பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சோழனை கண்ட‌ மஹாவலி செல்வன்…

மணிசார் சொன்ன சோழர் கதையான பொன்னி படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்திருக்கின்றார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சோழர் குடும்பம் போல ராஜபக்சே குடும்பமும் பெரிது, ஒரு வகையில் சோழகுடும்ப சண்டையெல்லாம் அவர் சொந்த வரலாற்றிலும் உண்டு, பாண்டிய தரப்பில் புலிதலைவன் பிரபாகரனை வைத்தால் விஷயம் சரியாக பொருந்தும் என்பதுதான் சுவாரஸ்யம் படம் லண்டன்வாழ் இலங்கை தொழிலதிபரும் ராஜபக்சே கூட்டாளியுமான சுபாஷ்கரன் தயாரிப்பு என்பதால் ராஜபக்சே செல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம் படம் பார்த்து வெளிவந்த‌ அவர் […]

ஆச்சார கோவை : 74

“நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக மீட்டும்வினாவற்க சொல் ஒழிந்தக்கால்” இப்பாடல் குரு முன்னால் எப்படி அடங்கி இருக்கவேண்டும் என்பதை சொல்கின்றதுகுருவினை கண்டால் எழுந்து நிற்கவேண்டும் அவர் அமர சொன்ன பின்புதான் அமர வேண்டும், அவர் உத்தரவின்றி எழுந்து செல்லுதல் கூடாது, குரு சொல்வதை கவனமாக கேட்டு மனதில் பதிய வைக்க‌ வேண்டும், அவர் போதித்து முடித்தபின் மறுபடியும் அதனை கேட்க கூடாது என்பது பொருள் குருவின் மனதில் ஒரு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 06

“துல‌ங்கிய தூண்டா விளக்கொளி காணில்விளங்கிய வீடாம் விரைந்து” தூண்டா விளக்கு என்றால் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த விளக்கு, குண்டலம் போன்ற அமைப்புடன் இணைந்திருக்கும் விளக்கு அது, அதில் விளக்கை ஏற்றிவைத்தால் யாரும் தூண்டாமல் அந்த விளக்கு எரியும், நந்துதல் எனும் திரி நகர்த்தல் இல்லாமல் எரிவதால் அதுதான் நந்தா விளக்கு இது கோவில் கருவறையில் தொங்கவிடபட்டிருக்கும், இன்னும் பல இடங்களில் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இனி குறளை காணலாம் தொங்கி கொண்டிருக்கும் விளக்கில் எரியும் சுடர் போல […]

சுப்பிரமணிய சந்திரசேகர்

அவர் கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி, அதுவும் தமிழ் வம்சாவளி தமிழ் விஞ்ஞானி, நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் என் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது ராம்சாமி, அண்ணா, கருணாநிதி என பிம்பம் உள்ள மாகாணத்தில் இவரை போன்றவர்கள் தெரியாது, அதுவும் பிராமணனாக இருந்தால் சுத்தமாக தெரியாது அந்த விஞ்ஞானியின் பெயர் சுப்பிரமணிய சந்திரசேகர் அவர் தமிழக பிராமண குடும்பத்து பிறப்பு, 1910ம் ஆண்டு பிறந்தார், பிரபல அறிவியல் மேதை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 05

“சங்கு நிறம்போற் றவளவொளி காணில்அங்கையி னெல்லியே யாகும்” இக்குறள் “சங்கு நிறம் போற்றவள்ச் ஒளி காணில் அங்கையிம் நெல்லியே ஆகும்” என பிரிந்து பொருள் தரும்மூச்சுகாற்றினை சீர்படுத்தி பிரணாயாமத்தை சரியாக செய்தால் வடகலை பிங்கலை மூச்சினை கலந்து சுழிமுனை நாடியினை துலக்கினால் அங்கு ஆத்ம ஒளியினை காணலாம், சங்கின் நிறம் போன்ற அந்த வெண்சுடரை உள்ளங்கையில் நெல்லிக்கனி காண்பதை போல் காணலாம் என்பது குறளின் பொருள் “ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்ஏரொளி யக்கலை […]

பழமொழி நானூறு : 13

“கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்‘நல்லேம் யாம்’ என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-சொல்லாக்கால் சொல்லுவது இல்” கல்வி அறிவு இல்லாதவன் தன் நுட்பமான விஷயத்தை சொல்லமுடியாது,ஒருவன் தான் நல்லவன் என தன்னை தானே சொல்வதால் அவனை எல்லோரும் எப்படி மதிப்பார்கள்? ஒருவன் நல்லவன் என்பது அவன் நடக்கும் நடத்தையாலும் அவன் சொல்லாலும் பிறர் அறிந்து சொல்லவேண்டுமே தவிர அவனே சொன்னால் அதை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் அப்படி கல்லாதவன் தான் கற்றவன் […]

வீரப்பனார் சந்தண தொழிற்சாலை,

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? (அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவ் கொல்லபட்டபோது பெங்களூரில் குவிந்திருந்த புலிகள் ஏராளம், அந்த அளவிற்கு புலிகள் ஒரு அடைக்கல நகரமாக அதனை மாற்றி இருந்தார்கள்) […]

நேற்று தமிழக ஐகோர்ட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை சொல்லியுள்ளது, இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பான அவ்வழக்கில்

நேற்று தமிழக ஐகோர்ட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை சொல்லியுள்ளது, இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பான அவ்வழக்கில் நீண்ட நாளாக தூங்கிய அல்லது மறைக்கபட்ட உண்மை வெளிவந்திருக்கின்றது இதனை நாம் அடிக்கடி முன்பே சுட்டிகாட்டியும் இருந்தோம் இலங்கையில் இருந்து அகதியாக வந்த தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாய் உண்டு, அவ்வகையில் ஒரு வழக்கு தமிழக உச்சநீதிமன்றத்துக்கு வந்தது அதனை தொடுத்தவர் இலங்கை தமிழக தம்பதிகளுக்கு இந்திய தமிழகம் திருச்சியில் பிறந்த ஒரு வாரிசு, அவர் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 04

“பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்துளங்கொளியாந் தூய நெறி” இக்குறள் “பளிங்கு வலம்புரி பான் நிகர்த்ததாகில் துளங்கு ஓளியாம் தூய நெறி” என பிரிந்து பொருள் தரும்முறையாக மூச்சு பிராணாயாம் செய்து யோகத்தின் உச்சிக்கு செல்லும் பொழுது பளிங்கு போல் வெண்ணிற ஜோதி அககண்களில் தெரியும் அது தூய வழிக்கு சென்றதன் அடையாளம் என்பது குறளின் பொருள் இங்கு “வலம்புரி பானிகர்த்த” எனும் வார்த்தைக்கு இருபொருள் உண்டு முதலாவது அந்த வெண்ணிற ஒளி வலம்புரி சங்குபோல் வெண்மை பிரகாசமானது […]

பழமொழி நானூறு : 12

“கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்சொல்லுங்கால், சோர்வு படுதலால் – நல்லாய்வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,கனா முந்துறாத வினை” இப்பாடல் ஒரு பெண்ணுக்கு புலவர் போதிப்பதாக அமைந்துள்ளது அதாவது நற்குணங்கள் நிரம்பிய பெண்ணே, கல்லாத ஒருவன் நுட்பமான பொருளை உணர்ந்தாலும் அவனால் அதனை தெளிவாக கற்றோர் முன் சொல்லமுடியாது கேள்வி கேட்பதற்குமுன் அதற்குரிய பதில் எழுவதில்லை, ஒன்றை விரும்பிக் கனவு காணாது அதற்கேற்ற செயல் துவங்குவதில்லை அவ்வாறே, அடிப்படைக் கல்வியற்றவர் தக்க அறிவு பெற்றிருக்கவும் வழியில்லை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications