பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பழமொழி நானூறு : 19

“துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்பின்னை உரைக்கப் படற்பாலான் – முன்னிமொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்கிழிந்தானை மூக்குப் பொதிவு” இருவர் வாதிடும் பொழுது ஒருவன் வினா எழுப்பி பேசி முடித்தபின் இன்னொருவன் பதில் சொல்ல வேண்டும், அதுதான் சரியானது. அது அல்லாது ஒருவன் வினவும்பொழுதே அல்லது அதற்கு முன்னமே இன்னொருவன் பதில் சொல்லி குழப்புவது முழங்காலில் அடிபட்டால் மூக்குக்கு கட்டுபோடுவது போல பொருத்தமற்றது பலனற்றது என்பது பொருள் கேள்வி அறிந்து அதை முழுக்க விளங்கி பொறுமையாக பதில் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 01

“பத்துத் திசையும் பரந்த கடலுலகும்ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்” அதாவது எட்டு திசையும் அப்படியே மேல் கீழ் எனும் பத்து திசையும் பரந்த கடலும் கொண்ட இந்த நிலமெல்லாம் சிவம் எனும் பெரும் சக்தி வியாபித்து கலந்திருக்கும் என்பது பாடலின் பொருள் இந்த உலகம் பஞ்ச பூதத்தினாலானது, சிவன் பஞ்சபூத வடிவம் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த சிவன் இந்த பூமியாக இருக்கும் நேரம் அதை தாண்டிய பிரபஞ்சமாகவும் இருக்கின்றார் என்கின்றார் ஒளவையார் இந்த பூமி, இந்த பிரபஞ்சம் […]

சூரசம்ஹாரம் : 01

இந்து சமயத்தின் 18 புராணங்களில் ஒன்று கந்தபுராணம், அதன் நாயகன் முருகபெருமான் அர்ஜூனா சேனைதலைவர்களின் நான் கந்தன் என்கின்றான் கீதையில் கண்ணன் ஆம் கண்ணனை போல் ஞானகடவுளாக வணங்கபடுபவன் முருகன். கண்ணனும் முருகனுமே உபதேசிக்கும் கடவுளர்களாக, ஞானத்தின் மூலங்களாக போற்றபடுகின்றார்கள் முருகனுக்கான இடம் அங்கே பெரிது ஆம், இந்து தர்மத்தில் அவனுக்கான இடம் பெரிது, இன்றும் உலகமெல்லாம் வணங்கபடும் அவனின் கீர்த்தியும் வல்லமையும் புகழும் அழகும் மிக மிக பெரிது அந்த முருகன் ஞானபண்டிதன், ஆப்த்பாந்தவன், தர்ம […]

சூரசம்ஹாரம் : 02

வீரபாகு தூது செல்ல கிளம்பிய நேரம் சூரபத்மன் மாளிகை கொதித்தெழுந்தது, தாரகன் எனும் தன் தம்பியினை கொன்ற முருகனை பிடிக்க தன் சேனைகளுடன் தயாரானான் சூரபத்மன் ஆனால் அவனின் தம்பி சிங்கமுகனும் அவன் அமைச்சர் அமோகன் என்பவனும் நிதானமாக சில ஆலோசனைகளை சொன்னார்கள். “சூரபத்மா, யாராலும் கொல்லமுடியாத தாரகனை சிவமைந்தன் வீழ்த்தியிருக்கின்றான் என்றால் அவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, ஒருவேளை சிவனே அவனை தூண்டிவிடுகின்றாரோ என்னவோ? நாம் அவசரபட்டு மோதுவதில் பலனில்லை ஒரு சிறுவனை ஏன் அனுப்பியிருக்கின்றார்கள் […]

நேற்று அண்ணாமலை கொடுத்துள்ள அந்த பேட்டி

நேற்று அண்ணாமலை கொடுத்துள்ள அந்த பேட்டி ஆழ்ந்து கவனிக்கதக்கது மட்டுமன்றி 75 ஆண்டுகால தமிழகம் சந்திக்கும் பெரும் அச்சுறுத்தல் பற்றிய கவலையினையும் கொடுத்திருக்கின்றது தமிழகம் எப்பொழுதும் தேசிய உணர்வுமிக்க பகுதி, அதனாலே இங்கிருந்து புலித்தேவன், கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பாரதி, வ.உ.சி என அழியா பாரத சுடர்கள் தோன்றின‌ வடக்கே இந்து இஸ்லாம், இஸ்லாம் சீக்கியம் என குழப்பத்தை செய்து வங்கம், பஞ்சாபில் சுதந்திர போராட்டத்தை நசுக்கபார்த்த பிரிட்டிஷ்காரனுக்கு தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் சாதி, தமிழுனர்வு போன்றவை […]

பழமொழி நானூறு : 18

“ஒருவர் உரைப்ப உரைத்தால் அது கொண்டுஇருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலாபெரு வரை நாட சிறிதேனும் இன்னாது,இருவர் உடன் ஆடல் நாய்” இருவர் ஒரு கருத்துக்காக வாதிடும் பொழுது இருவருமே ஒரே நேரத்தில் பேசி கூச்சலிட்டால் அதனால் ஆகபோவது ஒன்றுமில்லை, அது ஒரே நாயினை இருவரும் ஒரே நேரத்தில் வேட்டைக்கு பயன்படுத்துவது போன்றது என்கின்றார் புலவர் ஒரே நாயினை இருவர் ஒரே நேரத்தில் வேட்டைக்கு செலுத்த முடியாது, ஆளுக்கு ஒரு நாய் வைத்திருப்பதே சிறந்தது, அப்படி இருவர் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 10

“ஆதியொளியாகி யாள்வானுந் தானாகிஆதி யவனுருவு மாம்” இக்குறள் “ஆதிஒளியும் ஆகி ஆள்வானும் தான் ஆகி ஆதி அவனும் உருவுமாம்” என பொருள். இந்த ஒளிமிக்க ஜீவாத்மா எங்கிருந்து வந்ததோ அதுவே மூல ஒளியாகும், அந்த மூல ஒளியே பரமாத்மாவும் உலகை ஆள்பதாகவும், ஆதியும் பரம்பொருளாகவும் இருக்கும் ஈசன் என்பது பொருளாகும் இங்கு ஆதி என்பது சிவபெருமானை குறிக்கின்றது, இந்த ஆதி எனும் வார்த்தையினை ஒளவையின் சீடரான வள்ளுவனும் தன் குறளின் தொடக்கத்தில் சொல்லியிருக்கின்றான், அவ்வகையில் வள்ளுவன் சொன்ன […]

அந்த கோட்டை ஈஸ்வரன் ……

ஷேஷப்பா.. அந்த கோட்டை ஈஸ்வரன் தன் மக்களை காக்கும் போது, நீர் ஏன் உம் பிரிட்டன் ஜனங்களை காக்காமல் ஒரு இந்துவிடம் கையளித்தீர் தகப்பனே அய்ய்யா நாங்கள் இந்தியாவுக்கே கிறிஸ்தவ பிரதமர் ஆட்சி கோரி கதறும் நிலையில் நீர் பிரிட்டன் எனும் கிறிஸ்தவ தேசத்துக்கே ஒரு இந்துவை பிரதமராக்கியது எப்படி அய்யா? அய்ய்யா எங்கள் தகப்பனே, எங்களுக்கு படி அளந்து காரும் வீடும் தந்தவனே, பிரிட்டனை காட்டித்தானே இங்கு அப்பாவி மக்களை நாங்கள் ஏமாற்றி சம்பாதித்தோம் பிரிட்டனில் […]

கோவை கார் …

தீபாவளியன்றுமாக வந்த அதிர்ச்சி செய்தி அது, எவ்வளவு பெரிய சதியில் இருந்து கோவை தப்பியிருக்கின்றது எனும் தெய்வாதீனமான காவல் செய்தி அது அந்த சதியினை சர்வ வல்லமை பொருந்திய என்.ஐ.ஏ தடுக்கவில்லை, மாநில காவல்துறை உளவுதுறை தடுக்கவில்லை, இதனை தடுத்து காத்திருப்பது அந்த கோட்டை ஈஸ்வரர் எனும் காவல் தெய்வம் ஆம், அந்த சதிகாரனின் கார் கனத்த வெடிபொருளோடு அந்த கோவிலை கடக்கும்பொழுது வெடித்திருப்பது சாதாரணம் அல்ல, இந்துக்களை போல அவர்களின் தெய்வமும் விழித்துகொண்டது என்பதன் அறிகுறி […]

அந்த பிரிட்டனில் எல்லா நாட்டு மக்களும் எல்லா இனமும் உண்டு..

அந்த பிரிட்டனில் எல்லா நாட்டு மக்களும் எல்லா இனமும் உண்டு, எல்லா மதமும் மொழியும் உண்டு, வெள்ளையர்கள் சீனர்கள் கருப்பர்கள் அராபியர்கள் என எல்லா சமூகமும் உண்டு அந்நிலையில் வெள்ளை பிரதமருக்கு மாற்றாக ஒரு ஆசிய கருப்பர் (அதாவது அவர்கள் வழமையில் வெள்ளையர் அல்லாத எல்லோருமே கருப்பர்கள்தான், அது எவ்வளவு நிறமாக இருந்தாலும் கருப்பனேதான்) பிரதமராகியிருக்கின்றார் அதனை விட முக்கியம் ஒரு இந்து முதல் வெள்ளை கிறிஸ்தவர் அல்லாத‌ இந்து பிரதமராகியிருக்கின்றார் ரிஷி சுணக் எனும் இந்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications