பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள்

தோற்றம் : 15-08-1931   :: மறைவு : 27-07-2015 இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள் பள்ளிகளில் விஞ்ஞான நாள் என கொண்டாடவேண்டிய நாள் இது. அந்த மாபெரும் மனிதனை, விஞ்ஞான தமிழனை இந்த தேசம் எப்படி நினைவு கூறுகின்றது என தெரியவில்லை அவரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது, இன்னும் எழுதினால் அவரே வந்து கீபோர்ட்டினை உடைத்துவிடுவார். இந்தியா அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றதோ இல்லையோ, யாழ்பாண பலகலைகழகம் அதனை கொண்டாடிகொண்டிருக்கின்றது யாழ்பாண மக்கள் கல்வியால் அடையாளம் பெற்றவர்கள், […]

வைகைப் புயல் வடிவேலு

https://youtu.be/pdb0VWOb6Bk பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அப்படியே இழுக்கின்றோம் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான். மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் […]

பா ராகவன் : எவ்வளவு அற்புதமான எழுத்தாளர்..

எழுத்தாளர்களில் பல பிரிவுகள் உண்டு, அவர்களில் சிலரின் எழுத்துக்களே அற்புதமாக ரசனையாக அமையும் பழம் எழுத்தாளர்களில் கி.வா.ஜா மற்றும் கண்ணதாசனின் எழுத்துக்கள் ரசனையானவை பிற்கால சுஜாதா எழுத்தில் ஒரு இமயம், எல்லா துறைகளியும் புகுந்து எழுதிய எழுத்து ஞானி. கலைஞரின் எழுத்துக்கள் நைல் நதி போல பழமையும் நீங்கா அழகும் கொண்டது ஈஸி சேரில் படுத்திருந்து கதை சொல்வது போன்றது கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள்,சுகா வின் எழுத்துக்கள் நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்லும். இந்த வரிசையில் அப்படியே வந்து […]

இந்திய உளவுதுறை சகல இடங்களிலும் இப்பொழுது கால்பதிக்கின்றது

எல்லை தாண்டும் இந்திய மீணவர்கள் வடிவில் இந்திய உளவாளிகள் , கைது செய்த மீணவர்களில் எத்தனை உளவாளிகள் என தெரியாமல் கடும் அதிர்ச்சியில் இலங்கை இது புதிய இந்தியா, இந்திரா காலத்திற்கு பின் இப்பொழுது உளவுதுறையில் கவனம் செலுத்துகின்றது, சர்ஜிக்கல் ஆப்பரேஷனில் அதன் பங்கு அதிகம் இலங்கையில் புடவை, புண்ணாக்கு வியாபாரிகளாக இந்திய உளவாளிகள் புகுந்துவிட்டனர் என ஏற்கனவே அலறிய இலங்கை இப்பொழுது மீணவர் வடிவிலுமா? என அலறுகின்றது. ஆனால் இலங்கையரே, உளவுதுறை வைத்தெல்லாம் உங்களை உளவுபார்க்கும் […]

தமிழகத்தில் கவர்னர் ஆட்சியினை அமல்படுத்தவேண்டும் : சு.சாமி

ஜெயலலிதாவிற்கு உடல்நலமில்லாததால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியினை அமல்படுத்தவேண்டும் : சு.சாமி மனிதர் ஒருவழியாக வாய்திறந்துவிட்டார், அதவாது அவர் இன்னும் திருந்தவில்லை, திருந்தவும் மாட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மெஜாரிட்டி எம் எல் ஏ பிரச்சினை என்றால் கவர்னர் ஆட்சி சரி, இங்கு என்ன நடந்தது? கட்சி அப்படியே இருக்கின்றது, 20 எம் எல் ஏக்கள் கிடைத்தாலும் அள்ளிகொண்டு கவர்னர் மாளிகை நோக்கி நடக்க எதிர்கட்சியும் வலுவாக இருக்கின்றது மாநில சட்ட ஒழுங்கும் அமைதியாகவே இருக்கின்றது, துணை முதல்வரை […]

சோ. ராமசாமி

மிக மிக சுவாரஸ்மான, அதே நேரம் பெரும் அறிவாளியும், சிந்தனையாளருமான சோ ராமசாமியின் பிறந்தநாள் இன்று அவரது நாட்டுபற்று சந்தேகமில்லாதது. அவரின் சில தொலைநோக்குகள் அற்புதமானவை, மிக அபாரமானது அவரின் துணிச்சல் அண்ணா காலம், மிசா காலம், புலிகள் ஆதரவு காலத்தில் எல்லாம் அவரின் துணிச்சல் அபாரமானது. அதுவும் 1985களிலே புலிகளை அவர் கண்டித்தவிதமும், பத்மநாபா படுகொலையினையொட்டி அவர் எழுதிய எழுத்துக்களும் மகா தீர்க்கமானவை. ஒரு பத்திரிகையாளன் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு அவரும் இலக்கணம். பிராமண ஆதிக்கம், […]

வாழ்த்துக்கள் புட்டீன்…

 ரஷ்ய தேர்தலில் புடின் அபரிமிதமான வெற்றியினை மறுபடியும் பெற்றிருக்கின்றார். வெற்றி எப்படி என்றால், எதிர்கட்ட்சி முடக்கபட்டது. களத்தில் நின்ற ஒரே பிரபலம் புட்டின். மொத்தம் பதிவான வாக்குகளே 40% கீழ்தான். அதாவது எப்படியும் புட்டீன் தான். தோற்றாலும் அவர் எப்படியும் வந்துவிடுவார், எதற்காக ரிஸ்க்? என மக்கள் ஒதுங்கிகொண்டார்கள். ஆனால் புடீன் ஆட்சியும் மோசம் இல்லை, உலக அரங்கில் 1980க்கு பின் ரஷ்யாவினை உயர்த்தினார், ஈரான் போர் தடுக்கபட்டதும் அவராலே, சிரியா இன்னும் வீழாமல் இருப்பதும் அவராலே. […]

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி : கடும் பதட்டத்தில் எல்லைபகுதி இந்தியா தனது தாக்குதலை தொடங்கிவிட்டது என ராணுவ தளபதி அறிவித்திருக்கின்றார், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ சீருடையிலும், இந்திய காஷ்மீரில் தீவிரவாதிகளாகவும் அலையும் ஏராளமான பாகிஸ்தானியர் கொல்லபட்டிருக்கின்றனர் அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் 2 வீரர்கள் செத்ததாக ஒப்புகொண்டிருக்கின்றது. அதற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை ஒரு பலசாலி தன்னால் முடிந்தமட்டும் பார்த்துவிட்டே தன் பலமிக்க ஆயுதத்தை இறுதியாக எடுப்பான், இந்தியா அப்படித்தான் […]

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை நடந்தவரைக்கும் ஒரு அறிக்கையுமில்லை. கேட்டால் பதில் இருக்காது, கம்மென்று இருப்பார்கள். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்றது என சில பொருள்களை பார்த்த நினைவு உண்டு அவ்வளவுதான். சென்னை எழும்பூர் மியூசித்தில் சில பொருட்கள் உண்டு. அவ்வளவுதான் ஆதிச்சநல்லூர் ஆராய்சி. பொருளாவது மிஞ்சி இருக்கின்றது. பண்டைய மதுரை பற்றி ஏற்கனவே குறிப்புகள் உண்டு, இப்பொழுது இருப்பது பண்டைய மதுரை அல்ல, அது சற்று தள்ளி வேரொரு இடத்தில் இருந்தது, பின்னாளில் அது அழிந்து […]