பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்திலும் நம்மை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வருமா?

இன்னும் கொஞ்சநேரத்தில் இங்கு லட்டு வழங்கபடும்…. இந்த கட்டிடம் பிறமாநிலங்களின் வெற்றிக்கு லட்டு வழங்குவதற்காகவே இங்கு அமைக்கபட்டிருக்கின்றது, அவ்வளவு நல்ல மனது அவர்களுக்கு  கர்நாடக முடிவு தெரிந்தாயிற்று, இனி அடுத்த தேர்தல் எங்கே? ராஜஸ்தானா? இனி அங்கு கச்சை கட்டுவார்களா? எப்படியும் தமிழ்நாட்டு சனியன்கள் 3 ஆண்டுகளுக்கு அசையாது என தெரிகின்றது, அடுத்த மாநிலங்களாவது மகிழ்ந்திருக்க எதிர்ப்பார்ப்போம் என்ன சொல்லுங்கள், அக்காவினை பற்றி ஒரு கருத்தினை கணித்தால் மிக சரியாக நிறைவேற்றி கொடுப்பார்கள் இதோ லட்டு கொடுத்தாயிற்று […]

தினகரனோ, திவாகரனோ பெங்களூர் பக்கமே செல்லமுடியாது

முந்தைய காங்கிரஸ் சித்தராமையா அரசு மூலம் சசிகலா சிறையில் பெற்ற சலுகைகள் ஏராளம், எல்லாம் அரசியல் கணக்கு இந்த ரூபாதான் அதனை வெளிகொண்டுவந்தார், அவருக்கு சித்தராமையா கொடுத்த இடைஞ்சல் கொஞ்சமல்ல‌ இனி இந்த பெண்சிங்கம் சிலிர்க்கும், தியாக தலைவி சின்னம்மா இனி உண்மையிலே ஊதுபத்தி உருட்டவேண்டியதுதான். தினகரனோ, திவாகரனோ பெங்களூர் பக்கமே செல்லமுடியாது    

திருமுருகன் காந்தி ஆவேசம்

ஈழத்தில் செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் : திருமுருகன் காந்தி ஆவேசம் திருப்பெரும்புதூரில் செத்த 17 பேருக்கு அஞ்சலி செலுத்தினாலோ இல்லை அமைதிபடையாய் சென்று செத்த 1500 இந்தியவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் யார் தடுக்க போகின்றார்கள் ஏன் இங்கு அஞ்சலி? முள்ளிவாய்க்காலுக்கே சென்று செலுத்தினால் என்ன?

ஆங்கில நாட்காட்டியின் படி நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள்

  ஆங்கில நாட்காட்டியின் படி நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள், 70 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அது நேரடி போரினை சந்தித்தது அன்றிலிருந்து இன்றுவரை அதன் ஆக்கிரமிப்பு தொடர்கின்றது ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர், இம்முறை டிரம்பின் அழிச்சாட்டியத்தில் ஜெருசலேம் விவகாரமும் சேர்ந்து அந்த பகுதி பற்றி எரிகின்றது நேற்றுமட்டும் 41 பாலஸ்தீனியர் சுட்டு கொல்லபட்டிருக்கின்றனர் எங்காவது சேவ் சிரியா போல சேவ் பாலஸ்தீன் என சத்தம் […]

கன்னட தேர்தலில் பாஜக வெற்றிமுகம் காட்டுகின்றது

கன்னட தேர்தலில் பாஜக வெற்றிமுகம் காட்டுகின்றது சித்தராமய்யா தேர்ந்தெடுக்கபடும்பொழுது ஒழுங்காக வேலை செய்த வோட்டு மெஷின் இப்பொழுது சரியில்லை என பலர் கிளம்புவார்கள் மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள், இதற்கு காவேரியினை திறந்திவிட்டு சித்தராமய்யா தோற்றிருக்கலாம் இனி காவேரிக்கு விடுதலை இல்லை… ஆக இனி தமிழகத்தை தொடர்ந்து கன்னடத்திலும் பாஜக அதிகாரம் இங்கு பழனிச்சாமி கிடைத்தது போல் அங்கு இனி குமாரசாமி கிடைக்கலாம் இனி தமிழிசைக்கு சிக்கல், எங்கே காவேரி என கேட்டு துளைத்துவிடுவார்கள்..   கர்நாடக தேர்தல் […]

யார் வந்தால் நமக்கென்ன?

க‌ர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் அதானே, நீங்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டிலே என்ன நடந்தாலும் உங்களுக்கு சுத்தமாக கவலை இல்லை, இதில் கன்னடத்தின் நடப்புகளா உங்களுக்கு கவலை தந்துவிடும்? முன்பெல்லாம் அரசியலுக்கு ராஜாஜி, காமராஜர், கக்கன் , அண்ணா என வந்தார்கள் இப்பொழுது ஆர்.ஜே பாலாஜி, ஜூலி என வருகின்றார்கள் போகிற போக்கை பார்த்த்தால் செத்து போன குமரி முத்துவினை தவிர எல்லா துணை நடிகர்களும் தமிழக அரசியல் குதிப்பார்கள் […]

மாஸ்கோவில் புட்டீனை சந்திக்கின்றார் மோடி : செய்தி

மாஸ்கோவில் புட்டீனை சந்திக்கின்றார் மோடி : செய்தி “என்னை எங்காவது பார்த்தால் கட்டி பிடிச்சி அழுறது, அமெரிக்க‌ உறவு வலுக்கணும்னு உருகுறது இப்போ புட்டீனை பார்க்க போறாராம் போ மகனே போ, சீக்கிரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி என்ன பார்க்க வருவார், நீ என்ன செய்யுறேன்னு பார்க்குறேன்”  

மோடியின் விளம்பர செலவு மட்டும் 4330 கோடியாம்

மோடியின் சாதனை என மோடியின் குருட்டு பக்தர்கள் ஒவ்வொன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இதில் புள்ளிவிவரம் வேறு இம்சைகள் அப்படி எல்லாம் இந்நாடு வளர்ந்துவிடவில்லை, நம்மை விட நன்றாக இந்நாட்டை கவனிக்கும் வெளிநாட்டவர்கள் ஒன்றும் சொல்லிகொள்ளும் அளவில் இல்லை என தலையினை அசைக்கின்றார்கள் நிச்சயம் இந்த மாட்டுகறி, மதவாத சிந்தனைகள் இன்னும் ஏராளம் அந்நிய முதலீடுகளை பாதிக்கின்றது. இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு மத ரீதி, இன ரீதியான மோதல் வந்தால் என்ன செய்வது என அவை யோசிக்கின்றன‌ மோடி உலகெல்லாம் […]

காவேரி விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு வரவில்லை

காவேரி விவகாரத்தில் இன்னும் தீர்ப்பு வரவில்லை, மத்திய அரசு தாக்கல் செய்த காவேரி வரைவு திட்டமும் முழுவதும் தெரியவில்லை ஆனால் கசியும் செய்திகளை கண்டால் இதுவரை நடந்த அநீதிக்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் உள்ளது காவேரி மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கும் எனும்பொழுதே முடிந்தது விஷயம். இப்பொழுது அப்படித்தான் இருக்கின்றது, கன்னடம் சொன்னதே முடிவு இதனைத்தான் உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு சொன்னதாக சொல்கின்றார்கள் இதற்கு ஏன் வழக்கு? இதற்கு ஏன் இழுபறி? பழைய நிலை நீடிக்கும், தமிழகம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications