பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புதிய 200 ரூபாய் நோட்டு

புதிய 200 ரூபாய் நோட்டு செப்டம்பரில் வருகின்றது மத்திய அரசு அறிவிப்பு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மிக தாமதமாக வந்து பல குழப்பங்கள் ஏற்பட்டன, அதனால் இம்முறை 200 ரூபாய் நோட்டு முதலில் வந்து அடுத்து 100 ரூபாய் நோட்டு செல்லாதது ஆக்கபடலாம் ஆயிரம் ரூபாய் நோட்டால் கருப்பு பண‌ பதுக்கல், தீவிரவாதம் என பிரச்சினைகள் இருந்தன, அதனை செல்லாதது ஆக்கியதால் அப்பிரச்சினைகள் முடிந்தன என மத்திய அரசு சொல்லிகொண்டிருக்கின்றது இந்த 100 […]

மெட்ராஸ் டே

சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு. அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது. இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , […]

உறவினை அறுத்த கோடு

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று. அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன. “என் பிணத்தின் மீது இந்த தேசம் பிரியட்டும்” என அடம்பிடித்த காந்தியாலும் முடியவில்லை. ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தாலும் அவர் மட்டும் […]

நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும் – சுதந்திர தினம்

“தாயின் மணிக்கொடி பாரீர்,  அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது, […]

கொடூர நாள் இந்த ஆகஸ்ட் 14

அதுவரை அப்படி ஒரு நாடு இல்லை, அது உருவாக சாத்தியமோ அவசியமோ இருந்ததில்லை. அது இந்தியா என்றே அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து மவுண்பேட்டன் காலம் வரை சொல்லபட்டது இது வளமான நாடு, இதன் வருமானமும் செல்வமும் என்ன என்பது வெள்ளையனுக்கு புரிந்தது. இப்படியே விட்டுவிட்டு சென்றால் இந்நாடு எழும்பிவிடும், எழும்பினால் அது தனக்கு பின்னாளில் ஆபத்து, என்ன செய்யலாம் அவர்களுகுள்ளே அடித்து சாகட்டும் என்ற திட்டமிட்டு பிரித்தான் அதுவரை உலக சரித்திரத்திலே இல்லாத, பாருமே கேள்விபட்டிராதா பாகிஸ்தான் […]

பலியாகும் குழந்தைகள்…

கும்பகோணம் பள்ளி எரிந்து குழந்தைகள் பலியான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆம் உண்மை குற்றவாளிகள் இரண்டு பேர். அவர்களை தண்டிக்க முடியாமல் நீதிமன்றம் கையினை பிசைகின்றது. ஒன்று பாழாய்போன தேசத்தில் பிறந்த அந்த குழந்தைகள். அடுத்து அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய அந்த பெற்றோர். இதில் குழந்தைகள் இல்லை அதனால் அந்த பெற்றோரை பிடித்து நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் பெருந்தன்மையாக விட்டுவிட்டது எப்படி இப்படி குற்றவாளிகள் தப்பிக்கலாம்? நீதிதுறையினை நிச்சயம் மறுசீரமைப்பு செய்து அந்த […]

இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்….

சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள். அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள் இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும். அப்படி என்ன என்கின்றீர்களா? பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லையாம். […]

காவேரி என்பது என்ன?

ஒரு சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்களாம், அதாவது கபினி எனும் காவேரியின் துணையாரில் அணைகட்டினால் கன்னடடட்தை பழிவாங்கலாமாம் சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது இதுதான், கூடவே மணமகன் முகத்தில் துப்பும் நிகழ்வும் நடக்கும் காவேரி என்பது என்ன? அது ஆடுதாண்டும் காவேரிதான் சந்தேகமில்லை. மேகதாது அல்லது மேக்க தாட்டு என சொல்லபடுவது என்ன? கன்னடத்தில் ஆடு தாண்டுதல் என பொருள் வரும் காவேரி என்பது பல ஆறுகளின் தொகுப்பு, கபினி ஹேமாவதி, ஹேரங்கி என […]

ஈழம் இந்திய நட்பு நாடு என்கிறார்களே ?

இலங்கையில் சீனா காலூன்றிவிட்டதாம், ஈழம் இருந்திருந்தால் இந்தியாவிற்கு மிக பாதுகாப்பாக இருக்குமாம், ஈழம் இந்தியாவின் நட்புநாடாக இருக்குமாம், ஈழம் அமையாததுதான் தவறாம் சிலர் சொல்லி கொண்டிருகின்றான் ஈழம் அமைந்தாலும் என்ன நடந்திருக்கும்? சிங்களன் வலிய கேட்டு சீனபடையினை நிறுத்தியிருப்பான் சரி அதனை விடுங்கள் ஈழம் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்குமாம் 1500 இந்திய வீரர்களை கொன்று, இந்திய நாய்களுக்கு இங்கு என்னவேலை என கேட்டு, பெரும் இந்திய‌ தலைவனையும் சிதறடித்து, இன்றுவரை இந்தியாவினை பகையாக சொல்லிகொண்டிருக்கும் ஈழம் இந்தியாவின் […]

வெள்ளையனே வெளியேறு இயக்கம்…

இந்தியாவினை வெள்ளையன் ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பிகொண்டே தான் இருந்தது, அது சிப்பாய் புரட்சி, வேலூர் கலகம் , பகத்சிங் காலம், சென்பகராமன் காலம் என பல இருந்தாலும் பெரும் முன்னேற்றமில்லை காரணம் அன்றைய 40 கோடி மக்களுக்கும் ஒரே தலைவர் இல்லை, பஞ்சாப் முதல் குமரி வரை, பலுசிஸ்தானில் இருந்து டாக்கா வரை பரந்திருந்த இந்த பெரும் நாட்டிற்கு ஒன்றுபட்ட தலைவர் இல்லை, ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் கேட்கும் எளிதாக அடக்கினான் வெள்ளையன், இன்னொன்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications