பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யார் மூவரசர்கள்?

இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுகூட இந்தியருக்கு அர்பணிக்கபட்ட ஆலயமாக இருக்காது, எல்லாமே இஸ்ரேலிய ஐரோப்பிய கிறிஸ்தவருக்கு அர்பணிக்கபட்டதாகவே இருக்கும் அது கத்தோலிக்கமோ, பிரிவினையோ இந்த மண்ணின் மைந்தர் பெயரில் ஒரு ஆலயமும் இல்லை ஆனால் ஒரே ஒரு இடத்தில் அப்படி விசித்திரமாக அமைந்திருக்கின்றது, நெல்லைமாவட்டம் கூத்தன்குழியில் மூவரசர் ஆலயம் யார் மூவரசர்கள்? இயேசு பிறந்தபொழுது மூன்று ஞானிகள் கிழக்கே இருந்து பார்க்க வந்தார்கள் என பைபிள் சொல்கின்றது அல்லவா? அந்த ஞானிகள், வெறும் வால்நட்சத்திரத்தை கண்டு […]

இந்த ஜெருசலேமினால் எவ்வளவு சர்ச்சைகள்?

இயேசு பிறந்த பெத்லகேம் இன்று பாலஸ்தீனத்தில் உள்ளது எனினும் அங்கு கிறிஸ்மஸ் கொண்டாட தடையில்லை. அவர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடுகள் எல்லா காலமும் நடைபெறும் ஆனால் இம்முறை ஜெருசலேம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பதால் வழக்கமான கொண்டாட்டத்தை பாலஸ்தீனில் கொண்டாடமாட்டார்களாம், ஆனாலும் அந்த கிறுக்கு டிரம்ப்தான் மோசம், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் எல்லாம் நமக்கு ஆதரவுதான் ஆக கொண்டாடலாம் என ஒரு பிரிவு சொல்கின்றது இந்த ஜெருசலேமினால் எவ்வளவு சர்ச்சைகள்? முதலில் நெபுகாத் நேச்சர் என்பவர் […]

யூதர்களின் அரசன் இன்னும் வரவில்லை என்றே யூத இனம் கருதுகின்றது

அந்த யூத இனம் அவ்வப்போது வாழ்வதும் சில நேரங்களில் கட்டி வைத்து அடிவாங்கும் விதியினை கொண்டது. ஹிட்லர் அடித்தது மட்டும்தான் நமக்கு தெரியும், ஆனால் வரலாறு முழுக்க அவர்கள் அப்படி வாங்கிகொண்டேதான் இருந்திருக்கின்றார்கள் அப்படி வாங்கும்பொழுது அவர்களின் கடவுள் ஒரு உறுதிகொடுத்தார், உங்களுக்கு ஒரு பெரும் அரசர் வருவார் , விடுதலை கொடுப்பார் உங்களை வாழ்வாங்கு வாழவைப்பார். நீங்கள் படும் அடிக்கெல்லாம் காரணம் உங்கள் பாவம், அவர் உங்களை பாவத்திலிருந்து விடுவிப்பார் என உறுதிகொடுத்தார் அப்படி வந்தவர் […]

அவர்களுக்கு குரான் உமக்கு பைபிள் அவ்வளவுதான் வித்தியாசம்

ஒரு நண்பர் வந்தார், வந்து நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள் ஆனால் பைபிள் பற்றி மட்டும் உனக்கு அறிவே இல்லை. அதெல்லாம் சத்தியம் அதனை உணர்ந்து உண்மையினை எழுது என சொல்லிவிட்டார் இதுதான் சிக்கல் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தில் ஆணித்தரமான நம்பிக்கை உள்ளது, அதனை தகர்க்கும்படி சொன்னால் உடனே ஏய் நீ பொய்யன் என சொல்லிவிட்டு ஓடுகின்றார்கள் இந்த கிறிஸ்தவ வெறியரும் அப்படித்தான் எது அய்யா சத்தியம்? இயேசு யூதமதத்தை சாடினார், அவர் புதுமதம் கிளப்பியவர் அல்ல […]

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள்…

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள். உலக வரலாற்றை எல்லாம் தேடியவன் தோமாவின் வரலாற்றை தேடாமல் இருப்ப்போமா? இயேசுவின் 12 சீடர்களில் தாமஸ் எனும் தோமையாரும் ஒருவர், எங்கோ பாமரராய் சுற்றி திரிந்த அவரை இயேசு சீடராக்குகின்றார் ஆனால் இயேசு உயிர்த்ததை நம்பமாட்டேன் என அடம்பிடித்தபொழுது இயேசு வந்து இதோ என் காயம் என காட்டி அவரை நம்பவைத்து முழுமையாக ஆட்கொண்டார் இத்தோடு பைபிள் புனித தாமஸ் என்பவரை பற்றி முடித்துகொள்கின்றது, அதன்பின் […]

சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்

அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை. யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர் அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், அந்த சமூகத்தின் தனக்கான தூயபாதையினை தேர்ந்தெடுத்தார், முதலில் அவரை விரட்டினாலும் பின் சமூகம் அவரை ஏற்றுகொண்டது அவர் பின் […]

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா?

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா? நிரூபிக்க முடியுமா என பலர் சவால் விடுகின்றார்களாம் இதனை எழுத தொடங்கினால் அது மிகபெரும் பாகமாக வரும், அவ்வளவு விஷயம் இருக்கின்றது என்பதால் மிக சுருக்கமாக சொல்லிவிடலாம் வேதகாலம் என்பது இக்காலம் என கணிக்கமுடியா அளவு பழமையானது அன்றே தோன்றிவிட்டது இந்துமதம். அதன் வீச்சு அரேபியா முதல் சீனா வரை பரவியிருந்தது 6 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பிள்ளையார் சிலைகள் பாகிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கபட்ட விஷயம் உண்டு, சிந்துசமவெளி ஆராய்ச்சியில் […]

சர்ச்சுக்குள் இது இந்து தேசம் என பாடவேண்டும்

ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு செல்லவேண்டும், சென்றால் பாடவேண்டும். அவர்கள் ஆதிகால கிறிஸ்தவசபை ஆதிகாலம் என்றால் 1950கள் அப்பொழுது உள்ள தமிழ்பாடல்கள்தான் இங்கு பாடபடுகின்றன, பெர்க்மான்ஸ் இம்சைகள் எல்லாம் இல்லை ஒரு புத்தகத்தை கொடுத்து உங்களுக்க்கு தெரிந்த பாடலை தெரிந்துவாருங்கள் என கொடுத்தார்கள், பாடலை பாடுவது சிக்கல் அல்ல அதன் அர்த்தத்தையும் சொல்லவேண்டும் காரணம் அங்கு தமிழ்பேசுவார்களே தவிர, ஆழபொருள் தெரிந்தவர்கள் இல்லை என்பதால் பாடலை விளக்கியும் சொல்லவேண்டும் அதில் அழகான பாடல்கள் இருந்தன, சமஸ்கிருதம் கலந்த அக்கால […]

கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்

இன்று கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள். பிரிவினைகளுக்கு இதெல்லாம் கிடையாது, பைபிளில் இல்லாத ஒன்றையும் கடவுளே சொன்னாலும் கவனிக்காத கூட்டம் அது இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உரித்தானவர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள், கத்தோலிக்க பீடம் சொல்லும் கட்டளை அது. கிறிஸ்தவமரபு படி சிறிய பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளோர் அவர்களுக்காக ஜெபித்தால் அவர்கள் பரலோகம் செல்வார்கள் எனவும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications