பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நவபுலியூர் தலங்கள்

01 சிதம்பரம், 02 திருப்பாதிரிபுலியூர், 03 திரு எருக்கத்தம்புலியூர், 04 திருஓமம்புலியூர், 05 திருக் கண்ணாட்டாம்புலியூர், 06 சிறுபுலியூர், 07 அத்திப் புலியூர், 08 தப்பளாம்புலியூர், 09 திருபெரும்புலியூர். மார்கழி மாத வழிபாடுகளில் திருப்பாவையும் திருவெம்பாவையும் தனி இடம் பிடிப்பது போல , ஸ்ரீரங்க ஆலயமும் சிதம்பரம் ஆலயமும் இம்மாதம் விழாக்காலம் கொண்டு ஜொலிக்கும். எல்லா சைவ வைணவ ஆலயங்களில் மார்கழி சிறப்பிக்கபட்டாலும் இரு ஆலயங்களுமே மார்கழியில் தனித்து கொண்டாபடும். தனி தனியே அதுவும் சைவம் வைணவம் […]

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

கந்த சஷ்டி விரத காலங்களில் அறுபடை வீடுகளை தாண்டி பிரசித்திபெற்ற முருகப்பெருமான் ஆலயங்களை காணலாம், நிறைய உண்டெனினும் இந்நாட்களில் சில முக்கியமான ஆலயங்களை காணலாம் அப்படி திருசெந்தூர் ஆலயத்துக்கு நிகரான ஒரு ஆலயம் தெற்கே உண்டு பாரத தென்முனை சூட்சுமமான பல ஆலயங்களை கொண்டது , அங்கு ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வ்ரலாறும் தனிபட்ட அருளும் உண்டு விசுவாமித்திர மகரிஷிக்கு உலகில் அமைந்துள்ள ஒரே ஒரு ஆலயம் ராதாபுரம் பக்கம்தான் உண்டு, ராமர்கோவில் எழும் நேரம் அதை […]

ரம்பை திரிதியை

இந்துக்களின் பண்டிகையும் விரதகாலங்களும் ஆயிரமாயிரம் பொருள் கொண்டவை, ஒவ்வொரு மானிடருக்கும் ஏகப்பட்ட போதனைகளை தருபவை. மாந்தர்க்கு போதனைகள் நிரம்ப தரும் அம்மதம், வாழ்வின் ஆதாரமும் உலகை இயக்குபவர்களுமான பெண்களுக்கு ஏகப்பட்ட போதனைகளைத் தந்தது. சாவித்திரி விரதம் போன்ற ஏகப்பட்ட விரதம் மூலம் போதனைகளை சொன்ன அம்மதம், சீதா, திரவுபதி எனப் பலர் மூலமாக பல பாடங்களைச் சொன்ன மதம், பெண்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை தந்தது. புராணங்களில் நடந்ததும் அவதாரங்களில் நடந்ததும் மானிடருக்கு வழிகாட்டவே என்பதை மிக இயல்பாகச் […]

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

தமிழகத்தின் அடுத்த பெரும் திட்டமாக, அணுவுலைகள் மகேந்திர கிரி மையம், திருச்சி பெல், சென்னை ஆவடி, சூலூர் மற்றும் தாம்பரம் விமானபடைதளம், ஆவடி தொழிற்சாலை போன்ற பெரும் திட்டம் போல அடுத்த மகா முக்கிய திட்டத்தை தருகின்றார் மோடி. இதனால் தமிழக தென்மாவட்டங்கள் குறிப்பாக தேரிக்காடு என சொல்லப்படும் அந்த பின் தங்கிய வறண்ட பிரதேசங்கள் இனி வளர்ச்சியினை நோக்கி செல்லும். ஆம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைவது உறுதியாகிவிட்டது, சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்ட […]

ஸ்ரீம‌ன் நாராயணீயம்

கார்த்திகை மாதம் 28ம் தேதி குருவாயூரில் அரங்கேற்றப்பட்டது. காலம் காலமாக ஒவ்வொரு காலத்திலும் அரும்பெரும் புனிதமான இந்து நூல்களை வழங்கிய இந்துமதம் 15, 16ம் நூற்றாண்டிலும் அற்புதமான நூல்களை, பக்தி வழிபாட்டு பாடல்களை, ஸ்லோகங்களை மக்களுக்கு கொடுத்தது. அக்காலகட்டத்தில் தான் அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி, அருணகிரிநாதரின் அழியா நூல்கள், குமரகுருபரரின் மகா பெரிய பக்தி நூல்களெல்லாம் வந்தன‌. அதே காலகட்டத்தில் கேரளத்தில் உருவான நூல்தான் “ஸ்ரீம‌ன் நாராயணீயம்” கேரளம் பரசுராமரால் உருவாக்கபட்டு மாவலி சக்கரவர்த்தியால் சிறப்புற ஆளபட்டு […]

நரகாசுர வதம் – தீபாவளிப் பண்டிகை

இந்தியாவில் மட்டுமல்ல அதை தாண்டி உலகில் என அரைவாசி நாடுகளில் கொண்டாடபடும் மிகபெரும் பண்டிகை தீபாவளி இந்த பண்டிகை ஒரு விஷேஷமான பண்டிகை பல காரணங்களுக்காக அது கொண்டாடபடும் ராமன் மறுபடி அயோத்தி திரும்பியது, கேதார கவுரி விரதம் நிறைவுற்று சக்தி சிவனோடு சேர்ந்தது என காரணங்கள் ஏராளம் எனினும் மகா முக்கிய விஷயம் நரகாசுர வதம் நரகாசுரன் வராக அவதாரத்துக்கும் பூமாதேவிக்கும் பிறந்தான் என சில இடங்களில் சொல்லபட்டாலும் உண்மை அது அல்ல என்பார்கள்,காரணம் வராக […]

தன்வந்திரி ஜெயந்தி

உலகின் மிக தொன்மையான் இந்து இனமே ஆக சிறந்த மருத்துங்களையும் தன்னில் கொண்டுள்ளது, இன்று உலகின் மருத்துவம் ஐரோப்பியரின் மாபெரும் வியாபாரம் என மாறிவிட்ட நிலையில் உலகையே தங்கள் மருத்துவ வியாபாரபிடியில் அவர்கள் கொண்டுவந்த நிலையில் நோய்கள் குறைகின்றதா என்றால் இல்லை. மாறாக கூடிக் கொண்டே செல்கின்றது, ஒவ்வொரு நோயும் தீர்வதாக அவர்கள் சொல்லும் மருத்துவம் பின் ஓராயிரம் புதிய நோய்கள் பக்க விளைவாகவும் அவர்கள் ஆய்வின் பலவீனமாகவும் வரும்போது மவுனம் காக்கின்றது. ரத்தபீஜனை போல ஒரு […]

ஞானசித்தர் – சுப்பிரமணிய பாரதியார்

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரும் பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிகச் சரியான ஆற்றல் மிக்கவர்களை, இறைசக்தி தேடிக் கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும். உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால் வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும். அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனைகள் பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும். வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், […]

சுதந்திர இந்தியாவின் முதல் சங்கி, பூரண இந்து – ராஜாஜி

அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி. அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி. லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறா. அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசப்பணி என பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான். பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகப்படுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்தது அந்த மாமனிதனே. […]

ராமனை மீட்ட விஸ்வாமித்திரர் – அத்வாணி

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர். ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர். சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு. லால் கிருஷ்ண அத்வாணி. கராச்சியில் பிறந்தவர். தேசப்பிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசப்பற்றாளர். இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார். சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை, நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை. நாடு ஒன்றே அவரின் மூச்சானது. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications