பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 17

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 17 ராஷசன் மனைவியிடம் இருந்து தன் உளவாளி அடித்து வந்த மோதிரத்தை வைத்தபடி என்னென்ன செய்யலாம் என ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான் சாணக்கியன். பொதுவாக அவன் சந்திரகுப்தனின் அரசவைக்கு அடிக்கடி செல்வதில்லை. முக்கிய கூட்டம் என்றால் செல்வான், அங்கும் அதிகம் பேசமாட்டான், நடப்பதை கவனித்துக் கொண்டே ஒரு புன்னகையினைச் சிந்திவிட்டு நகர்ந்துவிடுவான். எல்லோரும் ஒருசேர ஆலோசனை கேட்டால் சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்வான், மற்றபடி அவனை அவையில் அடிக்கடி காணமுடியாது. அவனுக்கென […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 16

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 16 சாணக்கியன் அந்த “சுபேதன்” எனும் வைத்தியன் விஷ குளிகைகளுடன் வந்திருப்பதை அறிந்தும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. மெல்லப் புன்னகைத்தவன் சந்திரகுப்தனை நோக்கிச் சொன்னான். “சந்திரகுப்தா, நீ நெடுநாள் வாழும் மூலிகை குளிகையினைக் கொண்டு வந்திருக்கின்றான் இந்த வைத்தியன், இப்படிப்பட்ட நல்லவர்கள் கிடைப்பார்களா? நீ இன்னும் நீண்டநாள் வாழ இவர்களைப் போன்ற நல்லவர்கள் வாழ்ந்தால்தானே நல்லது, அதனால் அவர்களும் வாழட்டும் அவனையும் உண்ணச்சொல்” என்றான். சந்திரகுப்தனும் “ஆம், ஐயா நீங்களும் சிறிது உண்டுவிட்டு […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 15

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 15 இரவில் அந்த யானையில் சென்றது சந்திரகுப்தன் அல்ல. மாறாக, வைரோதகன். சாணக்கியன் ஏதோ நடக்க இருப்பதை ஊகித்து அதைப் பரிசோதிக்க சந்திரகுப்தன் அரண்மனைக்கு வருகின்றான் என அறிவித்த ஊர்வலத்தில் பட்டத்து யானையில் வைரோதகனை அமர வைத்திருந்தான். முன்பே “ஐயா வைரோதகா, நாம் இப்போது அரண்மனைக்குள் செல்ல இருக்கின்றோம், இந்த மகத நாட்டில் இனி பாதி ராஜ்ஜியம் உன்னுடையது அல்லவா? அதனால் நீயும் இந்நாட்டின் அரசன் அல்லவா? அதனால் நீயும் பட்டத்து […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 14

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 14 மலையகேது அரசவையில் பெரும் இடம் பெற்றான் ராஷசன்.அவனின் அறிவுக் கூர்மையும், அவன் சொன்ன வியூகங்களும், எடுத்துரைத்த நீதிகளும், இன்னும் பலவும் நிச்சயம் அவன் ஒரு மாபெரும் ராஜதந்திரி என்பதைச் சொன்னது. உண்மையில் அவன் மாபெரும் அறிவாளியாக இருந்தான். அந்த அறிவினை எல்லாம் வஞ்சகம் எனும் விஷம் பாழாக்கியிருந்தது. அந்த வஞ்சகம் சந்திரகுப்தனுக்கு எதிரான விஷமாய் இறுகியிருந்தது. சந்திரகுப்தனைக் கொன்று சாணக்கியனைத் தனிமைப்படுத்தி விரட்டிவிட்டு மீண்டும் மகதநாட்டை கைப்பற்றுவதிலே அவன் கவனமாய் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 13

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 13 சாணக்கியன் தீவிர ஆலோசனையில் இருந்தான். அடுத்துச் சந்திரகுப்தனுக்குப் பட்டாபிஷேகம் செய்தாக வேண்டிய நிலை, ஆனால் பகை முழுக்க அகன்றதா என்றால் இன்னும் இல்லை. முழுக்கப் பகை முடியா இடத்தில் புதிய அரசு என்பது பெரும் ஆபத்து என்பதைச் சாணக்கியன் அறிவான். குழப்பமான காலகட்டத்தில் முழுவதும் பகை அகற்றாமல் பழைய கணக்கை முழுக்க முடிக்காமல் ஒரு அரசு அமைதல் கூடாது. (இந்தியா தன் சுதந்திரத்தில் செய்த முழுப் பெரும் தவறு அதுதான். […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 12

