பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 07

“வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்கூடகத்திற் சோதியோ டொன்று” உள்ளத்தை வீடு அதாவது முக்தி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஜோதிவடிவான இறைவனுடன் மனதால் ஒன்றித்தல் வேண்டும் என்கின்றார் ஓளவையார் அதாவது உள்ளம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக வேண்டும் என்றால் ஜோதிவடிவான இறைவனுடன் ஆன்மாவில் ஒன்றிடல் வேண்டும் என்பது ஒளவை வலியுறுத்தும் போதனை

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 06

“கூடக மான குறியெழுத்தைத் தானறியில்வீடக மாகும் விரைந்து” இந்த குறள் “கூடகமான குறி எழுத்தை தானறியில் வீடகமாகும் விரைந்து” என பொருள் தரும் கூடகமான குறி எழுத்து என்பது குறில் எழுத்துக்கள் கூடிவருவதை சொல்கின்றது, ஓம் எனும் மூல மந்திரம் அ+உ+ம் என கலந்து வரும், இந்த ஓம் எனும் வார்த்தைதான் யோகத்தின் மூலம் இந்த எழுத்தின் சக்தியினை அறிந்து அதனை உச்சாடனம் செய்தால் மனமானது முக்தி எனும் வீடுபேற்றை அடையும், மனமே சிவன் வாழும் கயிலாயமாகும் […]

சேவல் விருத்தம் : 02

சேவல் விருத்தம் : 02 “எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரமராட்சதர்கள் மிண்டுகள் செயும்ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலைஈனப் பசாசு களையும்கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்ககனமுற நிமிரும் வெங்கட்கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்கரத்தடர்த் துக்கொத் துமாம் தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணிசமணர்கிடு கிடென நடனம்தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறியசரணஅழ கொடுபுரி யும்வேள்திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்தெரியும்அரன் உதவு குமரன்திமிரதின கரமுருக சரவண பவன்குகன்சேவற் றிருத்து வசமே. பாடலின் முதல் வரி இதோ “எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரமராட்சதர்கள் […]

நாச்சியார் திருமொழி 21

அன்று கோகுலாஷ்டமி என்பதால் ஏகபட்ட வேலைகள் ஆண்டாளுக்கு இருந்தன, அதிகாலையிலே குளிக்க குளத்தின் கரைக்கு தோழியரோடு வந்துவிட்டாள் , உடைகளை ஒரு மரத்தடியில் வைத்துவிட்டு அவர்கள் குளிக்க நீரில் இறங்கியபொழுது கடுமையாக குளிர்ந்தது அந்த கடும் குளிரில் “கிருஷ்ணா கிருஷ்ணா” என சொல்லியபடியே இறங்கியதில் அவர்களுக்கு குளிரவில்லை ஆனந்தமாக மூழ்கி குளித்தார்கள், நன்றாக நீந்தி குளித்துவிட்டு கரைக்கு வந்தால் ஆடைகளை காணவில்லை ஆண்டாள் நமட்டு சிரிப்புடன் கண்ணனை நோக்கி பாடினாள் “கோழி யழைப்பதன் முன்னம்குடைந்துநீ ராடுவான் போந்தோம்ஆழியஞ் […]

இந்தியாவின் சீன எல்லை விளையாட்டு…

முதல் முறையாக இந்தியாவும் வியட்நாமும் சேர்ந்து செய்த ராணுவ பயிற்சிகள் நிறைவு பெற்றிருப்பதாக இந்திய ராணுவ செய்திகள் அறிவிக்கின்றன‌ ஆகஸ்டு 1 முதல் 20ம் தேதிவரை நடக்க திட்டமிடபட்ட பயிற்சி இன்றோடு முடிந்து நாளை முறைப்படி முடிவதாக அறிக்கைகள் சொல்கின்றன‌ வியட்நாம் சீனாவினை அண்மித்து இருக்கும் நாடு, இந்தியாவுக்கு இலங்கை போல சீனாவுக்கு வியட்நாம் அந்த வியட்நாமுக்கும் சீனாவுக்கும் பொருந்தாது, காரணம் தன்னை சுற்றி இருக்கும் எல்லா நாடுகளுடனும் வம்பிழுத்து வைப்பதுதான் நல்லாட்சி என நம்பும் சீனா […]

குமரகுருபரர் நீதிநெறி : 63

“பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்சிற்றுயிர்க் காக்க மரிதம்மா – முற்றும்வரவர வாய்மடுத்து வல்விராய் மாயஎரிதழன் மாயா திரா” சிறு தீயாக எரியும் நெருப்பு அருகில் இருக்கும் பொருட்கள் மேல் எல்லாம் பரவிகொண்டே இருக்கும், அப்படி பேராசை மிக்கவர்கள் தங்களுக்கு இருக்கும் பொருளோடு திருப்தி அடையாமல் அடுத்தவர் பொருட்களை விழுங்குவதிலே குறியாக இருபார்கள் நெருப்புக்கு எவ்வளவு கொடுத்தாலும் தீராது, அது தன்னில் விழுவதையெல்லாம் எரித்து இன்னும் கேட்டு கொண்டேதான் இருக்கும், பேராசை மிக்கவரின் ஆசைக்கும் அப்படி முடிவே இல்லை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 05

“தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்காஞ்சனமே யாகுங் கருத்து” இக்குறள் “தான் செய்யும் வினை எல்லாம் தன்மையற உணரில் காஞ்சனமே ஆகும் கருத்து” என பிரிந்து பொருள் தரும் அதாவது ஒருவன் தவத்தில் மூழ்கி ஈசனில் நிறைந்து அந்த ஞான சிந்தனையில் பிரபஞ்ச பேரருளில் நிறைந்து தன் உயர்ந்த தன்மையில் சிந்தித்து சொல்லும் கருத்துக்கள் பொன்போல் மின்னும் பொன்போல் மின்னும் என்றால் அது எல்லா காலமும் ஜொலித்து கொண்டே இருக்கும், அழியாத ஜொலிப்புடன் மதிப்புடன் காலம் காலமாக நிலைத்திருக்கும் […]

அந்த கண்ணன் பன்முகம் கொண்டவன்

அந்த கண்ணன் பன்முகம் கொண்டவன், ஏகபட்ட முகங்களை கொண்ட வைடூரியம் போல, பல வகை மணம் கொடுக்கும் மனோரஞ்சிதம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தை அன்றும் இன்றும் வழங்கிகொண்டே இருக்கின்றான் அவனை தவிர இன்னொரு அவதாரத்துக்கு அது சாத்தியமே இல்லை கண்ணனை வணங்குபவர்களுக்கு எல்லாமும் கை கூடும் என்பார்கள், அது பாண்டவர் காலத்தில் இருந்தே கண்ட உண்மை அது இக்காலத்திலும் நடக்கின்றது, அவனை சிந்தித்து அவன் அருமையினை உணர்ந்தோரை அவனே வந்து கைபிடித்து நடத்துகின்றான் உலகில் இன்றும் […]

ஆயர்பாடி மாளிகையில்

உலகின் மிகபெரிய கொண்டாட்டங்களில் ஒன்று கோகுலாஷ்டமி என்கின்றது ஆய்வு, இந்தியாவில் மிக பெரிதாகவும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் சிறப்பாகவும் கொண்டாடடும் நாள் அது அந்த கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன, கண்ணனின் நினைவில் உலகம் ஆரவாரத்துடன் கொண்டாட தொடங்கியிருக்கின்றது உலகெங்கும் கோகுலாஷ்டமி உற்சாகமாய் கொண்டாடபட்டு கொண்டிருகின்றது இந்த மண்ணும் தர்மமும் இச்ச சமூகமும் எப்படி எல்லாம் குழந்தைகளை கொண்டாடியது?, அது கொண்டாடியது போல் இன்னொரு சமூகம் கொண்டாடியிருக்க முடியாது. வள்ளுவன் மக்களுடமை என அதிகாரமே அமைத்து “குழலினிது யாழினிது” என்றான், இன்னொரு […]

நேதாஜி

ஐ.என்.ஏ எனப்படும் நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர்கள் இன்றும் வெகுசிலர் உண்டு, அவர்களிடம் பேசினால் அவர்களின் குரல் இப்படித்தான் சொல்லும் கட்சிக்கும் பதவிக்கும் காசுக்கும் அல்லாமல் நாட்டுக்காக சாக நேதாஜி பின்னால் சென்ற அந்த உத்தமர்களின் ஆன்மாவின் குரல் எக்காலமும் உண்மையினைத்தான் சொல்லும் கண்களில் நீர் வழிய, தங்கள் கனவுகளின் உடைந்த பிம்பங்களை நினைத்தபடியே கேவி கேவி இடை நிறுத்தி , தவித்து, அழுது அவர்கள் சொல்லும் நினைவுகள் உண்மையும் சத்தியமுமானவை தாய்பாலில் மாசு இல்லை, அந்த உன்னதமான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications