அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை ஆனால் ராணுவ கொடும்சாவு மற்றும் வெற்றிகளை பாஜக அரசியலாக்கும் அதை பற்றி எல்லாம் அக்கா பேசமாட்டார்
சுத்தமான இந்து இந்தியன்….
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை ஆனால் ராணுவ கொடும்சாவு மற்றும் வெற்றிகளை பாஜக அரசியலாக்கும் அதை பற்றி எல்லாம் அக்கா பேசமாட்டார்
நடந்தது மிகபெரும் கொடுமை சந்தேகமில்லை, அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுத்தால் நாடு தாங்காது, அது சரியும் அல்ல நல்லதோ கெட்டதோ சட்டத்தின் மூலம் அவர்களை தண்டிப்பதே சரி சட்டத்தை விடுங்கள், இத்தனை லட்சம் காரி துப்பிய பின்பு , இனி அவர்கள் சமூகத்தில் தலைகாட்டமுடியாது என்றபின்பு, அவன் கடக்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் அவனை மனதார கொல்லும் பொழுது அதைவிட என்ன தண்டனை வேண்டியிருக்கின்றது அதெல்லாம் விட முக்கியம் அவனை பெற்றவர்களும் அவன் குழந்தைகளும் உறவுகளும் […]
“உன் மகளுக்கு இன்முகம் காட்டாதே, அவள் மணமாகி செல்லும்வரை அவள் மேல் கண்ணாயிரு, அவள் நடவடிக்கைகளை கண்காணித்துகொள், இல்லையேல் பிறர்முன்னால் நீ அவமானபட நேரிடும் பிரம்பை கையாளாதவன் தன் மகனை பகைக்கின்றான், அவனை சிறுவயதில் இருந்தே ஞானத்திலும் முன்னோர் மொழியிலும் வளர்க்கடவாய், ஏனெனில் பிள்ளைகள் வழியாகவே பெற்றோர்கள் தன்மை உலகிற்கு அறியபடும்” இதெல்லாம் யூதபழமொழி, சரியாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது “எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்”. நல்ல பிள்ளைகளை வளர்த்தால் 7 பிறப்பிலும் தீமை வராது, […]
இந்த சங்கி கும்பலின் பைத்தியம் முற்றியே விட்டது, எதை பார்த்தாலும் அதன் மூலம் கஞ்சா வாங்கி போதையேற்றுவது எப்படி என சிந்திக்கும் போதை அடிமைகள் போல சதா சர்வ காலமும் இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் வம்ப்புக்கு இழுப்பதிலே அவர்கள் சிந்தனை இருக்கின்றது புதிதாக ஒன்றை கிளறுகின்றர்கள், கற்பழிப்பினை இங்கு கொண்டுவந்தது இஸ்லாமிய படையெடுப்பும் கிறிஸ்தவ படையெடுப்புமாம் அட பைத்தியக்காரர்களா? உங்கள் மதங்கள் சொல்வதென்ன? மகாபாரத்தில் நடந்ததென்ன? அடிமை பாஞ்சாலியினை தன் மடியில் அமர சொல்லி துகிலுரிந்தது யார்? ராமன் […]
ஒரு பத்திரிகை ஒரு விஷயத்தை வெளிகொணரத்தான் முடியும், பொள்ளாச்சி விவகாரத்தை கொண்டுவந்தாயிற்று பொது ஊடகங்கள் பொங்கத்தான் முடியும், பொங்கியாயிற்று ஆனால் தண்டனை? ஆம், பாதிக்கபட்டபெண்கள் யாரும் கோர்ட்டுக்கு செல்லபோவதுமில்லை, சாட்சி சொல்லபோவதுமில்லை ஏன் முறைபடி புகாரே எராளமான பெண்கள் கொடுக்கவே இல்லை அவர்களை சிறையில் அடைக்கலம், கடும் தொணியுடன் அவர்கள் மேல் வழக்கு பதியபடலாம், ஆனால் பாதிக்கபட்ட பெண்கள் வருவார்களா? ரகசிய விசாரணை கூட சிரமம் நிர்மலா தேவி விவகாரமோ இல்லை இந்த பொள்ளாச்சி விவகாரமோ மிரட்டலுக்கு […]
“அண்ணே இந்த பொள்ளாச்சி சம்பவத்துல கொஞ்சம்தான் உண்மை, மீதி எல்லாம் பொய் அதெல்லாம் நம்பாதீங்க, அதுவும் நக்கீரன நம்பாதீங்க அட நக்கீரன் இப்போ நல்ல வேலைதானடா செஞ்சிருக்காங்க,பின்ன ஏண்டா? அதில இருக்குற கணக்கு உங்களுக்கு தெரியாது, ஏமாந்துடாதீங்க? அதுல என்னடா கணக்கு? அண்ணே அதுலதான் இருக்கு விஷயம், அவங்க அதிமுக புள்ளின்னு கோர்த்துவிடுறாங்க அது எதுக்கு தெரியுமா? எங்கள தோற்கடிக்க, மோடிய விரட்ட டேய் சங்கி, இதுல மோடி எங்க இருந்து வந்தாரு? அண்ணே அதிமுகவும் நாங்களும் […]
“கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” என்கின்றார் அவ்வையார் அதாவது கணவன் தன் சொல்லுக்கும் மனைவி தன் சொல்லுக்கும் மாறாக நடவாமல் இருப்பதே கற்பு என தமிழகம் அன்றே இலக்கணம் வகுத்திருக்கின்றது இது ஆண்களுக்கும் பொருந்தும் கற்பு என்பது வாழ்க்கை நெறியே தவிர வேறொன்றுமல்ல கர்ப்பகிரகம் என்று புனிதமாக சொல்வார்கள் அல்லவா? அப்படி புனிதமான ஒப்பந்தமாக அது அந்நாளில் சொல்லபட்டது அதாவது கணவனும் மனைவியும் உடன்பாட்டோடு வாழ்வது கர்ப்பம் என ஏன் சொன்னார்கள்? அக்காலகட்டத்தில் பெண்ணை மிக கவனமாக […]
நக்கீரனை பற்றி தெரியாதா என பலர் கிளம்பியிருக்கின்றார்கள் ஆட்டோ சங்கர் கதை முதல் சசிகலாவின் மர்ம சாம்ராஜ்யம் வரை வெளிகொணர்ந்தது அவர்கள்தான் சந்தண வீரப்பனை முதலில் வெளி உலகிற்கு காட்டியதும் அவர்கள்தான் நிர்மலா தேவி மர்மத்தை முதலில் சொன்னவர்களும் அவர்கள்தான் இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் மூடி மறைக்கபட்ட மாளிகையின் அடிக்கல்லை அசைத்ததும் அவர்கள்தான் ( மற்றபடி இந்த திராவிடம், புலிகள் என கிளம்புவதெல்லாம் அவர்களின் காமெடி ரகம்..) பொள்ளாச்சி சம்பவத்தை அவர்கள் கிளறிய பின்பே இன்று குற்றவாளிகள் […]
பொள்ளாச்சி கொடூரத்தை எதிர்த்து கனிமொழி ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, தேர்தல் நடத்தை விதி என கோட்டாட்சியர் பதில் இவ்வளவுதானா விஷயம்? திமுக பிரச்சார கூட்டம், திமுக கண்ட பெண் விடுதலை பாரீர் என கூட்டத்தை கூட்டினால் இந்த கோட்டாட்சியர் என்ன செய்வார்? அப்படி அனுமதி வாங்கி கலைஞர் செய்த பெண் விடுதலை காரியங்களை விளக்கிவிட்டு சந்தடி சாக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்துவிட்டும் வரலாம் கலைஞர் மகளான கனிமொழிக்கு இதை எல்லாம் சொல்லி கொடுக்க வேண்டுமா […]
“கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது, இங்கு பாலியல் கல்வி வேண்டும், ஒரு பெண் தனக்கு இழைக்கபடும் அல்லது அணுகபடும் பாலியல் விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்க வழி செய்ய வேண்டும் இங்கு பெண்களுக்குள்ள மிக பெரும் மிரட்டல் என்னவென்றால் அவர்கள் மனதால் பயந்தவர்கள், இச்சமூகம் அப்படி அவர்களை அடக்கி பயமுறுத்தி வைத்திருகின்றது அதை மாற்ற வேண்டும் பெண் சுதந்திரம் என்கின்றோம் இன்னும் ஒரு பெண்ணும் தனக்கு உரிமையான, தனக்கு மட்டுமே உரிமையான விஷயங்களை வெளி சொல்லவும் முடியாது பேசவும் […]
We would like to show you notifications for the latest news and updates.