பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாபெரும் போராளி

செப்டம்பர் 2 அந்த மாபெரும் போராளி மற்றும் பெரும் கிழக்காசிய வரலாற்றின் நினைவுநாள் இந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி அல்லது புரட்சியாளன் யார்? என்பதில் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது வியட்நாமின் ஹோ சி மின். உலகம் உள்ள காலம் வரை நிற்கும் அவரது சாதனை. காரணம் யாரும் எளிதில் அந்த சாதனை சிகரத்தின் அடிவாசலை கூட நெருங்குவது சிரமம். சோழர்கள் காலத்திலே நாம் வியட் அல்லது வியட் நாம் என அழைக்கபட்ட நாடு, பின் பிரான்சின் […]

இளையராஜா போல எழுந்த ரகுமான் அவரைபோலவே சரிவார் என்பதை காலம் விரைவில் சொல்லும்..

அந்த வைரமுத்து இளையராஜா மேல் அன்று கொந்தளிப்பில் இருந்தார், தன்னாலும் இளையராஜா இல்லாமல் நிற்கமுடியும் என நிரூபிக்க வேண்டிய வெறியும் அவசியம் அவரிடம் இருந்தது அந்த ஏ.ஆர் ரகுமானும் போராடிகொண்டிருந்தார் தன்னை உலகுக்கு காட்ட வேண்டிய அவசியம் அவருக்கும் இருந்தது இரு ஜாம்பவான்கள் ஒன்றாக களத்துக்கு வந்த காட்சி மோடி அமித்ஷா போல இல்லை இல்லை அர்ஜூனனும் கண்ணனும் போல அப்படி கலக்கியது இதே காலத்தில் வாலியும் ரகுமானும் இணைந்தது கண்ணனும் பலராமனும் போன்ற காலங்கள் ஆம் […]

ஆண்ட பரம்பரை இம்சைகள்

இந்த ஆண்ட பரம்பரை இம்சைகள் ஏராளம்.. நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரை என வீரவசனம், நாங்கள் இல்லாமல் கட்டபொம்மன் இல்லை, புலிதேவன் இல்லை அவன் இல்லை இவன் இல்லை என ஏக அழிச்சாட்டியம் சரி நீங்கள்தான் ஆண்ட பரம்பரையாயிற்றே ஏன் நாயக்கனுக்கு அடியாட்களாய் இருந்தீர்கள் என்றால் இல்லை இல்லை நாங்கள் அதற்கு முன்பே ஆண்டோம் என்கின்றார்கள் சரி ஆண்ட பரம்பரையா நாயக்கனுக்கு அடியாட்களாய் இருந்தீர்கள் அது மானமா? சாக வேண்டாமா? அடுத்தவனுக்கு அடிமையாய் இருப்பதா ஆண்ட வீரம்? என […]

சென்னையின் பூர்வகுடி

சென்னையில் வடநாட்டான்கள் குவிந்துவிட்டார்களாம் உண்மையில் சென்னையின் பூர்வகுடி என்பது மிக சொற்பமே அதுவும் கடற்கரைகுப்பத்தோடு சரி மீதமெல்லாம் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் என எங்கிருந்தோ வந்து குடியேறியவர்கள் இவர்கள் முந்திகொண்டு பின் வந்தவர்களை பார்த்து பான்பராக் வாயன், வடக்கத்தியன் என சொல்லி சிரித்து கொள்கின்றார்கள் , பரிதாபம் எல்லாம் சென்னைக்கு வந்தேறி கூட்டம்தான், வடமாநிலத்துக்காரன் கொஞ்சம் லேட் அவ்வளவுதான் விஷயம்.

அகில உலக காமெடி

பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சரின் அடாவடி பேச்சுத்தான் இப்போதைய அகில உலக காமெடி ஆனால் அதையும் மிஞ்சி விடுகின்றது திமுகவில் மாற்றுகட்சியினர் சேரும்பொழுது சொல்லும் அந்த வசனம் “முக ஸ்டாலினின் அறிவு, ஆற்றல்மற்றும் அயரா சமூகபணியில் ஈர்க்கபட்டு திமுகவில் இணைந்தேன்” நிச்சயம் இரவெல்லாம் சொல்லி சொல்லி தனக்கு தானே சிரித்து மனதை ரணமாக்கி கடும் பயிற்சியுடன் வந்தாலொழிய இதை கேமரா முன் சிரிக்காமல் சொல்வது முடியாத விஷயம் ஆனால் அதை கேட்டு சிரிக்காமல் குறிப்பெடுக்கும் நிருபர்களின் பயிற்சி அதைவிட […]

வாழ்க்கைதான் வான்வெளி அறிவியல்…

ஓவ்வொரு விஷயமும் அடுத்த கட்டத்தை தாண்டியவுடன் பிரிய வேண்டும் என்பது இயற்கையின் விதி மானிட வாழ்வில் அது வழமை, ஒரு கட்டத்தில் தாய் தந்தையினை பிரிவது, பிள்ளைகளை பிரிவது என்பது வாழ்க்கை நிலைப்பாட்டின் மைல் கல் அல்லது பிள்ளைகளை சுமந்து வளர்த்து பிரிந்தபின் பெற்றோரின் கடமை முடிகின்றது, பிள்ளைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஒரு கட்டத்தில் நிறுத்தியபின் முடிகின்றது ஏன் பறவை கூட பறக்க கற்றுகொடுத்தபின் பிரிகின்றது, மிருகங்களும் மீன்களும் கூட அப்படியே விஞ்ஞானத்திலும் இத்தத்துவம் உண்டு. […]

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் தன் பொன்விழாவினை நெருங்குகின்றது மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும் அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம் விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் […]

அட்டகாசமான அரசியல் இது..

நாமெல்லாம் தெலுங்கானா கவர்ணராகிவிட்ட தமிழிசையினை நோக்கி கொண்டிந்தோம், பாஜகவினர் கே.ஆர் விஜயா போல இயல்பான புன்னகையில் வாழ்த்தினார்கள் எதிர்கட்சியினர் சுஹாசினி போல முகத்தை ஒருமாதிரி சுளித்துகொண்டு வாழ்த்தினார்கள் விஷயம் வாழ்த்து அல்ல, கேரள கவர்ணரை பற்றியது கேரளாவின் கவர்ணராக நியமிக்கபட்டிருப்பவர் ஆரிப் முகமது கான், உபி இஸ்லாமியர் நம்ம ஊர் ப.சி போல அக்கால காங்கிரசில் முக்கிய புள்ளி ராஜிவ் அரசில் அவர் அமைச்சராக இருந்தபொழுது ஷபானு என்பவரின் விவாகரத்து சர்ச்சையான பொழுது காங்கிரஸில் இருந்து வெளிவந்தார் […]

ஒரு குடிமகனுக்கு கூட பாதுகாப்பு வழங்கமுடியாத என்ன ஆட்சி இது?

வட மாநிலத்தில் அச்சம்பவம் நிகழ்ந்திருகின்றது ஒரு ஆணுடன் ஒரு பெண் நெருங்கி பழகியிருக்கின்றாள், உலகில் மிக பலமான ஆயுதம் இளமையான பெண் எனும் சாணக்கியனின் சொல் அங்கு உண்மையாக இருந்திருக்கின்றது அவனை மறைவான இடத்திற்கு ஒருநாள் அப்பெண் அழைத்து சென்றிருக்கின்றாள், அங்கு 6 குண்டு பெண்கள் அதாவது ஆயுதம் தரித்த சமூக விரோத பெண்கள் இருந்திருக்கின்றார்கள் கொஞ்சம் போதை, பாக்கு என இருந்த பெண்கள் அவனை மிரட்டி காசு பர்ஸ் ஏடிம் கார்டு மறக்காமல் பாஸ்வேர்ட், போன் […]

தெரிந்தால் என்ன செய்வார்?

சிம்புவால் தங்களுக்கு நஷ்டம் அவரிடமிருந்து நஷ்ட ஈடு வேண்டும் ஏதாவது காவல்துறை அல்லது நீதிமன்றம் செய்ய வேண்டும் என தயாரிப்பாள சங்கம் சொல்லிகொண்டே இருந்தது அவர்களை மேலும் கடுப்பேற்ற என்ன செய்யலாம் என கடுமையாக சிந்தித்த சிம்பு வெற்றி புன்னகையுடன் தாய்லாந்து சென்றுவிட்டார் ஆம் அந்த தாய்லாந்துதான் தயாரிப்பாளர்களை கதற கதற அழ வைக்க அதை தவிர வெறு திட்டம் அவரிடம் இல்லை, இதனை விட சிறந்த‌ திட்டம் இருக்கவும் முடியாது இதனால் ஆடிபோன தயாரிப்பாளர்கள் இப்படியே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications