பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதீத மத சுதந்திரம் இந்நாட்டிற்கு ஆபத்து.

எல்லா தெய்வமும் ஒன்று, எல்லா ஆசிரியர்களும் ஒன்றே ஆசிரியரில் பாகுபாடு பார்த்தால் மாணவர் சமுதாயம் உருப்படாது ஒரு பிராமண அய்யரிடம் இந்த இஸ்லாமியன் படிக்கமாட்டேன் என கிளம்பியிருந்தால் அப்துல் கலாம் கிடைத்திருக்கமாட்டார். கிறிஸ்தவன் நாட்டில் படக்கமாட்டேன் என அடம்பிடித்தால் காந்தி கிடைத்திருக்கமாட்டார். அதீத மத சுதந்திரம் இந்நாட்டிற்கு ஆபத்து.  

ஆடிபெருக்கு என்பது இன்று பட்டுபோன மரத்தின் கிளை

அந்த கால காவேரி அப்படி இருந்திருக்கின்றது, அதன் மீதோ அதன் துணையாறுகள் மீதோ ஒரு அணையுமில்லை. மொத்தமும் சேர்ந்து காவேரி டெல்டாவிற்கு ஓடி வந்திருக்கின்றது இந்த ஆடிமாதம் கன்னியாகுமரி பக்கம் சாரல் கொட்டும் காலம், குற்றாலத்திலும் இந்த காலம் ரம்மியமானது காவேரி டெல்டா பகுதிக்கு இந்த ஆடிமாதத்தில்தான் புதுவெள்ளம் வரும், காவேரியினை தாயாகவே வழிபட்டவர்கள் தமிழர்கள். சிலப்பதிகாரம் முதல் அதற்கு ஏராள சான்று உண்டு அப்படி பொங்கி வந்த காவேரியினை, தங்களை வாழவைக்க வந்த காவேரியினை தாயாக […]

இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது

ஒரு சிலர் சொல்லிகொண்டிருந்தான், கிறிஸ்தவர் பணத்திற்காக மதம் மாறினர் என்றும், இஸ்லாமியர் அதிகாரத்திற்காகவும் மதம் மாறினர் என்றும் உளறிகொண்டிருந்தான் அவனெல்லாம் உ.பி வீடியோவினை பார்த்தால் விஷயம் புரியும் இந்த கொடுமைதான் அக்காலமும் நடந்தது, இதனை விட கொடுமையான விஷயம் எல்லாம் நடந்தது, புத்தனனும் மகாவீரனும் ஓரளவு மாற்றம் கொடுத்தாலும் அது மறுபடி அந்த பூதம் எழுந்து நின்றது இக்கொடுமையில் வாழமுடியாமல்தான், இவர்களின் கொடூர சாதிவெறுப்பிற்கு தப்பித்தான், மனிதனை மாட்டை விட கேவலமாக பார்க்கும் இந்த சாதி வெறியர்களோடு […]

கார்கில் மீட்பில் பலியான நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று. மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள் உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது, மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள் அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் […]

மலசட்டி அரசியல் தீராது போல…

மனித கழிவினை மனிதனே அகற்றுவதா என்றும், அது ஒரு சாதிய அடக்குமுறை என்றும் இன்னும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இந்த கக்கூஸ் அரசியல் ஒரு மாதிரியான அரசியல், இது விடாபிடியாக பிடித்து சொல்லிகொண்டே இருப்பது பிடிவாதம். இந்த வெள்ளையன் வரும் முன் எப்படி இருந்தது நிலை? சரி இந்தியாவினை விடுங்கள், மலேசிய சிங்கப்பூர் நாடுகளில் எப்படி இருந்தது? கிராமங்களில் சிக்கல் இல்லை, நகரங்களில் அதற்கென ஒரு மண்பாத்திரம் இருந்தது, தொழிலாளர்கள் அதனை சேகரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள் பெரும்பாலும் […]

இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி

இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து கோப்பையினை தவற விட்டிருக்கின்றது. யாருக்கு வேண்டும் கோப்பை? இறுதிவரை மிக பெரும் போராட்டத்தை நடத்திவிட்டு, இதுதான் நாங்கள் என நிரூபித்து நின்ற மகளிர் அணி அலெக்ஸாண்டரை எதிர்த்த போரஸ் மன்னனின் தீரத்தினை போல உயர்ந்து நின்றது. கோப்பையினை தவற‌ விட்டாலும் கோடிகணக்கான ரசிகர்களின் மனதை வென்றுவிட்டனர் அந்த பெண் சிங்கங்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே, இந்த தேசம் பெரும் மகிழ்ச்சியுடன் உங்களை பேருமையுடன் வரவேற்கின்றது. அந்த சீமை சிறுக்கிகளை இங்கு […]

இந்திய மகளிர் அணி அடித்து நொறுக்குகின்றது

இந்திய மகளிர் அணி அடித்து நொறுக்குகின்றது, நேற்று ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு தோல்வி என்றால் என்னவென்று அடித்து அடித்து சொல்லி அனுப்பியிருக்கின்றது மிக சிறப்பான ஆட்டத்தை கேப்டன் தமிழகத்து மிதாலி ராஜூம், பஞ்சாப் பெண் சிங்கம் ஹெர்மன்பிரீத் கவுரும் காட்டியிருக்கின்றார்கள், இனி இறுதி போட்டியில் இங்கிலாந்து அடிவாங்க தயாராகின்றது. சந்தேகமே இல்லை கோப்பை நமக்கே இனி ஒன்று செய்யலாம், இந்திய ஆண்கள் அணி தடுமாறும் பொழுது இவர்களில் ஒருவரை பதில் ஆட்டக்காரராக அனுப்பலாம், வாய்ப்பு இருக்கின்றது இந்த […]

சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது

சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது மிகபெரும் லஷ்கர் தீவிரவாதி ஒருவன், நாட்டின் பல நாசவேலைகளுக்கு காரணமான அவன் சலீம் கான். துபாய்க்கு தப்பிய அவன் அங்கு சாதரண தொழிலாளியாக வேலை செய்திருக்கின்றான் மறுபடியும் ஏதோ திட்டத்துடன் மும்பை வந்த அவனை ஈரசாக்கு போட்டு தூக்கிவிட்டது மும்பை போலீஸ் அதாவது அவன் துபாயின் என்ன செய்கின்றான்? எந்த போலிபாஸ்போர்ட்டில் வருகின்றான் என சகலத்தையும் இந்திய உளவுதுறை திரட்டியிருக்கின்றது, பின் அவன் மும்பை வரும் தகவலை சொல்லிவிட்டது, அமுக்கிவிட்டார்கள் […]

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை இதனை எல்லாம் இந்த திராவிட கழகம், பெரியாரிஸ்டுகள் எல்லாம் கண்டிக்கமாட்டார்கள், மாறாக பிராமணரின் பூனூலில் மட்டும் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பார்கள். இரு பன்றிகளை பிடித்து இது தலித் பன்றி, இது உயர்சாதி பன்றி அந்த இரண்டிற்கும் திருமணம் செய்வித்து எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என சொல்லட்டும் பார்க்கலாம் அதெல்லாம் செய்யமாட்டார்கள் அதுவும் ஒரு பன்றிக்கு வன்னியர் என்றும், ஒரு பன்றிக்கு நாடார், தேவர், தலித் எனவும் பெயரிட சொன்னால் வங்க கடலை […]

எங்கே கலாச்சார காவலர்கள்?

அதீத சுதந்திரமும் ஒரு சமுதாய சீர்கேடு , கலாச்சார காவலர்கள் எல்லாம் கமலஹாசனுக்கு மட்டுமே பொங்குவார்கள். பெண் சுதந்திரம் என்பது ஆண்களோடு செக்ஸ் பேசுவது என்ற அளவுக்கு சென்றுகொண்டிருக்கின்றது, இதுதான் பெண்விடுதலையா? நிச்சயமாக இவரின் பிள்ளைகளை நினைக்க பரிதாபமாக இருக்கின்றது, நல்ல சமூக ஆர்வலர்கள் இருந்தால அந்த குழந்தைகளை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பட்டும். இந்த பெண்ணின் கணவரும் இதனை ஒப்புகொள்கின்றாரா? இதனை ஒப்புகொண்டால் இந்த குடும்பம் தமிழகத்தின் பெரும் சமூக சீர்கேட்டு குடும்பம் ஆகாதா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications