காவல்துறை தமிழர்கள் […]

காலை மலர்கள் …

   பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேடானது, இதனால் தமிழக அமைதி கெடும் இந்த நிகழ்ச்சியினை தடை செய்து கமலஹாசனையும் கைது செய்யவேண்டும் : இந்து மக்கள் கட்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் “கமிஷணரய்யா நல்லாயிருப்பிய,  கமலஹாசனால பிரச்சினை இல்ல அவர விட்டுட்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பிடிச்சிட்டு போங்க‌ அப்படியே இந்த எச்.ராசா , அர்ஜூன் சம்பத் போன்றவர்களையும் தடை செஞ்சு பிடிச்சு உள்ளே போட்டா இன்னும் தமிழகம் அமைதியாக இருக்கும் இந்த பிராது […]

இதற்கா உயிர்நீத்தான் மாவீரன் அழகுமுத்துகோன்

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின், 307வது பிறந்த தினம் கொண்டாடபடுவதையொட்டி தூத்துகுடியில் 144 தடை உத்தரவு எப்படிபட்ட கொடுமை பார்த்தீர்களா? ஒரு சுதந்திரபோராட்ட வீரனின் பிறந்த நாளை, இச்சுதந்திர நாட்டில், சுதந்திரமாக கொண்டாட முடியாமல் சாதிவெறி ஆட்டி படைக்கின்றது அந்நியருக்கு எதிராய் மகா வீரத்துடன் போரடிய மாவீரனை ஏதோ வெங்கடேஷ பண்ணையார், பசுபதி பாண்டியன் அளவில் கொண்டு நிறுத்தியிருக்கின்றது சாதி வெறி இது வெட்கபடவேண்டிய விஷயம், இதற்கா உயிர்நீத்தான் அந்த மாவீரன்? 2006ம் ஆண்டு இதே நாளில் […]

உங்க நாட்டுல மதகுரு எல்லாம் எப்படீங்க, மோடிசார்?

மோடி சார், எங்க நாட்டு உச்ச‌ மடாதிபதிகளை பார்த்தீர்களா? இந்த அரேபியாவின் அமைதியினை முடிவு செய்யும் வல்லமை படைத்தவர்கள், இஸ்ரேலை ஆட்டி வைப்பது இவர்கள்தான், இவர்கள் தான் இஸ்ரேலின் உச்ச அதிகாரம் ஆனால் இங்கு தாடி எல்லாம் வளர்க்கும் மிக இறுக்கமான இந்த மதகுரு கூட தொப்பி எல்லாம் ஸ்டைலா வச்சி, கோட் சூட் போட்டு நாகரீகமா இருக்காங்க, அப்பதான் நாட்டுக்கு ஒரு மதிப்பு உங்க நாட்டுல மதகுரு எல்லாம் எப்படீங்க மோடிசார்? தம்பி உங்க நாட்டுல இப்படி, […]

ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு

கடும் ஆத்திகனுக்கும் இந்த முகத்தை கண்டால் கடவுள் நம்பிக்கை வரும் ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு,   மீத்தேன் வாயு எடுப்பதால் மட்டும்தான் கடல் நீர் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ளே வரும் என்றில்லை கட்டுபாடு இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதாலும், நீர்மட்டம் வற்றி கடல்நீர் உள்ளே வரும், சில இடங்களில் வந்துகொண்டே இருக்கின்றது ஆக மீத்தேனால் மட்டும் நிலத்தடி நீருக்கு ஆபத்தல்ல, கட்டுபாடற்ற ஆழ்குழாய் கிணறுகளும் ஆபத்தானவை.. ரஜினிகாந்த் தேவையில்லை நானே அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் […]

விம்பிள்டனில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது : கீ.வீரமணி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் அதில் அக்கால‌ அமிர்தராஜ் போன்ற சில‌ தமிழர்கள் முன்பு பங்கெடுத்தார்கள், அந்த வரிசையில் கலந்து கொள்ள போகின்றார் ஜீவன் நெடுஞ்செழியன் திராவிட ஆட்சி என்ன செய்தது என கேட்பவர்கள் எல்லாம் காதை கொண்டுவாருங்கள் திருகி சொல்கின்றோம், இதோ ஒரு தமிழன் விம்பிள்டன் விளையாடும் அளவு உருவாக்கிவிட்டார்கள் இந்த திராவிட தமிழன் எப்படி விம்பிள்டன் விளையாட செல்கின்றான் என்றால், இவரின் தாத்தா நெடுஞ்செழியன் ஊட்டிய திராவிட உணர்வு அப்படி ஆம் […]

பெண்கள் உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தியது இன்னும் பிற

பெண்கள் உலகக்கோப்பை: இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி, இந்திய ஆண்கள் அணியுடன் மோத சவால் விடும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கின்றது சொல்லமுடியாது அப்படி ஒரு போட்டி நடந்து கெஸ்ட் பிளேயர்கள் என இந்த அனுஷ்கா சர்மா, கிம் சர்மா, நம்ம ஊர் லஷ்மி ராய் எல்லாம் பந்துவீசினால் கோலி முதல் டோனி வரை எளிதில் வீழ்வார்கள். எதற்கும் கோஹ்லி, டோனி எல்லாம் சவால் விடாமல் கொஞ்சம் கவனமாக இருப்பது […]

அத்திமரம் அபசகுணமா?

அத்திமரங்கள் அபசகுணமாம், அதனால் உபி முதல்வர் ஹிட்லர் பாணியில் மொத்தமாக அழிக்க சொல்லிவிட்டாராம் இதன் பிண்ணணி வேறுமாதிரியானது, எல்லா மதங்களிலும் அத்திமரம் அடையாளம் உண்டெனினும் கிறிஸ்தவ பைபிளிலும், இஸ்லாமிய விஷயங்களிலும் அத்திமரம் அடிக்கடி வரும் இவர்களுக்கு அந்த பிண்ணணி கொண்ட அத்திமரம் அபசகுணமாக இருப்பதால் ஆச்சரியமில்லை வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இயேசுநாதர் பைபிளில் ஒரு இடத்தில் அத்திமரத்தில் பழம் தேடினார், அது கிடைக்கவில்லை என்பதால் ஒழிந்து போ என சபித்தார், இந்த யோகி அப்படி […]

விடுமுறையில் மலாக்கா பயணம்…

விடுமுறையில் எங்காவது சென்றே தீரவேண்டும் என்பது இந்த தேசவிதி, அல்லாவிட்டால் தமிழகம் நாஞ்சில் சம்பத்தினை பார்ப்பது போல ஒரு மாதிரி பார்ப்பார்கள், ஒரு மாதிரி துக்கம் விசாரிப்பார்கள், நாம் மாறுவேடத்தில் அலைந்தோ அல்லது நோவா கப்பலில் அடைந்துகிடந்தது போல, சகல மளிகைகளுடன் கதவெல்லாம் மூடி இருந்து சில நாள் சமாளிக்கலாம. ஆனால் குழந்தைகள்? பள்ளிகூடம் சென்று மற்ற குழந்தைகள் கதையினை கேட்டால் ஏங்கிவிடும், அதனாலாவது எங்காவது கூட்டி செல்ல வேண்டும் அப்படி இம்முறை மலாக்கா எனும் தென்மேற்கு […]

நயன் தாரா புகழ்பாடவே அவதரித்த இருவரில் ஒருவரான பாபுராவ் இன்று பிறந்த நாள்.

நயன் தாரா புகழ்பாடவே அவதரித்த இருவரில் ஒருவரான Babu Raoக்கு இன்று பிறந்த நாள். மிக சுவாரஸ்யமான நண்பர் அவர், நாட்டு பற்றும், சமுதாய நோக்கும் கொண்ட நண்பர்களில் அவரும் ஒருவர் அங்கிள் சைமனை அவர் கலாய்த்த அளவு இன்னொருவர் கலாய்த்திருக்க முடியாது, சொல்லும் கருத்துக்களை மிக தைரியமாக சொல்லும் நண்பர் அவர். துபாய் பாலாவினையே அட்டகாசமாக சமாளித்தார் என்றால் அவரின் திறமையினை பாராட்டத்தான் வேண்டும் நயனுக்கு இப்படி ஒரு ரசிகர் தனக்கிருப்பது தெரியாது, நயனை அவரின் பெற்றோர்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications