பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா சாவித்திரி ராமகிருஷ்னன்

முகநூலில் ஏராளமான நண்பர்கள் கிடைத்ததை போல நல்லதொரு தாயும் கிடைத்தார் முதிர்ந்த வயது, அதற்கேற்ப‌ பக்குவபட்ட மனநிலை, எல்லோரையும் தன் பிறப்பு போல் நோக்கும் மனோபாவம் என மிக உயர்ந்த மனதிற்கு சொந்தக்காரர் அவர் Savithri Ramakrishnan மிக சிறந்த பக்திமான், பக்திகேற்ப வார்த்தையிலும் செயலிலும் அவ்வளவு மென்மை. அவரை நட்பாக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அந்த தாயிடம் அவரின் உயர்ந்த பண்பை விட மிஞ்சி நிற்பது அற்புதமான ஆங்கில அறிவு உண்மையில் ஆங்கிலம் மிக பண்பாகவும் […]

கௌசல்யா கணவர் சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு

கவுசல்யா என்பவரின் கணவர் சங்கர் என்பவர் கொல்லபட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு. ஒருவருக்கு ஆயுள். ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம் இனி மேல்முறையீடு கருணைமனு என ஏகபட்ட விஷயங்கள் உண்டு, கூடுமானவரை யாரும் தொங்க வாய்ப்பில்லை பல்லாண்டு கழித்து வாழ்த்தி அனுப்புவார்கள். அவர்கள் வந்து அடுத்த கலப்பு திருமணத்தை மிரட்டுவார்கள் இந்த 6 பேரில் கவுசல்யாவின் தந்தையும் ஒருவர் என்பதுதான் பெரும் சோகம் நீதிபதி தன் தீர்ப்பில் இது திட்டமிட்ட […]

போதை பழக்கம் எந்த அளவு நாசமாக்கி இருக்கின்றது

சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் செலவுக்கு பணம் தராததால் தனது தாயை கொலை செய்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். அந்த சிறுமியினை கொன்றுவிட்டு இவர் சிறையில் இருந்தபோது இவர் ஜாமீனில் வர அந்த பெற்றோர் சொத்துக்களை விற்று செலவழித்தனர் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் பிள்ளை பாசமே அவர்களுக்கு சாவினையும் கொடூரமாக கொண்டு வந்திருக்கின்றது. போதை பழக்கம் அந்த அளவு அவர் குடும்பத்தையும், இவரால் அந்த ஹாசினி […]

இதுதான் உணவு உலகம் கண்டுவிட்ட முன்னேற்றமாம்…

வயது ஏற ஏற பலவிதமான கலக்கங்கள் ஏற்படுகின்றன, திடீரென கல்லூரியில் கூட படித்தவன் காலி என திகைப்பூட்டும் செய்திகள் வருகின்றன, அதை தாண்டி செல்வதற்குள் பள்ளியில் கூட படித்தனுக்கு ஹார்ட் அட்டாக் தெரியுமா, அவனுக்கு மஞ்சள் காமாலை இருவருமே இல்லை என வரும் செய்திகள் திகைப்பூட்டுகின்றன‌ சந்தேகமே இல்லை இன்றுள்ள உணவு பழக்கமும், எண்ணெயும், உடற்பயிற்சி இல்லாமையுமே இவற்றிற்கு எல்லாம் காரணம். இவைகளில் கொஞ்சமேனும் கவனம் வேண்டும் என்ற அச்சம் வந்துவிட்டது நல்ல மருத்துவரிடம் கேட்டால் ஆடோ […]

எழுத தொடங்காதே …

எழுத தொடங்காதே, எழுத்து என்பது சொரி , சிரங்கு போன்றது , அது ஒட்டினால் விடாது. எழுதி இச்சமூகம் திருந்தபோவதுமில்லை எழுதி நீ உருப்பபடபோவதுமில்லை என்றார் ஒரு அறிஞன் அது உண்மைதான் போலிருக்கின்றது, அதை எழுது, இதை எழுது என ஏதோ ஒன்று கழுத்தை பிடித்து குனிய வைக்கின்றது, இது சரிவராது அதனால் இந்த முகநூலை விட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்கின்றது அப்படி ஓடிவிட்டால் சங்கத்தை யார் காப்பாறுவது எனும் கடமை உணர்ச்சியில் தடுமாறிகொண்டிருக்கின்றேன்.  

காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று

இங்கெல்லாம் வாகனம் செலுத்த தெரியாவிட்டால் அவன் மாற்று திறணாளி அல்லது உடற்பேறு குறைந்தவன். எங்கு சென்றாலும் அவனுக்கு சிலரின் உதவிகள் தேவை இவ்வளவு காலமும் அப்படியே இருந்தாயிற்று, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? இனி தாக்குபிடிக்க முடியாது என்றவுடன் காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று சென்றவுடன் இது கிளச், இது பிரேக் என சொல்லிதருவார்கள் என சென்றால் ஜெயமோகன் எழுதிய புத்தகத்தின் அளவுக்கு ஒன்றை தூக்கி கொடுத்து இதை படி, இவை எல்லாம் சாலை வழிமுறைகளும், வழிகாட்டிகளும் […]

மலேசியாவில் ஒரு திருமணம்….

இங்கு திருமணங்களை காண்பது சுவாரஸ்யமான விஷயம், காரணம் மணமக்கள் நல்ல புரிதலில் உள்ளவர்கள் என்பதால் மகிழ்ச்சியாய் இருப்பார்கள், பெற்றோர் வரதட்சனை இல்லை என்பதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நல்ல உணவு என்பதால் நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி… எல்லா திருமணங்களும் மிக சரியாக சனிகிழமைதான் நடைபெறும், அன்றுதான் எல்லோருக்கும் விடுமுறை என்பதால் அதுதான் கரிநாள் ஆயினும் கல்யாண நாள் அப்படி ஒரு திருமணத்திற்கு சென்றாயிற்று, மணமகனின் தாத்தா திராவிட கழகத்தவராம், (பிழைக்க குடியேறிய நாட்டில் அதுவும் வெள்ளையன் ஆள , […]

வேலை வெட்டிக்கே செல்லவேண்டாம்

 இந்த பிறவியில் சர்வேஸ்வரன் எம்மை படைத்துவிட்ட கோலம் இதுதான்….   Like நீங்கள் நாட்டுபற்று கொண்டு சில உண்மைகளை சில‌ பதிவுகளாக‌ இட்டால், உடனே ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பணம் அனுப்பி ஆதரிக்கும் வேலை வெட்டிக்கே செல்லவேண்டாம் , அடிக்கடி இப்படி உல்லாச தளங்களுக்கு எல்லாம் அனுப்புவார்கள் அங்கு டோக்லஹாம் யுத்தம் தவிர்க்க ஒரு “இந்தோ சீன ” ஒப்பந்தமும் இடபட்டது.  

துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான்

தாவுத் இப்ராகிம் என்பவர் சத்தியமாக துபாயில்தான் இருக்கின்றார், 100% உறுதியாயிற்று. ஆனால் பாலா எனும் பெயரில் முகமறைவாக இருக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியிருப்பார் போலிருக்கின்றது இல்லாவிட்டால் இவ்வளவு போன்களும், செய்திகளும் சர்வதேச காவலர்களிடம் இருந்து வராது “நான் யார் தெரியுமா? பாலா யார் தெரியுமா? அவர் தொடர்பு தெரியுமா? நான் உளவுதுறையில் எப்படிபட்டவன் தெரியுமா? உன் தெருவுக்கு அடுத்த தெருதான் எனக்கு சேவ் ஹவுஸ். எத்தனைபேரை மலேசியாவில் தூக்கியிருக்கின்றோம் தெரியுமா?” என ஏகபட்ட மிரட்டல்கள் […]

நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் எனக்கே வெட்கமாகவும் அச்சமாகவும் இருகின்றது நானும் ஏதோ எழுத்தாளன் போல பல நண்பர்கள் புத்தகம் எல்லாம் அனுப்பி வைத்து உதவிகொண்டிருக்கின்றார்கள் சமீபத்தில் சரவணன் எனும் நண்பர் அனுப்பியிருந்தார் அதனை வாசித்து முடிக்கும் முன் கு.பா.இளங்கோவன் எனும் பெரியவரும் சில புத்தகங்களை அனுப்பியிருந்தார் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் உணவோ நீரோ கூட அருந்தாமல் மூழ்கிவிடுவது வழக்கம், குஷ்பூவே வந்தாலும் பார்க்க தோன்றாது ஆனால் கு.மா.பா இளங்கோவன் அவர் தந்தையின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications