பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிக்கிமில் என்ன நடந்தது?

சிக்கிமில் என்ன நடந்தது என பலர் கேட்கின்றார்கள், நடந்தது இதுதான் இந்தியா பாகிஸ்தானுக்கு ராட்கிளிப் கோடுபோல, இந்தியா சீனா இடையே மக்மோகன் எல்லைகோடு ஒன்று உண்டு, ஆனால் சீனா ஒருபோதும் மதித்ததில்லை அதுவும் மாவோ வந்தபின் கோட்டையே அழித்துவிட்டார்கள் திபெத் தவிர, சிக்கிம் பூட்டான் என பல நாடுகளை அபகரிக்கும் திட்டம் சீனாவிற்கு இருந்தது, சிக்கிமை முடக்கினால் அருணாசல பிரதேசத்தை முடக்கலாம் எனும் வியூகமும் இருந்தது நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் அரணாக அன்று இந்தியாவிற்கு […]

வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர்

இந்த கன்னட தேர்தல் முடிவு அந்த நபரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டது, அவர் யார்? அவருக்கு இருந்த வலி என்ன? என்பதை இந்த‌ தேர்தல் முடிவு மூலம் உலகிற்கு தெரிய வாய்ப்பு வந்துவிட்டது அவர் பெயர் வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர் இப்பொழுது அவர் கன்னட கவர்னர், ஆனால் முன்பு யார்? என்பதற்கு நாம் 22 வருடம் முன்னோக்கி செல்ல வேண்டும் அது 1996ம் வருடம் அப்பொழுது திராவிட தமிழன் மூப்பனார் பிரதமராக விடாமல் திராவிட கன்னடர் […]

இந்தியாவுடன் சிக்கிம் இணைந்த நாள்

இந்தியா விடுதலை பெறும்பொழுது சிக்கிமும் விடுதலைபெற்றது, ஆனால் மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்பவில்லை இந்த பூட்டான் போல சிக்கிமை தன் கட்டுபாட்டில் வைக்கலாம் என திட்டமிட்டது இந்தியா, அதுவரை சிக்கல் இல்லை ஆனால் சீனபோருக்கு பின் நிலமைகள் மாறின, அதன் முக்கியத்துவம் அதிகமானது, ஆனால் சிக்கிம் அரசரோ இணைய மறுத்தார் இன்று சீனா முறுக்கி நிற்கும் டோக்லஹாம் பகுதி, அந்த நாலந்துலா பகுதி எல்லாம் சிக்கிமின் பகுதிகள் அந்த சிக்கிம் இல்லை என்றால் கிழக்கேஉள்ள மாநிலங்களுக்கான தொடர்பு […]

லெபனானின் ஹெஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஏமனின் ஹவுத்தி

லெபனானின் ஹெஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஏமனின் ஹவுத்தி முதனால தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதால் அதன் மீது பொருளாதார தடையினை அமெரிக்கா அறிவித்துவிட்டதாம் ஆனால் இந்தியாவில் தீவிரவாதத்தை ஏவிவிடும் பாகிஸ்தான் இவர்களுக்கு நண்பன், அதனை முற்றிலும் முறிக்கமாட்டார்கள் சிரிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வான்படையோடு களமிறங்குவார்கள் அமெரிக்கா எது செய்தாலும் சரி, அதனையே ஈரான் செய்தால் மாபெரும் தவறு. பாகிஸ்தான் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்  

இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது

  என்ன சொல்லுங்கள், இந்த இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது புலிகளை ஒழிக்க அமெரிக்காவின் உதவி தேவைபட்டபொழுது நெருங்கினார்கள், அமெரிக்காவும் நிரம்ப உதவியது. ரசாயாண ஆயுத சிக்கல்,போர்குற்றம் வராமல் இலங்கையினை காத்துகொண்டதில் அமெரிக்க பங்கு அதிகம் எப்படி நெருங்கினார்கள் என்றால் 1991ல் வளைகுடா போரின்பொழுது இந்தியவிமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் வழங்கியதை ராஜிவ் கண்டிக்க அது தடைபட்டது அப்பொழுது “பிளிஸ் கம் ஹியர்” என வலிய அழைத்து எரிபொருள் கொடுத்தது இலங்கை அப்பொழுது கைகேயி போல […]

கர்நாடகா வோட்டும் வேட்டும்

“தகப்பன்னா தேவகவுடா மாதிரி இருக்கணும் மகனே, எனக்கு அப்படி அப்பா வாய்க்கவில்லை ஆமாம்பா, சோனியாகாந்தி கூட ராகுலுக்கு வழிவிட்டுவிட்டார்கள் , எனக்கும் அப்படி வாய்க்கவில்லை” “அப்பா, நீங்க கொஞ்சநாளைக்கு தேவகவுடா வீட்டுக்கு போய் டியூசன் படிங்கப்பா.., இந்த காடுவெட்டி எல்லாம் நம்பிகொண்டிருந்தால் வேலைக்கே ஆகாது”   “பாருங்க தமிழ்நாட்டில் 117 எம்.எல்.ஏக்களை ஒரு பைசா செலவில்லாமல் வாங்கி ஆட்சி செய்கின்றோம் ஆனால் இந்த கன்னடத்தில் 10 எம்.எல்.ஏ வாங்க முடியல்லை. இங்கேயும் ஒரு பழனிச்சாமி கும்பல் கிடைச்சிருந்தா, […]

வடகொரியா மறுபடியும் முருங்கை மரம் ஏறுகின்றது

நன்றாக இறங்கி வந்த வடகொரியா மறுபடியும் முருங்கை மரம் ஏறுகின்றது காரணம் யாரென்றால் சாட்சாத் அமெரிக்கா இரு கொரியாக்களின் உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக இருந்தது, பொறுக்குமா அமெரிக்காவிற்கு? என்றோ போட்ட அட்டவணைபடி இன்று அமெரிக்க தென்கொரிய கூட்டு ராணுவபயிற்சி நடந்தே தீரவேண்டுமாம், அது நடக்குமாம் நீங்கள் இன்னும் யுத்த முஸ்தீபுகளில் இருக்க நான் மட்டும் ஆயுதங்களை கைவிட வேண்டுமா? என முறைத்துவிட்டு இன்றைய கூட்டத்தை ரத்து செய்கின்றது வடகொரியா உலகில் எங்கும் அமைதி ஏற்பட்டுவிட்ட […]

திரிசங்கு சொர்க்கத்தில் கன்னட தேர்தல் முடிவுகள்

நாம் முன்பே சொன்னது போல திரிசங்கு சொர்க்கத்தில் முடிந்திருக்கின்றது கன்னட தேர்தல், யாருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை இந்த இடத்தில் காங்கிரஸ் பெருந்தன்மையான மற்றும் தந்திரமான நகர்வினை மேற்கொண்டது, சட்டென குமாரசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்துவிட்டது மதவாதத்தை எதிர்ப்பதே எங்கள் இலக்கு எனும் கொள்கை ரீதியாக விட்டுகொடுத்து தன் பெருந்தன்மையினை நிருபித்திருக்கின்றார் ராகுல் அதே நேரம் இந்த குமாரசாமி என்பவரும் சொல்லிகொள்ளும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு மாதிரி ஆசாமி தங்களுக்கு முழு மெஜாரிட்டி கொடுக்காத மக்கள் […]

பாலகுமாரன் : தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

தமிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் சமாதனத்தையும் அன்பையும் சமத்துவத்தையும் தாங்கியே வந்தன‌ நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார் சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை ‘நாயகன்’ ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான […]

தமிழகம் பெரியார் பூமி , இங்கு பாஜக நுழைய முடியாதாம்

தமிழகம் பெரியார் பூமி அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கின்றார்கள். எந்த சித்தாந்தையும் தாங்கி நடத்த நல்ல வாரிசு தலைவர்கள் வேண்டும் லெனினுக்கு பின் ஸ்டாலின் அப்படி தாங்கினார், அதன் பின் வந்த தலைவர்கள் உருப்படி இல்லை சோவியத் சிதைந்தது ஆனால் மாவோவிற்கு பின் இன்று ஜின்பெங்க் வந்து தாங்கியதில் சீனா நீடிக்கின்றது இங்கு பெரியாரின் அரசியல்வாரிசாக அண்ணா வந்தார், அவரை தொடர்ந்து கலைஞர் வந்தார் அதன் பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல தலைவர்கள்? அப்பக்கம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications