பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்

சொந்த ஊர் என்பது யாராலும் மறக்க முடியாதது, திரும்ப திரும்ப நெஞ்சில் மோதும் நினைவு அலை அது. அப்படி எங்கள் கிராமத்திற்கும் ஒரு முகநூல் பக்கம் உருவாக்கினார்கள், நெஞ்சில் தேங்கி இருந்த நினைவுகளை எல்லாம், அந்த ஊரின் வரலாற்றையும் , பல சம்பவங்களையும் அதில்தான் பதிந்திருந்தேன் இது யாரோ குறுக்குமூளைக்காரன் மூளையில் விபரீத சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. இவன் ஊரின் அமைதியினை குலைக்கின்றான், பெரும் கலவரத்திற்கு திட்டமிடுகின்றான், உடனே காவல்துறையில் சிக்க வைக்கவேண்டும் என சிலர் கிளம்பினார்கள். (இருப்பது […]

களைப்பேயின்றி கலோரிகளை குறைக்க சைக்கிள் மிக சிறந்த வழி.

1980களில் வாடகை சைக்கிள் அமோகம், கிராமங்களை இணைக்கும் விஷயமாக அதுதான் கருதபட்டது. தமிழகத்தின் பிராதன தொழிலாக அதுவும் இருந்தது. காலமாற்றத்தில் அந்த தொழில் அடியோடி ஒழிந்தது. கொஞ்சமும் அடையாளமில்லை இப்பொழுது அதனை வேறு விதமாக உலகெல்லாம் புதுப்பிக்கின்றார்கள், தொழில்நுட்பம் அந்த வித்தை எல்லாம் செய்கின்றது. அதாவது இக்காலத்தில் பெருகியிருக்கும் விஷயம் மூன்று , முதலாவது சாப்பாட்டு கடைகள் அடுத்து அது செரிமானம் ஆக ஜிம் போன்ற பயிற்சி நிலையங்கள், இதனால் பெருகும் நோய்களுக்கு சென்று படுத்துகொள்ள மருத்துவசாலைகள். […]

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன, யாரெல்லாமோ எடுத்து போட்டுகொள்கின்றார்கள். நல்லது அப்படியே இந்த குஷ்பூ பதிவுகளை யாராவது அவரிடம் சேர்த்தால் சங்கம் அவனுக்கு மிகுந்த நன்றியுடையதாக இருக்கும் ஆனால் ஒருவருக்கும் எம் நன்றிக்குரியவனாக இருக்க விருப்பமே இல்லை என்பது மட்டும் புரிகின்றது.

நோக்கம் நிறைவேறியதும் அவன் வாழ்வு முடிகின்றது

பெரியாரும் கலைஞரும் கடவுளை திட்டினதால் தான் மூத்திரப்பையோட இருக்கிறார்கள் , அண்ணாவிற்கு புற்றுநோய் வந்தது என பல ஆன்மீகவாதிகள் வாய்வலிக்க சொல்லி திருப்தியடைகின்றார்கள் ஆன்மீகம் பேசிய ரமணருக்கு கூடத்தான் புற்றுநோய் வந்தது, இன்னும் ஏராளமான சந்நியாசிகள் இளவயது நோயிலே இறந்தார்கள். விவேகானந்தர் சாகும்பொழுது என்ன வயது? அவர் ஆத்தீகம் பேசி செத்தாரா? சங்கரரும், திருஞான சம்பந்தரும் கூடத்தான் சிறுவயதிலே மரித்தார்கள். முத்துராமலிங்க தேவரை விட பெரும் முருக பக்தனை காட்டிவிட முடியுமா? அவர் என்ன நூறாண்டு வாழ்ந்தாரா? […]

மகளிடமிருந்து வந்த விபரீத கோரிக்கை

டிவியில் ஓடும் தமிழ் சினிமாக்களை கண்டு இதுவரை அதுபோல் டிரஸ் வேண்டும், பொம்மை வேண்டும் என சொல்லிகொண்டிருந்த மகளிடமிருந்து விபரீத கோரிக்கை வந்தது டிவி சினிமாவில் ஒரு திருமணகாட்சி ஓடிகொண்டிருந்தது, சட்டென்று கேட்டுவிட்டாள். “அம்மா, நான் பெரிய ஆளா ஆனதும், காலேஜூக்கெல்லாம் போய் படிச்சு முடிச்ச பின்னாடி இது போல ஒரு பையனை வாங்கி தருவீங்களா?” எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது, பாகம்பிரியாள் கொஞ்சமும் அதிர்ச்சியடையவில்லை அமைதியாக சொன்னாள் “எனக்கு எங்கப்பா வாங்கி தந்த மாதிரி, நானும் உனக்கு […]

மீண்டும் தங்கை மகன் அழைத்தான்

கொஞ்சநாளைக்கு பின் தங்கை மகன் அழைத்தான், இம்முறை அவனின் கோரிக்கை வித்தியாசமாக இருந்தது “ஏலேய் மாமா, இந்த அம்மா காசு குறையா கொடுத்து சின்ன கிளாக் வாங்கிட்டால‌ அதுல 12 மணி வரைக்கும்தாம்ல இருக்கு, 13,14,15 எல்லாம் இல்லல.. அதுனால எப்பவும் இவா நேரம் இல்லண்ணு சொல்லிட்டே இருக்கால,ஸ்கூலுக்கு கிளம்பும்போது திட்டுதால, விளையாடும் போதும் திட்டுதால, 12 மணியோட இவ கிளாக் முடிஞ்சிறுதுல, அதுக்கு பிறவு 1 , 2ண்ணுதாம்ல வருது நீ நிறைய பைசா குடுத்து […]

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி இன்றோ ஒரே வகை அரிசிக்கு எல்லா வகை குழம்புகளையும் பொருத்தமில்லாமல் ஊற்றி உண்கின்றோம் நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இந்த ஞானம் எனக்கு கிடைத்துவிட்டது ஒவ்வொரு வகை குழம்பிற்கும் ஒவ்வொரு வகை அரிசி சோறுதான் பெரும் சுவையினை கொடுக்கின்றது, இந்த பொருத்தம் மிக முக்கியம் பொன்னி அரிசிக்கு வத்த குழம்பு, சம்பா அரிசிக்கு மீன் குழம்பு, புழுங்கல் அரிசிக்கு சாம்பார்,ரசம், சீரக சம்பா அரிசிக்கு கத்தரிக்காய், பாசுமதி […]

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

நேற்று இரவு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இந்த நொடிவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள் உலகெல்லாம் இருந்து நூற்றுகணக்கான நண்பர்கள் வாழ்த்துவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சி எனினும் இவர்களின் அன்பினை பெற அப்படி என்ன செய்துவிட்டோம் , இவர்களின் நம்பிக்கையினை தக்கவைக்க என்ன செய்யபோகின்றோம் எனும் திகைப்பும் மேலோங்குகின்றது உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, எங்கோ கிராமத்தில் பிறந்து, இன்று தொலைதூரத்தில் எங்கோ வசிக்கும் ஒரு சாமாயனுக்கு இத்தனை ஆயிரம் வாழ்த்துக்கள் என்பது அவனுக்கு மிகபெரும் விஷயம்.. உங்கள் எல்லோரின் அன்பையும் , […]

நண்பர் நெல்லைக்காரர் …..

பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneri அவர்களுக்கு இன்று பிறந்தநாள் முகநூலில் எமக்கு நண்பர்கள் பல உண்டு எனினும், நம் மீது தனி நட்பு கொண்டவர் இந்த பெரியவர். எம் பதிவுகளை நான் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வது கிடையாது, மனதில் தோன்றுவதை எழுதி வைத்துவிட்டால் மறுபடி வாசிப்பது கூட இல்லை நேரமின்மை, அவசரமாக பதிவிட்டுவிட்டு வேறுவேலைகளுக்கு செல்லுதல், இதனை பாதுகாத்து என்ன ஆக போகின்றது எனும் அலட்சியம் என பல காரணங்களால் அவற்றை புரட்டி பார்ப்பதில்ல்லை ஆனால் நம் பதிவுகளையும் எடுத்து […]

நம் வீட்டிலும் ஒரு கவிஞன் உருவாகி கொண்டிருக்கின்றான்..

எனக்கொரு தங்கையும் அவளுக்கொரு மகனும் உண்டு, 5 வயது இருக்கும், அவன் பேசினால் கொடு மலையாளம் போல “நங்யா முங்யா” என்றிருக்கும், ஒன்றும் புரியாது, இவ்வளவிற்கும் தமிழில் தான் பேசுவான் 15 நிமிடம் போனில் பேசினான், “எலேய் மாமா, சன் சுடுதுல, சன் ரேல்ல, மேகம்ல்ல்ல..திட்டிச்சில்ல.. வலிச்சில்ல…அழுதுட்டுல்ல…மழைல்ல்ல” என சொல்லிகொண்டிருந்தான் , ஒன்றுமே புரியவில்லை, சொல்லிபார்த்துவிட்டு கோபத்தில் சென்றுவிட்டான், வழக்கம் போல அவனின் அன்னை விளக்கினாள் அதாவது அவர் கவிஞராகிவிட்டாராம், கவிதை சொல்லியிருக்கின்றார் சூரியன் அவனை வெயிலால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications