பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது

இந்த மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது செங்கோட்டைக்கு டால்மியா இன்னும் பல கோட்டைகள், அரண்மனைகளுக்கு எல்லாம் ஆளாளுக்கு ஒரு பராமரிப்பாளர்களை நியமிக்கின்றார்கள் பராமரிப்பு செலவினை ஏற்கும் நிறுவணங்கள், அங்கு தங்கள் வியாபாரத்தையும் விளம்பரத்தையும் கவனிக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் அதே நேரம் வரலாற்று இடங்களை தனியார் பராமரிக்க கடும் சட்டங்கள் அவசியம், ஏற்கனவே சிலை திருட்டு அதிகம் நடக்கும் நாடு இது இங்கு வரலாற்று இடங்கள் ஏராளம், […]

அந்த அனாதை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

நெல்லையில் தந்தை குடியினை நிறுத்தா கோபத்தில் பாலத்தில் தூக்கில் தொங்கியிருக்கின்றான் மாணவன் டாஸ்மாக் திறந்திருப்பதால் அவன் தந்தை குடித்தார் என சொன்னாலும், குடிகாரர்கள் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றுவரை இருக்கின்றார்கள் வள்ளுவன் கள்ளுண்ணாமை என அதிகாரம் இயற்றும் அளவு அன்றே குடிபழக்கம் சீரழித்திருக்கின்றது நெருப்பை நெய்யால் அணைத்தேன் என குடிபற்றி கம்பன் கூட ராமயணத்தில் சொல்கின்றான் டாஸ்மாக்கை நிறுத்தவேண்டும் என்பது சரி, அதே நேரம் பழைய கள்ளச்சாராய சாவுகளும் கொஞ்சமல்ல‌ குடியினை சட்டம் போட்டு வென்றதாக ஒரு நாடுமில்லை, […]

அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்னதான் நடந்தது?

அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்ன நடந்திருக்கின்றது என்றால் ஒரு இந்து பெண்ணும், ஷபீர் எனும் இஸ்லாமிய பையனும் காதலித்திருக்கின்றார்கள் முதலில் நன்றாக சென்ற காதலில் பின் கண் தெரிந்து மதம் தடையாக இருப்பது தெரிந்திருக்கின்றது அப்பெண் விலக முயற்சித்திருக்கின்றாள், காரணம் கேட்டபொழுது மதம் பற்றி சொல்லியிருக்கின்றாள் அவன் அவளை மதம் மாற சொல்லியிருக்கின்றான், அவளோ அவனை மதம் மாற சொல்லியிருக்கின்றாள் விஷயம் இழுத்துகொண்டே சென்றது,பல நாள் சண்டை எல்லாம் வந்து , பஞ்சாயத்து எல்லாம் நடந்திருக்கின்றது காதலுக்காக […]

“இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர்

தன்னிடம் இந்திய விடுதலை பற்றி பேசிய சென்பகராமனிடம் “இந்தியர்களுக்கு ஆள தெரியாது, அவர்களை பற்றி பேசாதே” என்றான் ஹிட்லர் பின் நேதாஜியிடம் “போரில் வென்றால் இந்திய அதிபராக இரும்புகரம் கொண்டு அந்நாட்டை நடத்து, ஜனநாயகம் என்பது இந்தியருக்கு புரியாது” என்றான் அதே ஹிட்லர் “இன்று சுதந்திரம் கேட்கும் இந்திய தலைவர்களில் பெரும்பாலானோர் சுயநலவாதிகள், அம்மக்களுக்கும் ஜனநாயக மகத்துவம் தெரியாது அதனால் இந்தியா சீரழியும்” என்றார் சர்ச்சில் “இந்தியர்கள் உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பார்களே ஒழிய அறிவுபூர்வமாக சிந்திப்பதே இல்லை” என்றான் […]

விசித்திரமான நகரங்களில் முதலிடம் மதுரைக்கே..

மதுரையின் பிரமாண்ட திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது, அவ்வளவு பெரும் பக்த கூட்டம் ஆனால் தேர்தல் என்று வந்தால் திராவிட கட்சிகள்தான் வாக்குகளை அள்ளும், ஏன் என்றால் ராமசந்திரன் காலத்தில் இருந்து செல்லூர் ராஜூ காலம் வரை அப்படித்தான் மதுரை முத்து காலத்திலிருந்து அட்டாக் பாண்டி காலம் வரை அதன் அரசியல் விசித்திரமானது பக்தி கொண்டாட்டம் என வரும்பொழுது பெரும் ஆரவாரம் காட்டும் மதுரை, வைகையாற்றில் அழகரை இறக்கும் அதே மதுரை சிலிர்க்க வைக்கின்றது ஆனால் அதே மதுரை செல்லூர் […]

அஸ்ராம் பாபு சாமியார் அட்டகாசம் ஓயவில்லை

இந்த அஸ்ராம் பாபு சாமியார் அட்டகாசம் ஓயவில்லை, அவருக்கும் பிரேமானந்தாவிற்கும் ஒரே ராசி பிரேமானந்தா இலங்கையிலிருந்து வந்தார்,இந்த அஸ்ரம் பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தார். சாமியாராகிவிட்டால் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் அல்லவா அப்படியே இருவரும் சம்பாதித்தனர் சம்பாதித்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? பெண் தொடர்பில் மாட்ட வேண்டும் , அதை இருவரும் சமத்தாக செய்தார்கள் இப்போது அஸ்ரம் சாமி சிறையிலிருந்து தன் பக்தர்களுக்கு ஆறுதல் மொழி சொல்லிகொண்டிருக்கின்றார் அது வாட்சப்பில் எல்லாம் வருகின்றதாம் சிறையிலிருந்து சாமியார் […]

பூச்சிகொல்லி மருந்து எப்பொழுது வந்தது?

முன்பெல்லாம் பூச்சிகொல்லி மருந்துகள் இந்தியாவில் இல்லை, வேப்பிலை கரைசல் இன்னபிற இயற்கை பொருட்கள் என்றே விவசாயம் இருந்தது பூச்சி அரித்த காய்கறிகள் இருந்தாலும் அவற்றை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை அவர்கள் எல்லாம் 100 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் பூச்சிகொல்லி மருந்து எப்பொழுது வந்தது? உல்கப்போர் காலங்களில் விஷ ஆயுதங்களை எப்படி தயாரிக்கலாம் என்ற திட்டம் உருவானது , ஹிட்லர் யூதர்களை கொல்ல விஷ வாய்வு விஷ திரவம் எல்லாம் பயன்படுத்தினான் மனிதர்களை கொல்ல ஆரம்பித்த அந்த விஷ விஷயமே […]

சாமியார் அஸ்ரம் பாபு .. ஓஸ்ரம் பல்பு….

அஸ்ரம் பாபு எனும் சாமியார் சிறையில் அடைக்கபட்டு அவருக்கு ஆயிரம் கோடி சொத்து இருக்கின்றது என செய்தி வந்ததுதான் தாமதம் கற்பழிப்பு சாமியாரின் பல்புகளை வாங்கமாட்டோ, உடைத்தெறிவோம் என ஒரு கும்பல் ஓஸ்ரம் பல்புகளை புறக்கணிக்க தொடங்கிவிட்டதாம். அது அவரின் கம்பெனி பல்ப் என எவனோ கிளப்பிவிட்டிருக்கின்றான் அஸ்ரம் சாமியாருக்கும் ஜெர்மனியின் ஓஸ்ரம் பல்புகளுக்கும் என்ன சம்பந்தம்? ஆனாலும் கொஞ்சமும் யோசிக்காமல் ஓஸ்ரம் பல்புகளை புறக்கணிப்போம் என ஒரு கும்பலும், இந்த சிகப்பு விளக்குகளை மட்டும் பயன்படுத்தாலும் […]

பிரேமானந்தா வரிசையில் ஆஸ்ரம் பாபு என்பவரும் குற்றவாளி என தீர்ப்பாயிற்று

இந்த தேசத்தில் சாமியார்கள் மீதான சர்ச்சைகளுக்கு மட்டும் ஒழுங்காக தீர்ப்பளித்துவிடுகின்றன நீதிமன்றங்கள் பிரேமானந்தா வரிசையில் ஆஸ்ரம் பாபு என்பவரும் குற்றவாளி என தீர்ப்பாயிற்று நித்தியும் சில சர்ச்சையில் சிக்கி இருக்கவேண்டியவர், ஆனால் வீடியோ லீக் ஆனதில் சுதாரித்துகொண்டு சிரித்துகொண்டே இருக்கின்றார் இப்படி பலர் சாமிகளாய் வந்துவிட்டு கொலை செய்து சிக்குகின்றனர், ஆனால் கொலை செய்துவிட்டு சாமியாரானவர்கள் சிக்குவதே இல்லை அதுதான் அனுபவம் என்பது.  

பெண் குழந்தைகள் கற்பழிப்புகள் அன்றாட செய்தியாகின்றன‌

வட இந்திய செய்திகளில் இப்பொழுதெல்லாம் அனுதினமும் பெண் குழந்தைகள் கற்பழிப்புகள் அன்றாட செய்தியாகின்றன‌ வங்கத்தில் கூட ஒருவன் பிடிபட்டிருக்கின்றான் தமிழக செய்திகளை புரட்டினால் இன்னும் படுமோசம், பாஜக பிரமுகன் ஒருவனும், கோவில் பூசாரியும் பிடிபட்டிருக்கின்றான் இவர்கள் நிச்சயம் இயல்பு நிலையில் இல்லை, கிட்டதட்ட மிருகமாகிவிட்டார்கள் மிருகங்களை என்ன செய்வது என்பது மனிதனுக்கு புதிதல்ல, அக்காலத்திலே காளைமாடுகள் என்ன செய்தால் கட்டுபட்டு சமத்தாக வேலைபார்க்கும் என்ற நுட்பம் இருந்திருக்கின்றது அக்கால கன்றுகளை கூட அவை விடவில்லை என்றுதான் ஆண்மை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications