பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வீரமாமுனிவன்

இந்த வீரமாமுனிவன் என்பவன் யார், அவன் என்ன செய்தான் என பலர் கேட்பதால் சில விஷயங்களை சொல்லலாம் அது வீரசிவாஜியின் இந்து ராஜ்ஜியத்தை அவுரங்கசீப் கடும் பிரயர்த்தனமாக முறியடித்து மொகலாயத்தை மீள கட்டமைக்கபட பெரும் போர் நடத்திய காலங்கள், அப்பொழுது மராட்டிய பகுதிகள் அணல் அடித்து கொண்டிருந்தது, தமிழகத்தின் செஞ்சி பக்கமெல்லாம் பெரும் குழப்பம் நிலவிற்று அவுரங்கசீப்பின் கனவினை சிவாஜியின் மருமகள் தாராபாய் பெண் சிங்கமாய் நின்று நொறுக்கி போட்டு கொண்டிருந்தாள், அவளின் தாக்குதல் முன் மொகலாயம் […]

கிருஷ்ணகரியம்

தங்களுக்கு யாதவாரியம் அல்லது யாதவத்துயம் ஏன் அவசியம் என விளக்குகின்றார், அவரின் பேட்டி இதோ அய்யா நீர் ஏன் இப்படி யாதவத்தியம் பேச தொடங்கிவிட்டீர்? இரண்டாயிரம் வருடமாக மட்டுமல்ல பல லட்சம் வருடமாக நாங்கள் தடுக்கபட்டவர்கள், விரட்டபட்டவர்கள் ஒடுக்கபட்டவர் தெரியும் அதென்ன தடுக்கபட்டவர்? ஆடு மாடு மேய்க்க விடாமல் எங்களை தடுத்தார்கள், தடுத்து தடுத்து விரட்டினார்கள், அப்படி தடுத்து விரட்டபட்டதால் நாங்கள் தடுக்கபட்டவர்கள் இது உங்கள் அனுபவமா? பல லட்சம் ஆண்டுகளாக யாதவ நிலை இதுதான், இதனால்தான் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 03

“குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்கருவமாய் நிற்குஞ் சிவம்” இக்குறள் “குருவின் அடி பணிந்து கூடுவது அல்லார்கு அருவமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும் சிவனையே குருவாக கொண்ட அகத்தியர், ரிஷிகள் போன்றவர்களை போல சிவனையே குருவாக கொண்டிராதவர்கள் அல்லது இந்த ரிஷிகள் ஞானிகளை போன்றோன்றோர்களை குருவாக கொண்டிராவர்களுக்கு சிவன் மறைவாய் நிற்பார், அவர்களால் சிவனை அடைய முடியாது என்பது குறளின் பொருள் ஒரு நல்ல குரு , சிவனாக அல்லது சிவனில் நிறைந்த குரு […]

இவ்வளவு மோசமாகவா ஏமாற்றபட்டோம் நாதா..

நாதா மேனகையே வா, உனக்காக 4500 கோடி பேக்கேஜ் செலவில் வரவேற்பு கொடுக்க ஆசைதான் ஆனால் நான் மேயரும் அல்ல நீ சென்னையில் பெய்யும் மழையும் அல்ல, என்ன செய்வது? பொய் சொல்லாதீர்கள் நாதா, என்னை நீங்கள் தேடவே இல்லை என் அழகான மேனகையே, இந்திய சட்டங்கள் போல 10%, 33%, 69% என்றா உனக்கு மனதில் இடம் ஒதுக்கியுள்ளேன்? இந்த சூரியன் சந்திரன் ராகு கேது குரு சனி என எல்லா கிரகங்களும் அஸ்தமிக்காத என் […]

குரு நாணக்

இன்று அந்த மகான் குருநாணக்கின் 553ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடபடுகின்றது, சீக்கிய சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் இந்திய வரலாற்றில் குறிப்பிடதக்க அவதாரம் குருநாணக்நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், இந்தியாவின் சிக்கல் தீர அந்த பஞ்சாப் கைபர் போலனை அடுத்த லாகூர் பக்கம் ஒரு அரண் எழும்ப வேண்டும் எனும் அந்த சிந்தனைதான் பாரத விடுதலைக்கு சாத்தியமானது அதுவரை வேலியற்றதாக இருந்த பாரதம் உஸ்பெக் ஆப்கன் என யார் யாரெல்லாமோ வந்து சுரண்டபட்டபொழுது அங்கு […]

பழமொழி நானூறு : 31

பொற்பவும் பொல்லாதனவும் புணர்ந்திருந்தார்சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? விற் கீழ்அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய் அறியும்,பெரிது ஆள்பவனே பெரிது. வில்லை போன்ற புருவமும் கீழே வில்லின் நாண் போல செவ்வரி இழையும் கொண்ட பெண்ணே, அறிவுடையார் எதனை செய்ய வேண்டும் என தெளிவான சிந்தனையுடன் செய்யவேண்டியதை சரியாக செய்வர், அவர்களுக்கு எது சரி? எது தவறு என எடுத்து சொல்ல அவசியமில்லை என்பது பாடலின் பொருள் விளக்கினை விளக்கு கொண்டு தேடுவார் இலர், அப்படி அறிவாளிக்கு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 02

“சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்சிந்தித் திருக்குஞ் சிவம்” இக்குறள் “சிந்தை சிவமாக காண்பவர் சிந்தையில் சிந்தித்திருக்கும் சிவம்” என பொருள்தரும் எப்பொழுதும் சிவசிந்தனையிலே இருப்பவர் மனதில் சிவம் நிரந்தரமாக குடிவரும் என்பது பொருள், சதா சர்வகாலமும் சிவனில் நிலைத்திருக்கும் மனம் சிவனின் அம்சமும் தன்மையும் பெறுகின்றது, இந்த நிலையினை எட்டியவர்களே சித்தர்கள் குருவழி எனும் அதிகாரத்தில் ஏன் இதனை ஒளவையார் சொல்கின்றார் என்றால், நல்ல ஆன்மீக குருவின் மனம் முழுக்க சிவனில் கரைந்திருக்கும், அந்த மனம் முழுக்க […]

லால் கிருஷ்ண் அத்வாணி

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர், ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர், சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு லால் கிருஷ்ண் அத்வாணி, கராச்சியில் பிறந்தவர் தேசபிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசபற்றாளர் இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார், சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை நாடு ஒன்றே அவரின் மூச்சானது, […]

கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள்.

அவன்மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் தான் நம்பி ஏமாந்த நொடியில், இத்தேசம் இனி வாழும் என கொண்ட நம்பிக்கையெல்லாம் தகர்ந்த நிலையில், கோடிகணக்கான இந்துக்களின் வலியாக, இன்னொரு இந்து அந்த பழியினை ஏற்றுகொள்ள வாய்ப்பளிக்காமல் தானே ஏற்று சுமார் 30 கோடி இந்துக்களின் குரலாக, வேதனையாக, அனாதை கூட்டத்தின் ஒரே பிரதிநிதியாக அவன் அந்த நீதிமன்றத்தில் நின்றான் நவம்பர் 8, 1948ம் வருடம் நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள். நீதி மன்றத்தில் கொஞ்சமும் […]

சந்திர சேகர வெங்கட் ராமன்

திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர் சந்திர சேகர வெங்கட் ராமன் இயற்பியலில் அவர் மேதை. சென்னை, விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி […]