பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொரோனா தன் நாட்டில் யாராலோ திட்டமிட்டு பரப்பபட்டதாக அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது.

13.5 லட்சம் பேரை பாதித்து, கிட்டதட்ட 75 ஆயிரம் பேரை கொன்று , இன்னும் 50 ஆயிரம் பேர் கழுத்தை நெறித்து கொண்டிருகின்றது கொரோனா அமெரிக்க எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகின்றது, பத்தாயிரம் பேருக்கு மேல் பலியாகி இன்னும் நிமிடத்துக்கு இருவர் இறந்து கொண்டே இருக்கின்றனர் நாம் முன்பே சொன்னதை அமெரிக்க தலமை இப்பொழுது சொல்கின்றது நாம் அன்றே அமெரிக்க விடுதலைபோர், உள்நாட்டு போர், பேர்ஸ் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் மிக மோசமான […]

தியாக நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மோடி.

ஒரு நல்ல ஆட்சியாளனின் திறமை நாடு சிக்கலில் மாட்டும்பொழுதுதான் பளிச்சிடும், மோடியின் அசத்தலான நடவடிக்கை இப்பொழுது மலைமேல் ஜோதியாய் மின்னுகின்றது மோடி கொரோனா பரவ ஆரம்பித்த ஜனவரியில் இருந்தே பல விஷயங்களை செய்துவந்தார், உச்சமாக கொரோனா வெடித்ததும் முதல் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதியினை மார்ச் 20ம் தேதியே நிறுத்தினார் இன்று 30 நாடுகள் இந்திய மருந்துக்காக கெஞ்சுகின்றன அமெரிக்க்கா உட்பட, மோடியோ எம் மருந்து எம்மக்களுக்கே என சொல்லிகொண்டிருக்கின்றார், ஆக இந்தியா போதுமான மருந்துகளை […]

இந்தியாவில் மோடியினை கொரோனா நிரந்தரமாக பதவியில் அமர்த்திவிட்டது.

உலகில் பல ஆரூடங்கள் வர ஆரம்பித்துவிட்டன‌ அதாவது கொள்ளை நோய்கள் என்பது ஐரோப்பாவுக்கு புதிதே அல்ல, முன்பெல்லாம் அடிக்கடி வரும். அதுவும் ஆசியாவுக்கு போர், வியாபாரம் என அவர்கள் வந்தபின் அடிக்கடி வந்தன‌ இந்த லாக் டவுண், எல்லை மூடல் , சர்ச்சைகள், கொத்து சாவுகள் எல்லாம் அவர்களுக்கு பழக்கபட்டவை. ஒன்று கொள்ளை நோயால் நடக்கும் இல்லை போர்களால் நடக்கும். அன்பின் வடிவான கிறிஸ்தவ மத நாடுகள் என்றாலும் அவர்களுக்குள் வெட்டி கொண்டும் சுட்டு கொண்ட செத்தும் […]

பங்குனி உத்திர திருவிழா!

updated on March 24, 2024 பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது. மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும் சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, […]

கங்கை சுத்தமாகிகொண்டிருக்கின்றது என்பதை விட இந்தியனுக்கு என்ன வேண்டும்?

இந்த கொரோனா என்பது மானிட உயிர்களை எடுத்து மனுகுலத்தை வீட்டுக்குள்ளும் மருத்துவமனைக்குள்ளும் அடைத்தாலும் இயற்கைக்கு அது கொடுத்திருப்பது மறுபிறப்பு விமானங்களும், ரயிலும், தொழிற்சாலைகளும் இயங்கவில்லை என்பதால் காசு மாசுபாடு, நீர் மாசுபாடு மிக மிக அதிகம் குறைந்து அவை சுத்தமாகின்றன‌ கடற்கரைகள் சுத்தமாய் கிடக்கின்றன, கழிவுகள் கலக்காததால் ஆறுகள் ஆதிகாலத்தில் ஓடிய அந்த தூய சாயலை அடைந்துவிட்டன‌ பூமி குளிர்கின்றது , அண்டார்டிக்கா பனிபாறையின் அளவு அதிகரிக்கின்றது பூமியே மறு வடிவம் எடுக்கின்றது விஞ்ஞானமும் இந்து புராணங்களும் […]

தீபத்தின் சக்தி.

அந்த இந்தியா சீனாவுடனான யுத்தத்தில் சோர்ந்திருந்தது, நேரு என்பவர் சத்தமே இல்லை அவர் துண்டிருந்தார், தலைவன் உற்சாகமாக இல்லா சேனையும் தேசமும் தோற்கும் இதை மிக சரியாக கணக்கிட்டே `1965ல் பாகிஸ்தான் படையெடுத்தது, துவண்ட இந்தியா துவண்டே பலகீனமாஹிவிட்டது, நேருவும் இல்லை அதனால் ராணுவமும் உற்சாகமாக இல்லை என்றுதான் மிக நுட்பமாக வந்தார்கள் ஆனால் சாஸ்திரி அரணாக எழும்பினார், அவருக்கு துணையாக காமராஜர் எனும் மாபெரும் தியாகசுடரும் எல்லைக்கே சென்றது, “ஜெய் ஜவான்..” என அவர் முழங்கிய […]

ரமணர் ஏன் கொண்டாடபடுகின்றார்?

அது இரண்டாம் உலகபோர் காலம் ஹிட்லர் உலகையே கொரோனா போல அச்சுறுத்திய காலம், அந்நேரம் அவனுக்கு இருந்த படைபலமும் திறமையும் எவனுக்குமில்லை உலகத்தை அவன் ஆட்டி வைத்தான் அலற வைத்தான், போதா குறைக்கு ஜப்பானும் இத்தாலியும் சேர்ந்து கொண்டது அவனின் அகோர ஆட்டத்தில் அலறிய கிறிஸ்தவ உலகம் அவனே அந்தி கிறிஸ்து என்றது, இஸ்லாமிய உலகம் முதலில் அவனை ஆதரித்தது ஆம் அவன் யூத எதிரி என்பதால் கைதட்டியது ஆயினும் அவனின் மிக கடுமையான அணுகுமுறையினை கண்டபின் […]

சுந்தரம் பிள்ளை!

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார். கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார் அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு. அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார் பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் […]

பாரத சமூகத்தின் ஞானவழி உங்களுக்கு புதுவாழ்வு கொடுக்கும்!

ஐரோப்பாவினையும் அமெரிக்காவினையும் கண்ணீரோடு உற்று பார்க்கின்றோம் அவர்களின் வலிமை மிக்க போர்கப்பல்கள் அவசர மருத்துமனைகளாகின்றன, மற்றவரை பார்த்த மாத்திரமே அசர வைக்கும் வளத்தின் அடையாளமான விமான நிலையம் மூடபட்டு கிடக்கின்றது அவர்களின் சாலைகள் சுத்தமாக துடைக்கபட்டிருகின்றன‌ உலகை அதிரவைக்கும் சகல வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கங்கள், ஆர்வாரமும் ஆர்பரிப்பும் கேட்ட மைதானங்கள் கொரோனா முகாம்களாகிவிட்டன‌ சூரியனை எட்டும் நூறுமாடி கட்டங்களில் இருந்து கொண்டு உலகை சுரண்டுவது எப்படி என்றும் அடுத்த 200 ஆண்டுகளுக்கு ஐரோப்பா உச்சத்திலே இருப்பது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications