பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாஹேப் பதே சிங்

இந்தியாவின் சுதந்திர போராட்டம் 1650களில் வீரசிவாஜியால் தொடங்கிவைக்கபட்டது, சிவாஜி இந்துக்களுக்கான அரசனாக எழ அவனுக்கு ஆதரவு பெருக ஒரு கட்டத்தில் பூரண இஸ்லாமிய தேசமாக இந்துஸ்தானை அறிவித்து காசி மதுரா ஆலயங்களையும் இன்னும் நூற்றுகணக்கான இந்து ஆலயங்களையும் இடிக்க தொடங்கினான் அவுரங்கசீப் அப்படியே சீக்கிய மதத்தையும் தடை செய்தான் சீக்கிய குருவான தேஜ் பகதூரை அவன் மதம்மாற கோரியபொழுது அவர் மறுத்தார், அவரையும் அவர் குடும்பத்தாரையும் மிக கோரமாக கொன்ற அவுரங்கசீப் அவரை உயிரோடு தோல் உரித்து […]

அபிராமி அந்தாதி : 65

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும் “ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே” இந்த பாடலை புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலை காண வேண்டும் , அப்பொழுது இப்பாடல் எளிதாக புரியும் கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு […]

உளவு வாட்சின் கதை…..

உளவு சரித்திரங்கள் எப்பொழுதும் சிலாகிப்பானவை, அதிலும் மொசாத்தின் சரித்திரம் அதிரவைப்பது, இப்பொழுது ஆளாளுக்கு வாட்ச் பற்றி பேசுவதால் அவர்களின் பிரசித்தியான வாட்ச் பற்றியும் பேசலாம் அந்த வாட்ச் தயாரித்தது இஸ்ரேலிய மொசாட், தயாரிக்கபட்டது எலிகோகன் என்பவருக்காக‌ அவர் ஒரு எகிப்து யூத பிறப்பு, 1924ல் பிறந்த அவர் பின் இஸ்ரேலுக்கு வந்து பின் இஸ்ரேலிய மொசாத்தில் இணைந்து 1950களிலே தரமான உளவாளியானார் அவரை சிரியாவுக்குள் அனுப்ப திட்டமிட்டது மொசாத், இஸ்ரேலின் மிகபெரிய எச்சரிக்கையில் ஒன்று சிரியா, அந்த […]

சீனிவாச ராமானுஜம்

“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என சொன்னவர்கள் தமிழக இந்துக்கள் எண்ணும் எழுத்தும் இறைவனின் வரம், அந்த வரத்தை பெற்றோர் தன்னை உணர்ந்தால் ஒரு தெய்வசக்தி துணை நின்று வழிநடத்தி அவர்களுக்கு அழியா புகழை கொடுக்கும் என சொன்னவர்களும் இந்துக்கள் அந்த நம்பிக்கையின் சாட்சியாக வந்து அகிலமெல்லாம் தமிழக இந்துக்களின் கணிதவியலை சொன்னவன் அந்த கணித மாமேதை ஆரியபட்டரும் பாஸ்கரரும் வாழ்ந்த மண் இது என்பதை நிரூபித்தவன் அவன் தமிழ்நாட்டில் கடந்த எழுபது வருடமாக இருக்கும் பொய்களில் […]

பழமொழி நானூறு : 67

“தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றிவாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்நாயைப் புலியாம் எனல்” தாய் தந்தையர் தன் பிள்ளையினை பெருமையாய் பேசுதல் இயல்பு ஆனால் அந்த இயல்பையும் பெரிதாக சொல்லி கொண்டே இருந்தால் அதை கேட்டு பிள்ளைகளும் தங்களை தாங்களே புகழ தொடங்கினால் அதனால் யாருகும் ஆபத்தில்லதான் ஆனால் அது அடுப்பில் முடங்கி கிடக்கும் நாயினை புலி என சொல்வது போல் இகழ்ச்சிகுரியதாகும் என்பது பொருள். தன்னை தானே புகழ்தல் என்பது நோய் […]

குலேசனின் கதை

பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அரசுரர்களையும் அதர்மத்தையும் அழிப்பதற்கு என்றாலும் அங்கு அந்த பரந்தாமனின் ஒவ்வொரு அசைவும் வாழ்வுக்கும் ஆன்மீகத்துக்குமான தத்துவ போதனைகள் விளையாட்டாகவும், புன்னகையடனும், இயல்பாகவும் அவன் நடத்திய ஒவ்வொரு காட்சியும் ஆழ்ந்த போதனைகளை வாழ்வுக்கும் ஆத்மாவுக்கும் போதித்தது, அப்படி கண்ணன் நடத்தியதுதான் அந்த குலேசன் கதை அந்த குலேசனின் கதை எப்பொழுது படித்தாலும் உருக்கமானது, பல தத்துவங்களை போதிப்பது பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன் பின்னாளில் கண்ணன் பெரும் […]

சுப்பிரமணிய பாரதி

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரு பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிக சரியான ஆற்றல் மிககவர்களை, இறைசக்தி தேடி கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும் உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால்வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும் அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனை பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும், வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், குருநாணக் […]

கந்தர் அனுபூதி : 06

“திணியா னமனோ சிலைமீ துனதாள்அணியா ரரவிந்த மரும்புமதோபணியா வென வள்ளி பதம் பணியுந்தணியா வதிமோக தயாபரனே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “திணியான மனோ சிலை மீது உனதாள்அணியார் அரவிந்தம் அரும்பு மதோபணியா என வள்ளி பதம் பணியும்தணியா அதிமோக தயா பரனே” “திணியான மனோ சிலை” என்றால் மிக உறுதியான பாறை என பொருள், மிக மிக இறுக்கமான தன் பாறை மனதை பற்றி சொல்கின்றார் அருணகிரியார் மேலும் தொடர்கின்றார் “மீது உனதாள் அணியார் […]

சக்கரவர்த்தி ராஜகோலாச்சாரியார்

அந்த மனிதன் மிகபெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகபெரும் தீர்க்கதரிசி, லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறாஅந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசபணி என பல இடங்களில் மிகபெரிய அடையாளமாய் இருந்தான், பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகபடுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்ததே அந்த மாமனிதனே அந்த […]

இந்துக்களின் ஒவ்வொரு மாத பவுர்ணமியும் முக்கியமானது, அந்த பவுர்ணமியோடு வரும் நட்சத்திரங்கள் படி பெரும் நுணுக்கமான பண்டிகையினை அமைத்தார்கள் நிறைந்த நிலவு கொண்ட அந்நாள் மாதம் மாதம் கொண்டாடபட வழிவகைகளையும் ஏற்படுத்தினார்கள், அதில் ஒரு தத்துவமும் ஆன்மீகமும், சுற்று சூழலும், மருத்துவமும்,நலமும் மானிட நலமும் அறிவும் தெய்வ நம்பிக்கையும் மேம்பட வழியும் சொன்னார்கள் தைபூசம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி பூரம், ஆவணி அவிட்டம் என்ற வரிசையில் கார்த்திகை தீபமும் மகா முக்கியமான ஒரு நாள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications