பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பழமொழி நானூறு : 02

“சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றிக்கற்றொறும், “கல்லாதேன்” என்று, வழி இரங்கி,உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல்கற்றொறும் தான் கல்லாத வாறு” தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும், வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்படவேண்டும்.இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன் றையும் கற்குந்தொறும் தான் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 04

“உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்பிறப்பின்றி வீடாம் பரம்” இக்குறள் “உறக்கம் உணர்வோடும் உயிர்ப்பின்மை அற்றால் பிறப்பின்றி வீடாம் பரம்” உறக்கத்தை குறைத்து, பசி உள்ளிட்ட உணர்வுகள் அற்றுபோகும்படி செய்து, லவுகீக உயிர்நிலை அதாவது அங்குமிங்கும் ஓடோடி திரியும் அந்த இயக்கத்தை ஒழித்து சமாதிநிலை எனும் உன்னத நிலைக்கு வந்தால் பிறப்பில்லா நிலையினை அடையலாம் என்பது பொருள் உறக்கம், பசி, இதர உணர்வெல்லாவும் உயிர்த்திருக்கின்றோம் என்பதை காட்ட அசைவும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானவை அது இன்றி வாழ்வில்லை எனும்பொழுது […]

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன்

அந்த வெற்று மாறனுக்கு சில ஆதரவுகள் கிளம்புகின்றன, அந்த காலத்தில் சோழர்கள் அபரிமிதமான பிராமண ஆதரவு கொண்டிருந்தார்களா, அந்த கரிகாலன் விவகாரத்தில் என்னதான் நடந்தது, நிரம்ப படித்தவரான பாலகிருஷ்ணன் ஐ.ஏ.ஸ் கூட ஒருமாதிரியாக பேசுகின்றாரே ஏன் என கேட்டார்கள் அன்பர்கள் நாமும் அவர் வீடியோவினை கண்டோம், சில பதில் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம் அவர் சொல்வது போல ராஜராஜசோழனும் ராஜேந்திரமும் மட்டும் யாகமோ வழிபாடுகளோ பார்ப்பனர்களுக்கு இடமும் வீடும் கொடுக்கவில்லை அது பாரத வழமையாய் இருந்தது, அதை முற்கால […]

வினோத பிறவிகள்

தஞ்சாவூர் சிவன் கோவில் பற்றியே ஆளாளுக்கு பார்ப்பான் ஆதிக்கம், அடிமைகள் வதம், வெட்டி செலவு,நிலத்தை பறித்து கட்டி, இந்து அல்லாதவன் கட்டிய கோவில் என்றெலலம் 1000 ஆண்டுக்கு முந்தைய இந்து மன்னனை பற்றியே பேசுவார்களே தவிர வேறு கட்டடங்களை காட்டுவார்களா என்றால் இல்லை 500 ஆண்டுக்கு முன் ஒரு பெர்ஷிய பெண்ணுக்காக ஆப்கானிய மன்னன் எனும் அந்நியன் இந்நாட்டு செல்வம் பல்லாயிரம் கோடியில் தாஜ்மஹால் கட்டினானே அதைபற்றி பேசுவார்களா? சென்னையில் இந்திய தொழிலாளர்களை கொண்டே பிரமாண்ட கோட்டை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 03

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 03 “சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்பவநாச மாகும் பரிந்து” இக்குறள் “சிவன் உருவந்தானாய் செறிந்தடங்கி நிற்கில் பவநாசம் ஆகும் பரிந்து” என பிரிந்து பொருள் தரும் தவத்தில் நிலைத்து ஐம்புலன்களையும் அடக்கி, சித்தம் புத்தி மனம் என எங்கும் மாயைகளையும் லவுகீக மயக்கங்களையும் அகற்றி முழுக்க சிவமயமான நினைவில் நின்றால் உள்ளும் புறமும் சிவநினைவுடன் இருந்தால் அங்கு செய்த பாவமும் கர்மாவும் […]

நவராத்திரி சிந்தனைகள் : 9.2

தத்துவங்களும் போதனைகளும் இறை நம்பிக்கையும் அன்னை சக்தியின் மாபெரும் வல்லமையினையும் விளக்கி சொன்ன நவராத்திரி போதனை பண்டிகைகளின் உச்சநாள் இந்த விஜயதசமி எனும் நன்னாள்விஜய என்றால் வெற்றி, தசம் என்றால் பத்து. பத்தாம் நாள் வெற்றிநாள் என கொண்டாடும் பெருநாள் இதுஅன்னையின் மூன்று வடிவங்கள் போல லவுகீகம், ஆன்மீகம், சூட்சுமம் என மூன்று பெரும் தத்துவங்களை சொல்லும் நாள் இது முதலாவது சூட்சும விளக்கமாக தன் பக்தர்களை மிக கொடுமைபடுத்திய அசுரனை அன்னையே இறங்கி வந்து அழித்தாள், […]

நவராத்திரி சிந்தனைகள் : 9.1

நவராத்திரி பண்டிகை அன்னை மகிஷாசூரனை கொன்றாள், ராவணனை ராமன் வீழ்த்தினான் என கொண்டாடுகின்றது இது இந்த நவராத்திரியின் தத்துவம் உண்மையில் இந்துக்களுக்கு 4 நவராத்திரி உண்டு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் வருடம் முழுக்க உண்டு, இந்த நவராத்திரிகளில் இரண்டு நவராத்திரி காலம் சிறப்பானது குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் அந்த பங்குனி சித்திரை மாத நவராத்திரி எனும் சைத்ர நவராத்திரி, வெயில்காலம் முடிந்து மழையும் குளிரும் தொடங்கும் சாரதா நவராத்திரியான […]

சுப்பிரமணிய சிவா

1884ம் ஆண்டு இதே நாளில் திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு எனும் ஊரில் பிறந்த அவர் பெயர் சுப்பராமன், பிராமண குடும்ப பிறப்பு திராவிட கும்பல் சொல்வது போல எல்லா பிராமணரும் பெரும் செல்வமும் அதிகாரமும் கொண்டிருக்கவில்லை வறுமை அங்கும் தாண்டவமாடிற்று, அப்படி வறிய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் இந்த சுப்பராமன் கொடிய வறுமையில் கல்விக்காக போராடி எங்கும் அது நிறைவுபெறாமல் திருவனந்தபுரத்திற்கு சென்று ஒரு குருகுலத்தில் சமைக்கும் வேலையினை செய்துகொண்டே கற்றார், அப்பொழுதுதான் சதானந்த சுவாமிகள் தொடர்பு […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 100

“கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்பெற்றது கொண்டு மனந்திருந்திப் – பற்றுவதேபற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்துநிற்பாரே நீணெறிச்சென் றார்” கற்றதை நன்கு தெரிந்துகொண்டு, அடக்கத்துடன், தீயனவற்றை நீக்கி, நல்லன செய்து, பெற்றிருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் திருத்தமாகப் பற்றவேண்டியதைப் பற்றி, பணி அறவழியில் நிற்க, ஒன்றாக விளங்கும் இறைவனை உணர்ந்து, நின்று ஒழுகுபவரே, நீண்ட நன்னெறியில் செல்பவர் ஆவார் என்கின்றார் குமர குருபரர்.

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 02

“அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்பிறந்துழல வேண்டா பெயர்ந்து” இக்குறள் “அறம் பாவம் ஆயும் அறிவுதனை கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து” என பிரிந்து பொருள் தரும் அறம் எனும் புண்ணியம் பாவம் எனும் தண்டனைக்குரிய காரியம் எதுவெல்லாம் என ஆய்ந்து அறியும் ஞானமான அறிவினை பெற்று அதன்படி வாழ்ந்தால் பல பிறப்புக்களாக பிறந்து உழல வேண்டிய அவசியமில்லை என்பது குறளின் பொருள் வாழும் பொழுதே அறக்காரியங்களை செய்து, தர்ம நெறிபடி வாழ்ந்து பாவங்களை விலக்கி புண்ணிய வாழ்வை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications