பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆளும் வர்க்கம் மாறி இருகலாமே தவிர, ராஜ நீதிகள் மாறவே இல்லை

அன்று நமக்கு கல்வி மறுக்கபட்டது, பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்… என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை இந்தியாவில் வெள்ளையன் வருவதற்கு முன்பு என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது அதிலும் பாருங்கள் […]

தமிழரில் நாம் ஈழதமிழரை கவனிக்கின்றோம்

தமிழரில் நாம் ஈழதமிழரை கவனிக்கின்றோம் சும்மா சொல்ல கூடாது, தமிழக தமிழருக்கும் அவர்களுக்குமான கல்வி இடைவெளி 150 ஆண்டுகள் அதிகம் ஆம் தமிழக பிராமண சமூகத்தைவிட அவர்கள் பெற்ற கல்வியும் அதனால் அவர்கள் பெற்ற வீச்சும் அதிகம் முதலில் கொழும்பு, பின்பு சிங்கப்பூர் மலேசியா அதன் பின் ஐரோப்பா அமெரிக்கா என அவர்களின் கொடி உச்சததில் பறக்கின்றது மலேசியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை மகா முக்கிய தொழிலதிபர்கள் அவர்களே, இளம் தொழில் தலைமுறையும் அவர்களே அவர்கள் […]

அக்கால ராஜநீதியால் நிகழ்ந்த விஷயங்கள்

உடன்கட்டை ஏறுதல், முலைவரி, தேவதாசி முறை எல்லா இந்துக்களின் அங்கம் என்பது அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் சில பழிகள் உண்மையில் உடன்கட்டை ஏறுதலை எந்த சட்டமும் இந்து தர்மமும் எழுதிவைக்கவில்லை, அதில் இருவகை இருந்தன‌ “கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்..” என்பது அந்த வாக்கியம், கணவனை இழந்த மனைவி வாழ விரும்புவதில்லை, மன்னனிடம் நீதிகேட்ட கண்ணகியே மதுரையினை எரித்து தானும் எரிய விரும்பியதாகவும் ஆனால் தீ சுடாமல் விட்டதாகவும் சில தகவல் உண்டு அவள் மதுரையினை எரித்தது […]

எங்கே இருந்தது பெண் அடிமைதனம்?

இந்து மதத்தில் இந்தியாவில் தமிழகத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது என பலர் கிளம்பி இருக்கின்றார்கள் எங்கே இருந்தது பெண் அடிமைதனம்? மனைவி தவிர எல்லா பெண்களையும் ஏன் அவள் சிறுமி என்றாலும் “தாயே” என அழைத்த மிக பெரிய பாரம்பரியம் இந்தியாவினுடையது, இன்றும் அது இந்திய கிராமங்களில் உண்டு இந்து மதம் பெண்ணை கடவுளாக போற்றியது, யூதமும் இஸ்லாமும் பெண்ணை அடக்கி வைத்த காலத்தில் பெண்ணை சக்திவடிவமாக அதுவும் சிவனில் பாதியாக வைத்து பூஜித்தது அதை தவிர […]

பெரியாரிய பெண்களுக்கான இலக்கணம் என்ன?

பெரியாரிய பெண்களுக்கான இலக்கணம் என்ன? கிராப் வெட்டவேண்டும், தாலி அணிய கூடாது அல்லது ஒரு திருமணத்தோடு நிற்க கூடாது. பூவும் பொட்டுமாக மங்கள கரமாக இருக்கவே கூடாது, பார்த்தாலே ஒரு பயம் வரவேண்டும் பஜாரித்தனம் தெரியவேண்டும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்றவற்றுடன் அறிவையும் கழற்றி வைத்துவிட வேண்டும் தண்ணியடிப்பது, சிகரெட் இன்னபிற கூடுதல் தகுதிகளாக கொள்ளபடும், அடிக்கடி கருப்பு சட்டை விடலைகளுடன் படம் எடுக்க வேண்டும் தப்பு அடிக்க தெரிந்திருக்க வேண்டும், விசில் அடிக்க தெரிந்தால் […]

பெருமாள் பக்தர்களுக்கு இது மகா புண்ணியமான மாதம்

இன்று புரட்டாசி விரதம் தொடங்குகின்றது, பெருமாள் பக்தர்களுக்கு இது மகா புண்ணியமான மாதம் சனிக்கிழமை விரதம் மட்டுமல்ல, அமுக்தாபரண விரதம்,ஜேஷ்டா விரதம்,தூர்வாஷ்டமி விரதம் மஹாலட்சுமி விரதம், கபிலா சஷ்டி விரதம், அனந்த விரதம் என ஏகபட்ட விரதங்கள் உண்டு எனினும் பெருமாளுக்கு உகந்த மாதமாகவே அறியபடுகின்றது சனிகிழமை விரதம், மகாலய அமாவாசை போன்ற பல விஷயங்கள் இம்மாதத்தில் நடக்கவிருக்கின்றன‌ இது வைணவர்களுக்கான மாதம் என அறியபட்டாலும் உண்மையில் எல்லா பிரிவினருமே விரதம் இருந்து அருள்பெறும் காலம்.. விரதமிருந்து […]

இந்தியா தன் விண்வெளி வீரரை 2022ல் விண்வெளிக்கு அனுப்பதயாராகின்றது

இந்தியா தன் விண்வெளி வீரரை 2022ல் விண்வெளிக்கு அனுப்பதயாராகின்றது, இதற்கு முன்பு ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பறந்தாலும் ரஷ்ய கலத்தில் அவர்கள் அழைத்து சென்றார்கள் இப்பொழுது 30வீரர்களை தேர்ந்தெடுத்து இந்தியா பயிற்சி அளிக்கின்றது, 2022ல் அவர்களில் சிலர் பறப்பார்கள் இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திற்று, அவர்களும் 2022ல் விண்வெளிக்கு பறப்பார்களாம் , சீனா உதவுமாம் பாகிஸ்தான் சீனாவில் இஸ்லாமியர் கொடுமைபடுத்தபடுவது பற்றி ஏன் வாய்திறக்கவில்லை என இந்தியா சில சக்திகளின் ஊடாக கொளுத்தி போட்டது, ஆனானபட்ட […]

பெரியார் இந்துமதத்தில் ரிவர்ஸ் ஸ்விங்க் வீசியிருக்கலாம்

ஆமாம், அந்த பெரியார் இந்துமதத்தில் ரிவர்ஸ் ஸ்விங்க் வீசியிருக்கலாம் அதாவது எதிர்ப்பது போல் எதிர்த்து ஒரு விஷயத்தை வெற்றிகரமாக நடத்துவது குறிப்பாக குழந்தையிடம் “ஓடாதே..” என்றால் ஓடும், “அழாதே.. என்றால் அழும், சிரிக்காதே என்றால் சிரிக்கும் பொதுவான மன தத்துவம் இது, ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் செய்ய மனம் துடிக்கும் இந்த தத்துவத்தை இந்துமதத்தை வளர்க்க பயன்படுத்தியிருக்கின்றார் பெரியார், ஆம் அவரின் செயல் ஒவ்வொன்றும் அப்படித்தான் இருக்கின்றன‌ அசமந்தமாய் இருந்த இந்துக்களிடம் சிந்திக்க சொல்லியிருக்கின்றார், ஆலயத்தில் […]

விளைவுகள் நன்றாய் இராது அய்யா..

காந்தியினை சுட்டது ஒரு கருவிதான் ஆனால் கருவிக்கு பின் இருந்த சக்தி முறியடிக்கபட வேண்டியது என சூர்யா ஏதோ ஒரு சினிமாவில் பேசியதாக செய்திகள் அது உண்மையாக இருந்தால் அன்னாருக்கு சில கேள்விகள் அய்யா சிவக்குமார் பெற்றேடுத்த சீமந்த புத்திரா, ராமசந்திரனை ராதா சுட்டால் அது தனிபட்ட காரணமா? ஏன் திராவிட சிந்தாந்த மோதல் இல்லையா? இந்திராவின் மேல் தமிழகத்தில் எறியபட்டது ஒரு கல், அந்த கல்லின் பின்னால் இருந்த சக்தி எது? இந்திராவினை சுட சொன்ன […]

அஸ்திரா ஏவுகனையினை மிக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

ரஸ்தம் விமானம் சொதப்பினாலும்இந்தியா அஸ்திரா ஏவுகனையினை மிக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது அஸ்திரா வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகனை வகை, இதன் வேகம் 5 ஆயிரம் கிமீ என்கின்றார்கள், கிட்டதட்ட 15முதல் 20 கிலோ வரையிலான வெடிபொருளுடன் அது பாயும் இந்த வேகத்தில் எதிரியின் எந்த விமானத்தையும் வீழ்த்தமுடியும் முழுக்க இந்தியதயாரிப்பான அஸ்திரா ஏவுகனையின் வெற்றி இந்திய விமானப்டைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் வலுசேர்க்கின்றது, தேசத்தின் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் விமானமோ, விக்ரம் லேண்டரோ தரையிரங்குவதில் சிக்கல், ஆனால் ஏவுகனைக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications