எழில் மிகு மலேசியா
குறிஞ்சி, நெய்தல் என இரு நிலங்களை மட்டும் கொண்டது மலேசியா, பாலை எல்லாம் வாய்ப்பே இல்லை, முல்லை குறிஞ்சியோடு கலந்தே விட்டது, மருதம் தாய்லாந்தினை ஒட்டிய எல்லையில் கொஞ்சம்போல உண்டு. உணவு, உறைவிடம் உட்பட எல்லாமே இலவசம் சுற்றிபார்க்க வருகின்றாயா? என அழைத்தால் செவ்வாய்கிரகத்திற்கே செல்ல தயாராக இருக்கும்பொழுது, இந்த மலைக்காட்டிற்கு கிளம்பமாட்டோமா? அப்படி கிளம்பியாயிற்று, சென்ற இடம் அழகான மலையும் காடுகளும் நிரம்பிய பகுதி, இறைவன் பசுமை ஆடை உடுத்தி தவமிருக்கும் பகுதி. அவ்வப்போது பல […]