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 12 சாணக்கியன் அந்தப் பெண்ணை பார்த்தவுடனே அவளுக்குள் இருந்த நாகக்கன்னி தன்னை அடையாளம் காட்டிற்று, தவசிகள் முன் இப்படியான சக்திகள் கட்டுப்படும். முழுத் தவசிமுன் பிரபஞ்சத்தின் சூட்சுமச் சக்திகள் கட்டுப்படும், பக்குவப்பட்ட ஆன்மாவின் சக்தி முன் அப்படியான சக்திகள் அடங்கும். இது விதி. ஆத்மாவின் சக்தி அது. அப்படியான சாணக்கியன் முன் அந்த நாகக்கன்னி பணிந்தது, தான் யார் என்பதையும் தன்னை ஜீவசித்தி அழைத்த காரியத்தையும் சொன்னது. சாணக்கியன் யோசித்தான். காரணம், […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 11

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 11 எப்படியாவது சந்திரகுப்தனை ஒழிக்க வழி தேடிக் கொண்டிருந்தான் ராஷசன், சந்திரகுப்தனிடம் பாடலிபுத்திரம் சிக்கினால் தன் நிலை உடனே காலி என்பதையும், சந்திரகுப்தன் தன்னை ஒழித்துக்கட்டிவிடுவான் என்பதையும் உணர்நதவன் முந்திக் கொள்ள முடிவெடுத்தான். ஆனால், அது சாத்தியமில்லை, சந்திரகுப்தனைச் சாணக்கியன் மிகுந்த காவலில் வைத்திருந்தான், மிக வலுவான காவல் படையும் சோதனையும் அவனைச் சுற்றி இருந்தது. உண்ணும் உணவைக் கூட சோதித்தபின்பே உண்ண சந்திரகுப்தன் அனுமதிக்கப்பட்டான். அவனே இனி அரசன், அவன் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 10

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 10 யுத்தம் மிகத் தீவிரமாக நடந்தது. எல்லா இடமும் நந்தர்கள் சேனை வலுவாகத்தான் இருந்தது. கோட்டையினை முற்றுகையிடும் போரில் அது இயல்பானது. காரணம், ஒரு பெரிய அரசு படைபலமிக்க அரசு எதரிகள் சூழ வரும்போது அப்படித்தான் வலுத்து நிற்கும், முழுப் பலத்தோடு நிற்கும். சாணக்கியனுக்கு அது தெரிந்ததுதான். பல தந்திரங்களைச் செய்து எதிரிகளைக் குழப்பினான். அந்த குழப்பத்தையும் மீறி பெரும் வலுவோடு நந்தர் சேனை நின்றது. ஒரு இடத்தில் கூட பலவீனமில்லாமல் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 09

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 09 வைகாசி விசாகம் நெருங்க நெருங்க சாணக்கியன் மிகுந்த பரபரப்பானான், காரணம் அன்று படைகள் சென்று போரை தொடங்காவிட்டால் ஜீவசித்தியின் வாக்குமேல் அந்த ராஷசனுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும், அது பெரும் ஆபத்து. இதனால் அவன் அவசரமாக ஆலோசனைகளைச் செய்தான். ஒரு பக்கம் எப்படியாவது நந்தர்களை ஒழித்துச் சந்திரகுப்தனுக்கு முடிசூட்ட வேண்டும் என்பது சாணக்கியனின் திட்டம், அவன் இலக்கு அது ஒன்றே. அதே நேரம் யாரையும் முழுக்க நம்பாதே, இந்த உலகில் […]

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 08

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 08 சாணக்கியன் அடுத்தக் கட்டத்துக்குச் சிந்தித்தான். அதன்படி இனி ராஜ்ஜியம் ஒரு குழப்பத்தில் சிக்க வேண்டும், அப்போது நந்தர்களைக் கொல்ல வேண்டும். ராஜ்ஜியம் குழப்பத்தில் தானாக சிக்காது. அப்படிக் குழம்பும்படி ஒரு காரியம் நடக்க வேண்டும், உள்நாட்டு குழப்பத்தை எளிதில் தூண்டலாம். ஆனால், அது வேற்றுநாட்டு அரசன் பாய்வதற்கு காரணமாகிவிடும். இப்படிப் பலவகையில் அவன் யோசித்தான். நந்தர்கள் கொல்லப்பட்டு, ஆட்சிமாற்றம் ஏற்பட அரசு தோற்க வேண்டும். நந்தர்கள் அழிய வேண்டும். அப்படியானால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications