பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள் மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு பைபிளில் இதெல்லாம் இல்லை என […]

டிரம்பும் இஸ்ரேலும் அடாவடி பார்ட்டிகள்…

கிட்டதட்ட 2000 ஆண்டுகள் நடத்திய போராட்டத்தில் யூதர்கள் வென்றுகொண்டிருகின்றார்கள், அவர்கள் இலக்கு நிறைவேற போகின்றது அதாகபட்டது ஜெருசலேம் யூதர்களின் பூமி என்பதே அவர்கள் கொள்கை, அவர்கள் மத நூலெங்கும் அது நிரம்ப கிடக்கின்றது, அவர்கள் வாழ்வு,கனவு, ஏக்கம், புனிதம் எல்லாமே அந்த ஊரும் அதில் இருந்த ஆலயமுமே யூதன் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் அதற்காகவே, அவன் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசமும் அந்த ஜெருசலேமிறாகவே தாவீது அரசர் காலத்தில் இருந்து எங்கெங்கோ சுற்றினாலும் இறுதியி ஜெருசலேம் வந்துவிடும் யூதர்களுக்கு […]

நித்தியானந்தாவின் மந்தகாச புன்னகை ..

பெண்களுக்கான கேட்டரிங் படிப்பினை தொடங்கியிருகின்றார் சுவாமிகள் மடமோ அல்லது காவல் நிலையமோ என எங்கிருந்தாலும், ரஞ்சிதாவோ அல்லது ராதைகளோ சுற்றி இருந்தாலும், தோசையோ அல்லது பொங்கலோ எது இருந்தாலும் மாறாதது சுவாமிகளின் மந்தகாச புன்னகை புன்னகை மன்னன் இந்த சுவாமிகள், அதுவும் அந்த மந்தகாச புன்னகை இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ( வெட்கம் கெட்ட‌ ) புன்னகை

மலேசியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பாட்டி தாத்தாவோடு தன் வாழ்வின் முதல் கிறிஸ்துமஸை மகள் கொண்டாட துவங்குகின்றாள், அவளை பொறுத்தவரை மிக மகிழ்வான தருணம் வழக்கமான சனி, ஞாயிறு கிழமைகளில் மீன் பின்னாலும், கோழி பின்னாலும் ஓடிகொண்டிருக்கும் என்னை இந்த இரவில் பிடித்து சர்ச்சுக்கு இழுத்து சென்றார்கள் மலேசியாவில் கத்தோலிக்கர் அதிகம், கத்தோலிக்க ஆலயங்களும் அதிகம், ஆனால் பெரும் கூட்டம் இது சீனர்கள் அதிகமான பகுதி, சீனத்திலும் ஆங்கிலத்திலும் திருப்பலி உண்டு, நமக்கு இரண்டுமே புரியாது எனினும் ஆங்கிலம் கொஞ்சம் புரியும் என்பதால் […]

ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து

கடவுளின் அவதாரமாக கிறிஸ்தவர்களும், ஒரு இறைவாக்கினராக இஸ்லாமியரும், நாங்கள் எதிர்பார்த்திருக்கும் மெசியா அல்ல இது ஒரு இனதுரோகி என யூதரும், மற்ற மதத்தினர் எல்லாம் மாபெரும் தத்துவஞானியாகவும் பார்க்கபடும் ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து. புத்தமதத்தினர் கூட தங்கள் மதத்தின் உண்மையான தத்துவங்களை போதித்தவர் அவர் என அவரை உயர்த்தி பிடிப்பார்கள். அவரின் பிறந்தநாள் டிசம்பர் 25 என கொண்டாடபடுகின்றது, அவர் அந்த தேதியில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை (ஓலைசுவடி, பைப்ரஸ்புல்,கல்வெட்டு அல்லது மிருகத்தோல் […]

கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் பரவ முதல் காரணம் பால் அல்லது பவுல் என்பவர்…

கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் பரவ முதல் காரணம் பால் அல்லது பவுல் என்பவர். இப்பொழுது இருக்கும் சின்னம்மா அபிமானிகளை விட, மோடி வெறியர்களை விட, ஐஎஸ் இயக்கத்தாரை விட பெரும் வலுவான நம்பிக்கையினை தொடக்கத்தில் யூத மதத்தில் வைத்திருந்தார். அவர் யூதர், சாதரண யூதர் அல்ல யூத மதத்தின் 4000 மேற்பட்ட சட்டங்களை கரைத்து குடித்து குளித்து அடுத்த தலமைகுரு எனும் தகுதியில் இருந்தவர் அப்பொழுது கிறிஸ்தவ மதம் யூதரில் பெரும் பிளவினை ஏற்படுத்த, அந்த கிறிஸ்தவர்களை […]

கேரளாவில் உடை கட்டுப்பாடு

கேரளாவில் இனி கிறிஸ்தவ ஆலயங்களில் கூட உடைகட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது அதாகபட்டது பாரம்பரியமான இந்து ஆலயங்களில் உடைகட்டுப்பாடு உண்டு, சில ஆலயங்கள் வேட்டி சேலை உடுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்கின்றன இனி எல்லா ஆலயங்களிலும் அது கடுமையாக்கபடுகின்றது குறிப்பாக கிறிஸ்தவ ஆலயங்கள் தமிழக கிறிஸ்தவ திருமணம் வித்தியாசமானது, மணமகன் பால் தினகரன் போலவோ அல்லது வசந்த் & கோ முதலாளி போலவோ கோட் சூட் அணிந்திருப்பார், மணமகள் தமிழ் முறைப்படி பட்டுசேலை அணிந்திருப்பார் பாதி மேல்நாடு, மீதிபாதி நம்நாடு என […]

மலேசிய பெருமாள் கோவிலில் …

சீனர்களிடம் ஒரு கலாச்சாரம் உண்டு, எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்கள் இருக்கும் இடத்தினை சீன கலாச்சாரத்திற்கு மாற்றிவிடுவார்கள் இந்தியர்களிடம் அப்பழக்கம் குறைவு எனினும், மலேசிய தமிழர்கள், இந்து அடையாளங்களுடன் பல இடங்களை தமிழக சூழலிலே மாற்றி , அதனை தொடர்ந்தும் வருகின்றார்கள், பெரும் இந்து ஆலயங்களும் அதில் ஒரு வகை அப்படி ஒரு பெருமாள் கோயிலுக்கு செல்ல நேர்ந்தது சிறிய கோவில், ஆனால் அழகாக சாஸ்திரப்படி அமைத்திருந்தார்கள், சுற்றிலும் ஆழ்வார்களின் பாடல்களை அழகுற எழுதியிருந்தார்கள், கடவுள் படங்களை […]

கிறிஸ்தவம் என்பது என்ன?

சில கிறிஸ்தவர்கள் கிளம்பி இருக்கின்றார்கள், மோடி ஒரு பாசிச இந்துத்வா, பாஜக ஒரு கிறிஸ்தவ அழிவு சக்தி, இனி இந்தியாவில் கிறிஸ்துவத்திற்கு ஆபத்து, மகா ஆபத்து, இனி கிறிஸ்தவன் இங்கே வாழமுடியாது என பல வகையான ஒப்பாரி கிறிஸ்தவம் என்பது என்ன? குளிர்ந்த நீரில் மலர் தூவி ஆடும் நன்னீர் குளியலா? அது அன்றிலிருந்தே நெருப்பாறு. யூதமதம் அதனை ஓட ஓட விரட்டியது, கிறிஸ்தவம் வளர்ந்தது அந்நாளைய உலகின் ஒரே பெரும் வல்லரசனான ரோமாபுரி கிறிஸ்துவத்தை படுத்தியபாடு […]

கச்சதீவு அந்தோணியார் கோவில்

கச்சதீவு அந்தோணியார் கோவிலில் தமிழக உரிமை புறக்கணிக்க படுகின்றது பெரும் சர்ச்சை அந்தோணியார் என்பவர் போர்ச்சுக்கலில் வாழ்ந்த கிறிஸ்தவ மகான், ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அக்கால போர்த்துகீசியர் எல்லாம் அவரையே தங்கள் கடல் பயண பாதுகாப்பு தெய்வமாக கொண்டிருந்தனர் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு பத்திரமாக வந்தபின் அந்த நம்பிக்கை கூடிற்று, தமிழக கடற்பரப்பிலும் வட இலங்கையிலும் போர்த்துகீசியர் ஆண்ட காலத்தில் அந்த நம்பிக்கை இங்கும் வந்தது, கடலோடும் மீணவர்களின் தெய்வமாக மாறிப்போனார் அந்தோணியார் போர்த்துகீசியர் சென்றபின்னும் இலங்கை, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications