Mugil Sivaன் “பயண சரித்திரம்”
Mugil Sivaன் “பயண சரித்திரம்” வாசித்துகொண்டிருக்கின்றேன், சும்மா சொல்ல கூடாது மனிதர் அபார உழைப்பினை கொட்டியிருக்கின்றார், ஏராளமான புத்தங்களை வாசித்தாலொழிய அது சாத்தியமில்லை
பாகுபலி I பாணியில் இந்த புத்தகத்தை முடித்திருப்பதுதான் பெரும் விஷயம்,
ஆம் இந்த புத்தகத்தில் உலகை மாற்றிய வாஸ்கோடமாகா, மெகல்லன், கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புகி பற்றி ஒன்றுமே இல்லை, அடுத்த பகுதியில்தான் சொல்வாராம்..
கட்டபாவின் செயலுக்கு இரு வருடம் காத்திருந்தது போல மனிதரின் அடுத்த புத்தகத்திற்கு பரிதவிப்போடு காத்திருக்க வேண்டியிருக்கின்றது, இப்போதைக்கு சரித்திர எழுத்தில் Mugil Siva நிச்சயம் தமிழக ராஜமவுலி
ஆனாலும் மார்க்கோ போலோ பற்றி சொன்னது ஆறுதல், அதில் ஒரு விஷயம் குறிப்பிடதக்கது
அதாவது தென்னகத்தில் ஒரு பள்ளதாக்கில் வைரங்கள் கிடந்ததாகவும், மனிதர் இறங்கமுடியாத பள்ளங்களில் அவை இருந்ததாகவும் அவற்றை எடுக்க தமிழர்கள் ஒரு காரியம் செய்ததாகவும் சொல்கின்றார்
இறைச்சி துண்டுகளை அப்பளத்தில் வீசினால், அதில் வைரம் ஒட்டிகொள்ளும், அதனை உண்ணும் கழுகுகள் மூலம் அல்லது பழக்கிய பருந்து மூலம் அந்த வைரத்தை எடுத்தார்கள் என ஒரு குறிப்பு வருகின்றது
இது முகில் சிவா மட்டுமல்ல, இன்னும் பலர் ஏராளமான இடங்களில் சொன்னது
அவ்வப்போது களக்காடு மலையில் ரூபி எனப்படும் நீல வைரம் கிடைப்பதாக முன்பு கதைகள் வரும், இப்போழுது நிலவரம் தெரியவில்லை, முண்டந்துறை புலிகள் சரணாலயம் அமைந்தபின் அந்த செய்திகளும் இல்லை
ஆக மார்க்கோ போலோ சொன்ன அந்த குறிப்பு கிட்டதட்ட களக்காடு மலையாக இருக்கலாம்..