பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரத்தன் டாடா

இன்று (28/12) டாடா குழுமங்களின் தலைவரும் இந்தியாவின் மகா முக்கிய பொருளாதர தூணும், பெரும் வரி கட்டுபவரும் ஏகபட்ட சமூக சேவைகளை துளி சர்ச்சைகள் வராமல் செய்பவருமான ரத்தன் டாடாவின் பிறந்தநாள். ரத்தன் டாடாவின் பிறந்த நாள் என்பது தனிபட்ட வகையில் அவருக்கு வாழ்த்தும் பிரார்த்தனையும் தெரிவிக்கும் நாள் என்றாலும் பல உண்மைகளை சொல்லும் நாளும் அதுவேதான். இந்தியாவில் பிரிட்டிசார் காலத்திலே தொழில்சவால் விட்ட ஜேஆர்டி டாட்டாவின் கனவினை இன்று ரத்தன் டாடா 100 மடங்கு வேகத்தில் […]

திருபாய் அம்பானி

இந்துஸ்தானம் அக்காலத்தில் இருந்தே வியாபார பூமி, அதன் ஆற்றின் கழிமுகங்களும் துறைமுகங்களும் பண்டைய காலம் தொட்டே வியாபாரத்தில் சிறந்திருந்தன‌ அந்த வணிகத்தில் பல இந்துஸ்தான இனங்கள் முத்திரை பதித்தன, நகரத்தார் எனும் தமிழக செட்டியார்கள் அதனில் முக்கியமானவர்கள், பூம்புகார் அவர்களின் கோட்டையாக இருந்தது அங்கிருந்து கிழக்காசியா, ஆப்ரிக்கா, செங்கடல் என எங்கெல்லாமோ அவர்கள் கப்பல்கள் சுற்றின‌ அந்த இந்துக்களின் ஆதிக்கம் பூம்புகாரின் கடற்கோளுக்கு பின் சுருங்கிவிட்டது, வேறு இடங்களுக்கு வியாபாரம் நகர்த்தபட்டாலும், கிழக்காசிய நாடுகளுடன் பெரும் வியாபார […]

உலகம் எங்கும் பரவியிருந்த சநாதன ஞானம் – சாலமோன் அதற்கு ஒரு சான்று

இந்திய யூத தொடர்புகள் வரலாற்றில் மிக மிகப் பழமையானவை. யூத இனம் அன்றே அறிவைத் தேடிய இனம். எங்கெல்லாம் எதெல்லாம் சிறந்ததோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த இனம். அப்படிபட்ட இனம் அன்று பெரும் கலைகள், விஞ்ஞானம், மெய்யியல், ஆன்மீகம், தியானம் என பெரும் ஞானபூமியாக இருந்த ஹிமாசலத்துக்கு குறிப்பாக காஷ்மீரத்துக்கு அடிக்கடி வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காஷ்மீரத்து இந்து ஞானம் மேற்காசியாவில் அலை மோதியது. இந்த தொடர்ச்சிதான் இயேசு பிறந்தபோது மூன்று இந்து […]

சேந்தனாரின் திருவாதிரை திருப்பதிகம் “”பல்லாண்டு கூறுதுமே” – ஒன்பதாம் திருமுறை

இன்று பாடவேண்டிய திருப்பதிகமான “பல்லாண்டு கூறுதுமே” எனும் மார்கழி திருவாதிரை வழிபாட்டுகுரிய பாடல் எது என்பதை இதோ தருகின்றோம். இந்நாளில் இதனைப் பாடுதல் நலம். குழுவாக கூட்டமாகக் கூடிப் பாடுதல் இன்னும் நலம். திருச்சிற்றம்பலம் சொல்லித் தொடங்கலாம். “மன்னுக தில்லை வளர்கநம்பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்துபுவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன்அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. மிண்டு மனத்தவர் போமின்கள்மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடிஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் […]

திருவாதிரை – ஆருத்திரா தரிசனம்

ஆருத்திரா தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள். ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

“பாரத ரத்னா” மதன்மோகன் மாளவியா

இந்துஸ்தானத்தில் அந்நியர் வந்துதான் கல்வி தந்தனர், மிகபெரும் கல்விசாலைகளை அவர்கள்தான் அமைத்தார்கள் என்றால் அது மடமை அல்லது மிகபெரிய மோசடி அரசியல் இங்கு கல்வி இந்திய வாழ்வியலிலில் நில அளவியல், நீர் மேலான்மை, கணிதம், வானியல், வரி உள்ளிட்ட நிதியம் என எல்லா வகையிலும் இந்நாட்டின் கலாச்சாரபடி மிக மிக வளர்ந்துதான் இருந்தது தமிழ்பேசும் பகுதியில் மட்டும் மூவாயிரம் குருகுலங்கள் இருந்தன என்கின்றன செய்திகள் அந்த கல்விமுறைதான் இந்துஸ்தானை பொன் விளையும் பூமியாக மாற்றியது, இங்கு உலோகவியல் […]

ஜெகதீஷ் சந்திரபோஸ்

ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை இந்துக்களின் ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, ஆன்மீகமும் அதன் தேடலும் பெருகியிருந்த அன்றைய வங்கம் அவரை அப்படி வித்தியாசமான விஞ்ஞானியாக உருவாக்கியிருந்தது ஆனால் அவரின் ஒரு பக்கமும் அவரின் கோட்பாடும் மேற்குலக விஞ்ஞானத்தால் மறைக்கபட்டன அது இன்றுவரை தொடர்கின்றது போஸின் கம்பியில்லா தகவல் தொடர்பு ஆராய்ச்சி கட்டுரையே மார்கோனி ரேடியோ கண்டுபிடிக்க அடிப்படையாய் இருந்தது, சரி போஸ் ஏன் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் தாவரவியலுக்கு வந்தார்? முதன் […]

முருகனின் மூன்று சோழதேச கோவில்கள்

முருகப்பெருமானின் ஆலயங்கள் உலகெல்லாம் உண்டு, ஒவ்வொரு ஆலயமும் முருகபெருமானின் அளவற்ற ஆற்றலையும் தனி கருணையினையும் சொல்பவை, அப்படியே தன் அடியார்மேல் அவன் கொண்ட அளவற்ற பிரியத்தையும் காலமெல்லாம் அந்த பக்தியின் பெருமை நிலைபெற்று நிற்க அவன் காட்டிய தனிபெரும் அதிசய வரலாறுகளின் காட்சிதலமாய் நிற்பவை இப்படி ஏராளமான ஆலயங்கள் உண்டெனினும் மூன்று ஆலயங்கள் ஒரே ஒரு முருகபக்தனை, அவன் செய்த அற்புதமான கலையினை முருகபெருமான் சிலையாய் கொண்டு கண்முன் நிற்கின்றது அந்த வரலாறு ஒவ்வொருவரும் அறியவேண்டிய ஒன்று, […]

விவேக் ராமசாமி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான காட்சிகள் தொடங்கிவிட்டன , குடியரசு கட்சியின் பிரமுகரும் இந்திய வம்சாவளி இந்துவுமான விவேக் ராமசாமியின் பிரச்சாரமும் அவரின் பதில்களும் கவனிக்கபடுகின்றன‌ அந்நேரம் இந்துமதம் எனக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்தது, உலகமும் சமூகமும் நல்லவழியில் வாழ அங்கு பல கருத்துக்கள் உண்டு போதனைகள் உண்டு என அவர் சொல்லியிருப்பது கவனம் பெறுகின்றது ஏன் அப்படி சொன்னார் விவேக் ராமசாமி? ஒவ்வொரு நாட்டு தேர்தலிலும் அந்நாட்டு மக்கள் வேட்பாளருக்கு சில […]

சாஸ்தாவின் அறுபடை வீடு

கார்த்திகை மாதம் என்பது இந்துக்களுக்கு ஞானம் தேடும் மாதம், கூடவே ஆரோக்கியமும் தேடும் மாத, அக்கால கட்டத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் சில பலன்களை கொடுக்கும், அதை நுணுக்கமாக கண்காணித்து பல எற்பாடுகளை செய்தனர் இந்து ஞானியர் கார்த்திகை என்பது ஞானத்தின் தொடக்கம், அதனாலே முருகபெருமான் எனும் ஞானபண்டிதனை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள் அந்த கார்த்திகையில் பல வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள், கார்த்திகையில்தான் சூரசம்ஹாரம் நடக்கும் இன்னும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications