பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“மஹாவீர் சக்ரா” ஜஸ்வந்த்சிங் ராவத்

“ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்””நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?மெல்லிய திருவடி […]

சபரிமலை

அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி அந்த சபரிமலை எனும் புனிதமான மலையில் பின்னாளில் மகிஷி எனும் அரக்கி ஆட்டம் போட ஆரம்பித்தாள், அவள் மகிஷன் எனும் எருமைதலையனின் சகோதரி, அவனை அன்னை […]

பஞ்சாபிய சிங்கம் லாலா லாஜ்பதி ராய்

அந்த பஞ்சாபிய சிங்கம் மேல் பாரதிக்கு தனி அன்பும் அபிமானமும் இருந்தது, அவன் எழுதிய வரிகளோடே அந்த உத்தமான இந்தியனுக்கு அஞ்சலி செலுத்தலாம் “விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்அதன்கதிர்கள் விரைந்து வந்துகண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?நினையவர் கனன்றிந் நாட்டுமண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்யாங்களெலாம் மறக்கொ ணாதெம்எண்ணகத்தே லாஜபதி இடையின்றிநீவளர்தற் கென்செய் வாரேஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடுகடத்தியவர்க்கு ஊறு செய்தல்அருமையில்லை எளிதினவர் புரிந்திட்டாரென்றிடினும் அந்த மேலோன்பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமெனநெஞ்சினுளே பெட்பிற் பேணிவருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்ஓட்டியெவர் வாழ்வ திங்கே?பேரன்பு செய்தாரில் யாவரேபெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?ஆரன்பு நாரணன்பால் […]

ரங்கராஜ் பாண்டே

தர்மம் எப்பொழுதும் தனித்து நின்றுதான் வெல்லும், தர்மம் இருக்கும் பக்கம் சிலர்தான் இருப்பார்கள். ஆனால் அந்த சிலர்தான் பெரும் கூட்டமான அதர்மத்தை சரித்துப் போடுவார்கள். இது உலகில் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்கும் காட்சி. இது தான் மகாபாரதம் ராமாயணம் என எல்லா இடத்திலும் உண்டு, இன்றும் இந்த காட்சி எல்லா இடங்களிலும் உண்டு. அப்படியான காட்சி தமிழக ஊடக உலகிலும் உண்டு. அந்த இடத்தில் தனித்து நிற்கும் தர்மவான் அந்த ரங்கராஜ் பாண்டே. ஒரு […]

நாதுராம் கோட்சே

//ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா? 5 கோடி இஸ்லாமியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை// ———————————- அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய […]

மார்கழியின் சிறப்பு

இந்துமதம் என்பது விஞ்ஞானமும் ஆன்மீகமும் வானவியலும் மருத்துவமும் கலந்த ஒரு விசேஷமான ஞானமார்க்கம். ஒவ்வொரு காலநிலைக்கும் மனிதரை அது நலம்பெற வைக்கவும் அந்த நலத்தில் இறைவனை தேடவும் பல வழிகளை வைத்திருக்கின்றது, மார்கழி மாதமும் அதில் ஒன்று இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் […]

மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம்

இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் முருகன் ஆலயத்தில் தனி சிறப்புபெற்று நிற்பது மலேசிய திருநாட்டின் பத்துமலை முருகன் ஆலயம், சஷ்டி காலத்தில் கடல்கடந்து நிற்கும் அந்த கந்தனை வணங்குதல் அவசியம் என்பதால் அந்த ஆலயத்தின் வரலாற்றையும் அதன் சிறப்பையும் கொஞ்சம் பார்க்கலாம் கடாரம் என ஒருகாலத்தில் அழைக்கபட்ட அந்த திருநாட்டில் இந்த ஆலயத்தின் வரலாறு 18ம் நூற்றாண்டில்தான் தொடங்குகின்றது அதற்கு முன் அங்கு ஆலயம் இருந்திருக்கவில்லை பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் தடாகத்தில் தாமரை போல தீவுகளாக சிதறிகிடப்பவை, […]

சென்னிமலை முருகன் ஆலயம்

குன்றிருக்கும் இடமெல்லாம் மலை இருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமானை நிறுத்தினார்கள் இந்துக்கள், இதற்கு சில முக்கிய காரணங்களும் இருந்தன‌ விளக்கினை ஏற்றினால் உயரத்தான் வைப்பார்கள், ஒரு அரசனின் கொடி உயரத்தான் பறக்க வேண்டும், எது சிறந்ததோ எது பெருமைமிகு அடையாளமோ அதை உயரவைப்பதுதான் இந்துக்கள் மரபு கோபுர கலசம் போல‌ அப்படி முருகப்பெருமானை மலைமேல் வைத்தார்கள் அதிலும் இரு விஷயம் இருந்தது முதலாவது மலை ஏறி இறங்குவதில் உடல்பயிற்சி இருந்தது, சுத்தமான காற்று இருந்தது ஆரோக்கியம் கைகூடிற்று இரண்டாவது […]

கதிர்காமம், கதிரைகாமம் முருகன் ஆலயம்

இந்தியாவினை தாண்டி உலகெல்லாம் பல இடங்களில் சிறப்பான முருகன் ஆலயங்கள் உண்டு , அவற்றில் முதலிடத்தில் இருப்பது இலங்கையின் கதிர்காமம் உண்மையில் அறுபடை வீடுகள் என்பது ஆறு அல்ல, கதிர்காமத்தையும் சேர்த்து ஏழு அதுதான் தொடக்கமானது, ஆனால் இலங்கையில் பவுத்த தரப்பிடம் அவ்வாலயம் இருந்துவிட்டதால் இங்கே தமிழகத்துக்குள் ஆறு என சுருக்கி கொண்டார்கள் உலகின் மிக மிக பழமையான இந்து ஆலயத்தில் குறிப்பாக முருகபெருமான் ஆலயத்தில் அதுவும் ஒன்று அது காலத்தால் மிக மிக முந்தையது, ஆனால் […]

கந்த சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்

இன்று (13 / 11/ 2023) கந்த சஷ்டி விரதம் தொடங்குகின்றது, இந்துக்களின் தனிபெரும் அடையாளமாகவும் தமிழரின் தனிபெரும் தெய்வமாகவும் விளங்கும் முருகனுக்கு 6 நாள் நடக்கும் விரதம் இது. இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயபடி தீமை அழியும் பண்டிகையினை கொண்டாட விரதம் அவசியம். அப்படி நவராத்திரி விரதம் போல , தீபாவளிக்கு முந்தைய கேதார கவுரி விரதம் போல சூரசம்ஹாரத்துக்கும் அந்த விரத கடமை உண்டு. முருகனுக்கு ஆறு முகம் என்பது தெரியும், அதற்கு புராண கதையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications