பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜி.யூ போப் என்பவன் ஒரு மிஷனரி, வரலாற்றை சரியாக சொன்ன தமிழக ஆளுநர்..

இந்திய தலைநகர் டெல்லியில் தமிழ் கல்வி கூட்டமைப்பு என்றொரு அமைப்பு உள்ளது, அங்கு திருவள்ளுவர் சிலை திறக்கபட்டுள்ளது, திறந்து வைத்தவர் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் இச்சிலைதிறப்பில் திருவள்ளுவரை ஏக குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ் அமைப்பு தலைவர்களும், திராவிட தலைவர்களும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதெல்லாம் கேட்கவே கூடாது முன்பு கன்னடத்திலும் வடக்கே கங்கை கரையிலும் வள்ளுவன் சிலைக்கு சர்ச்சை வந்தபொழுது பொங்கிய திராவிட சிங்கங்கள் டெல்லியில் வள்ளுவன் சிலை திறக்கபட்டபொழுது அமைதி என்றால் அதுதான் திராவிட தமிழ் […]

மிஷனரி ஐடா ஸ்கேடர் Vs இந்து துறவி அமிர்தானந்தமாயி

ஹரியானா மாகாணம் பரிதாபாத்தில் மோடி உலகறிய திறந்துவைத்த மாதா அமிர்தானந்தமாயி கட்டிய மருத்துவமனை நிகழ்வு இந்திய சரித்திரத்தில் கொண்டாட வேண்டிய ஒன்று இந்த உலகம் மாற ஆரம்பித்த 18ம் நூற்றாண்டில் இந்தியா பிரிட்டிசாரிடம் வசமாக சிக்கியிருந்தது, ஆயுதம் ஒன்றே போராட வழி என இருந்த காலத்தில் இங்கு எந்த மன்னனும் வீரனும் எழாதவாறு அடக்கி ஆளதொடங்கியிருந்தான் அந்த கிறிஸ்தவநாட்டுக்காரன் அவன் காலத்தில் இங்கு மிஷனரிகள் பெருகினார்கள், அவர்கள் வருகை வினோதமானதும் நகைசுவையான காரணங்களையும் கொண்டது இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், […]

நீதிநெறி விளக்கம் : 69

நீதிநெறி விளக்கம் : 69 “சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்பெறுமெனிற் றாழ்வரோ தாழார் – அறனல்லஎண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்ஒண்மையிற் றீர்ந்தொழுக லார்” அதாவது ஒரு சிறிய செயலால் சிறிதளவே பயன் எனும்பொழுது அதை செய்வதால் அறிஞர்களுக்கு தாழ்வா என்றால் அது தாழ்வல்ல‌ அறம் கெட்ட வழியில் மாபெரும் சாதனைகளை செய்வதை விட அறமான வழியில் செய்யும் மிகசிறிய செயல் பெரும் புகழையும் செல்வாக்கையும் அறிஞர்களுக்கு பெற்றுதரும என்பது பாடலின் பொருள் இதனை இன்னும் ஆழமாக விளக்க […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 0

“எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமேஉள்ளகத் தீச னொளி” இக்குறள் “எள்ளகத்து எண்ணெய் இருந்தனை ஒக்குமே உள்ளகது ஈசன் ஒளி” என பிரிந்து பொருள் தரும் அதாவது எள் உள்ளே எண்ணை இருப்பது போல் நம் உடலுக்குள் ஈசனின் அருள் ஜோதி இருக்கின்றது என்பது பாடலின் பொருள் ஒளவை சும்மா சொல்லவில்லை ஒரு தெளிந்த உதாரணத்தோடே சொல்கின்றார் எள்ளில் எண்ணை உண்டு ஆனால் உடனே வராது, அந்த எள்ளை காயவைத்து அரைத்து பிழிந்தால் மட்டுமே எண்ணெய் பிரிந்துவரும், அந்த […]

ஆச்சார கோவை : 42

ஆச்சாரகோவை எனும் இந்த சங்ககால பாடல் தொகுப்பு சமூக வெளிப்புற ஆச்சாரங்களை மட்டும் சொல்லவில்லை, அது இன்பவாழ்வின் தாத்பரியத்தையும் அகவாழ்வின் நுணுக்கமான விஷயங்களையும் குறிப்பாக மங்கையரின் மனமும் உடல்நிலை குறித்து அறிந்த ஞானத்தில் போதனைகளை சொல்கின்றது கணவன் மனைவி இணைந்ததுதான் இல்லறம், அந்த இல்லறத்தில் மனைவியின் மனமும் உடல்நிலையும் அவன் அறிதல் அவசியம், அதை அறியா இடத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன‌ கணவன் மனைவி சிக்கலுக்கு முதல் காரணம் மனைவியின் சில மனநிலையும் உடல்நிலையும் கணவன் புரிந்துகொள்ளாததே என்பதை […]

ஆத்திக வாரியார் Vs நாத்திக திமுக

1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் “நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார் வாரியார் சுவாமிகள் நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு […]

தென்னக கடற்கரையின் அர்த்தமற்ற அல்லேலூயா ….

தென்னகத்தின் கடற்கரையில் நடக்கும் போராட்டங்கள் வெகு பிரசித்தம். அணுவுலை கூடாது, ஸ்டெர்லைட் ஆலை கூடாது அப்படியே துறைமுகங்கள் கூடாது என பெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும் இவ்விவகாரத்தில் ஸ்டெர்லைட் மட்டும் நிறுத்தபட்டது அது துரதிருஷ்டமசமானது, உண்மையில் அணுவுலைக்கு எதிராக வெற்றிபெற்ற அரசுகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் சொதப்பின, உளவுதுறைகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் சரியாக இருந்திருக்குமானால் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சிக்கல் வந்திருக்காது உளவுதுறையின் தோல்வியே ஸ்டெர்லைட் சர்ச்சைக்கு காரணம் அதற்கு முழு காரணம் பழனிச்சாமி அரசு அதனோடு சேர்ந்து நிலமையினை கணிக்க […]

குமரகுருபரர் நீதி நெறிவிளக்கம் : 68

குமரகுருபரர் நீதி நெறிவிளக்கம் : 68 “சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்நல்வினை கோறலின் வேறல்ல – வல்லைத்தம்ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோவாக்கின் பயன்கொள் பவர்” நம்சொல்லுக்கு ஒரு வலிமை இருக்கின்றது செல்வாக்கு இருக்கின்றது என்பதற்காக அதனை அடிக்கடி பயன்படுத்தி பேசிகொண்டே இருப்பது அந்த செல்வாக்கை கொல்லும் செயல் அன்றி வேறல்ல. வார்த்தைகளின் வலிமையானதுஅடிக்கடி அதனை பேசிகொண்டே இருந்தால் அகன்றுவிடும் செல்வாக்கு உள்ளவனின் வார்த்தையானாலும் தேவைபடும் இடம் அன்றி எல்லா இடங்களிலும் பேசபடுமானால் அது மதிப்பிழக்கும், பயனற்ற சொற்கள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 10

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 10 “சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்சந்திரனிற் றோன்று முணர்வு” சத்தியாகிய சந்திரகலையை அறிவு உடலில் (சிதாகாயத்தில்) பாய்ச்ச சாக்கிரத்தில் இருப்பதுபோல் உணர்வு எட்டும். மனதின் வெளியில் மறைவாய் இருக்கும் சிவனை (திருசிற்றம்பலம்) சிந்தையில் யோகத்தால் தேடினால் ஆன்மாவினால் சிவனை உணரலாம் என்பது குறளின் பொருள் சந்திரன் என்பது இங்கு மனதை குறிக்கின்றது, அதாவது ஆத்ம தொடர்பினை குறிக்கின்றது சிவன் நம் […]

ஏக்நாத் ராணடே

அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு வன்முறை இயக்கம் என்றும், அது ஒருமாதிரியான போக்கு கொண்டது என்றும் பெரும் பொய்பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கபட்டிருக்கலாம் உண்மை அது அல்ல‌ அதன் அடிப்படை பயிற்சியே வன்முறையில் அல்ல எல்லா மக்களையும் இந்தியராக திரட்டி ஓரணிக்கு கொண்டுவந்து இந்நாட்டின் கலாச்சாரத்தையும் தனிதன்மையினையும் காக்க வேண்டும் என்பதன்றி வேறல்ல‌ வரலாற்றில் அது கலவரம் செய்த காட்சிகளை எங்கும் காணமுடியாது அது 1948ல் காந்தி கொலைக்கு தாங்கள் காரணம் என தடைசெய்யபட்டபொழுதும் கலவரம் செய்யவில்லை , […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications