பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 02

“சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்சிந்தித் திருக்குஞ் சிவம்” இக்குறள் “சிந்தை சிவமாக காண்பவர் சிந்தையில் சிந்தித்திருக்கும் சிவம்” என பொருள்தரும் எப்பொழுதும் சிவசிந்தனையிலே இருப்பவர் மனதில் சிவம் நிரந்தரமாக குடிவரும் என்பது பொருள், சதா சர்வகாலமும் சிவனில் நிலைத்திருக்கும் மனம் சிவனின் அம்சமும் தன்மையும் பெறுகின்றது, இந்த நிலையினை எட்டியவர்களே சித்தர்கள் குருவழி எனும் அதிகாரத்தில் ஏன் இதனை ஒளவையார் சொல்கின்றார் என்றால், நல்ல ஆன்மீக குருவின் மனம் முழுக்க சிவனில் கரைந்திருக்கும், அந்த மனம் முழுக்க […]

லால் கிருஷ்ண் அத்வாணி

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர், ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர், சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு லால் கிருஷ்ண் அத்வாணி, கராச்சியில் பிறந்தவர் தேசபிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசபற்றாளர் இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார், சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை நாடு ஒன்றே அவரின் மூச்சானது, […]

கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள்.

அவன்மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் தான் நம்பி ஏமாந்த நொடியில், இத்தேசம் இனி வாழும் என கொண்ட நம்பிக்கையெல்லாம் தகர்ந்த நிலையில், கோடிகணக்கான இந்துக்களின் வலியாக, இன்னொரு இந்து அந்த பழியினை ஏற்றுகொள்ள வாய்ப்பளிக்காமல் தானே ஏற்று சுமார் 30 கோடி இந்துக்களின் குரலாக, வேதனையாக, அனாதை கூட்டத்தின் ஒரே பிரதிநிதியாக அவன் அந்த நீதிமன்றத்தில் நின்றான் நவம்பர் 8, 1948ம் வருடம் நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள். நீதி மன்றத்தில் கொஞ்சமும் […]

சந்திர சேகர வெங்கட் ராமன்

திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர் சந்திர சேகர வெங்கட் ராமன் இயற்பியலில் அவர் மேதை. சென்னை, விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி […]

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது, அதை கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதை சொல்ல விளகின்றோம் இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல, சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம் சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை அதாவது பக்குவட்ட நிலை. […]

பழமொழி நானூறு : 29

“ஆணம் உடைய அறிவினார் தம்நலம்மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்மானமர்க் கண்ணாய் மறம்கெழு மாமன்னர்யானையால் யானையாத் தற்று” ஆணம் என்றால் அன்பு, நேசம் என பொருளில் வரும் மான் விரும்பும் கண்களை உண்டைவளே, நல்ல அன்புடைய அறிவார்ந்த மக்கள் தங்களை போன்ற அறிவுடையவர்களையே நண்பராக்கி கொள்ளமுயல்வது எப்படி என்றால் அரசர்கள் யானைகளை கொண்டே யானைகளை கட்டுபடுத்தி இழுத்துவந்து தங்களுக்கு தோதாக பழக்கி வைப்பதை போல் அறிவால் அறிவார்ந்தவர்களை வசபடுத்தி தன்னோடு வைப்பார்கள் என்பது பாடலின் பொருள் காட்டிலோ இல்லை பகைவரின் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 10

“நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகிஉற்றெங்கும் நிற்குஞ் சிவம்” அசைவன அசையாதன என உலகில் இருக்கும் எல்லாமுமே சிவம், அதன் உற்ற இயக்கமாய் நிற்பதும் சிவம் என்பது குறளின் பொருளாகும் இங்கு அசைய கூடிய ஆடுமாடுகள், பறப்பன,ஊர்வன தொடங்கி கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா வரை , காற்றுவரை எல்லாமும் சிவம் அப்படியே அசையாத மலையும் கல்லும் நிலமும் சிவம், மரமும் கொடியும் சிவம் என்கின்றார் ஓளவையார் (நிற்பது நடப்பது என்பதுதான் அசையாதது, அசைவது என்ற பொருளில் சைவம் அசைவம் […]

பழமொழி நானூறு : 28

“நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதேசொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாடகற்றறிவு போகா கடை” அதாவது ஒரு கவிதை வரிக்கு இயல்பாய் இசை அமைப்பவன் பண் இசைப்பதை போல ஒருவனின் இயல்பான அறிவே அவன் கற்ற கல்விக்கு ஏற்ப வெளிபடும், இயல்பான அறிவின்றி என்ன கற்றாலும் அதனால் பலனேதுமில்லை நல்ல அருவி வீழும் பாறை கொண்ட நாடனே என்கின்றார் புலவர் இங்கு குறிப்பால் பாறைமேல் அருவி என அவர் சொல்வதிலும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 09

“தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகிஏத்தவரு மீச னுளன்” இக்குறள் “தோற்றம் அது வீடாகி தொல்லை முதல் என்றாகி ஏத்தவரும் ஈசன் உளன்” என பிரிந்து பொருள் தரும் அதாவது சிவனே மோட்ச வீடாகவும் விளங்குகின்றார், இந்த உலகத்தின் உயிர்களாகவும் அதன் கர்மாவாகவும் கர்ம இயக்கமாகவும் விளங்குகின்றான், எல்லா உயிர்க்கு மட்டுமல்ல அவற்றின் இயக்கம் சிந்தனை என எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது சிவனே என்கின்றார் ஒளவையார் இக்குறள் ஒரு தேர்ந்த ஞானத்தை சொல்கின்றது, அதாவது இந்த உலகில் நடக்கும் நல்லது […]

அபிராமி அந்தாதி 58

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே இங்கு அம்புயம் என்றால் தாமரை எனும் பொருளை தெரிந்துகொண்டு மேற்கொண்டு காணலாம் இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது, அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதபட்டது, இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல்தான் நிறுத்திற்று, பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications