பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடிகை சாவித்திரி கதையினை படமாக எடுத்தாயிற்றாம்

நடிகை சாவித்திரி கதையினை படமாக எடுத்தாயிற்றாம் ஆளாளுக்கு விமர்சனம் சந்திப்பு என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் யாராவது இந்தி நடிகை ரேகாவிடம் உங்கள் சித்தி கதை எப்படி என்றோ, இன்னும் சிலரிடம் உங்கள் பெரியம்மா கதை எப்படி என்றோ கேட்டதாக தெரியவில்லை அந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பின்னிவிட்டார், விருது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலர் கிளம்பியிருகின்றார்கள் நடிகையர் திலகத்தின் கதைக்கு மங்கையர் திலகம் குஷ்பு நடிக்கவைக்கபடவில்லை என்ற கோபத்தில் சங்கம் அப்படத்தை புறக்கணித்துவிட்டது மீறி கீர்த்தி சுரேஷுக்கு விருது […]

உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு

உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருகின்றது குலதெய்வம் கோவிலுக்கு வந்த மலேசியர்களை தாக்கி இருக்கின்றார்கள், இதில் ஒரு மூதாட்டி கொல்லபட்டிருகின்றார் அக்கிராமத்தினர் பிள்ளை பிடி கும்பல் என நினைத்து தாக்கி இருக்கின்றார்களாம் ஊரே திரண்டிருக்கின்றது, அடிப்பதற்கு முன்னால் காவல்துறையினை வரவைத்து விசாரித்திருக்கலாம், தீர கேட்டிருக்கலாம் கிடைத்துவிட்டார்கள், அடியுங்கள் என மொத்தமாக காட்டுமிராண்டி தனமாக அடித்து கொன்றிருக்கின்றார்கள் அடிக்கும்பொழுது அவர்கள் எப்படி எல்லாம் கெஞ்சியிருப்பார்கள்? தாங்கள் மலேசியர்கள் என சொல்லியிருப்பார்களா இல்லையா? அதை கூட காது கொடுத்து […]

ஆச்சியை ரஜினி பிடிப்பார் : செல்லூர் ராஜூ

ஆச்சியை ரஜினி பிடிப்பார் என சொன்னதற்காக செல்லூர் ராஜூவினை விரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இதிலென்ன ஆச்சரியம்? ராமசந்திரனே “நான் தமில்நாத்து ஆச்சி பிதிப்பேன், அடிக்கடி பிதிப்பேன் , என் ஆச்சி உங்கள் ஆச்சி. நான் பிடித்த ஆச்சி என் ரத்ததின் ரத்தங்களின் ஆச்சி, நீங்கலே ஆச்சி பிடித்து கொடுத்தீர்கள்” என்றுதான் சொல்லிகொண்டிருந்தார் இது போல உல்ல ஆச்சி (உள்ளாட்சி), நகர ஆச்சி, பேரூர் ஆச்சி, மாநகர ஆச்சி எல்லா ஆச்சியும் எனக்கே என பகிரங்கமாக சொல்லிகொண்டிருந்தார் அப்பொழுது எல்லாம் […]

பெரியாருக்கும் காரல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்?

நீ பிராமண அடிவருடி என சிலர் சொல்லிகொண்டே இருக்கின்றான், அவர் யாரென படத்தை தேடினால் அதில் பெரியாரும் கார்ல் மார்க்ஸும் இருக்கின்றனர் பெரியாருக்கும் காரல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்? உலக முதலாளிகளை மொத்தமாக எதிர்த்தான் காரல் மார்க்ஸ், முதலாளிகளை தவிர்த்து பிராமண நிர்வாகிகளை மட்டும் எதிர்ததார் பெரியார் உலக தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்தான் மார்க்ஸ், பெரியார் தன் கீழிருந்தவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்தார் என்பது நெஞ்சுக்கு நீதியிலே இருக்கின்றது உலகிற்கே பொதுவான தத்துவத்தை கொடுத்தான் மார்க்ஸ் திராவிடம் […]

காலா கதை களம் மும்பையாம்

காலா கதை களம் மும்பையாம் ஆனால் பாடல் முழுக்க என் நிலம், என் உரிமை, போராடு, கிளம்பு என வருகின்றது அங்கு என்ன நில மீட்பு, என்ன உரிமை போராட்டம்? அங்குள்ள எல்லா தமிழரும் இங்கிருந்து பிழைக்க சென்ற கூட்டமே, ஓரளவு நல்ல நிலையிலும் பலர் இருக்கின்றார்கள் அவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் அவர்களுக்கு கிடைத்தது, கிடைத்துகொண்டிருக்கின்றது முன்பு வரதராஜபெருமாள் ஹாஜி மஸ்தானுடன் ரவுடியிசம் செய்தபொழுது தாக்கரே தமிழரே வெளியேறுங்கள் என மிரட்டினார் வரதராஜன் சென்னை திரும்பிய பின் […]

குளிர்பெட்டியினை புறக்கணிப்போம், நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்

இந்த விஞ்ஞானம் எவ்வளவோ நல்ல கருவிகளை மானிடர்க்கு கொடுத்தது, ஆனால் மானுட நாக்கிற்கு அது பெரும் துரோகத்தை இழைத்துவிட்டது இந்த ரெப்ரிஜிரேட்டர் எனும் குளிர்ந்த பெட்டியினை கொடுத்து மன்னிக்க முடியா துரோகத்தை அது செய்தது, இந்த குளிர்பெட்டியினை கண்டுபிடித்து கொடுத்தவனே மானிட குல விரோதி அவன் ஹிட்லரை விட கொடியவன் ஒருவாரமாக சில நேரம் ஒரு மாதமாக கூட என்ன சமைத்தோம் உண்டோம் என்பதை குளிர்சாதன பெட்டியினை திறந்து பார்த்தால் தெரிகின்றது, இது ஒன்றுதான் அது பயன்படும் […]

ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? : அங்கிள் சைமன்

எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன‌ எப்படி? ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் மகிழ்ந்திருந்த அரண்மனை எங்கேடா என ஒரே சத்தம் இதையாவது சகித்துவிடலாம் என்றால் அடுத்து கேட்பதுதான் பழனிச்சாமிக்கே கோபம் வரும் கேள்வி கஜினி முகமதுவினை 17 முறை விரட்டிய ராஜ ராஜ‌ சோழனுக்கு இங்கு எங்கிருக்கின்றது […]

திமுகவில் மே 13ல் கருத்து கேட்கும் கூட்டம்

திமுகவில் மே 13ல் கருத்து கேட்கும் கூட்டமாம், அவர்களின் எல்லா அணியும் அழைக்கபடுகின்றதாம் வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, மீணவர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, பொறியாளர் அணி, காண்ட்ராக்டர் அணி, தொழிலதிபர் அணி, உழைப்பாளர் அணி, முகநூல் அணி என சகல அணிகளும் அணி வகுத்து வந்து கருத்து தெரிவிப்பார்களாம் இப்படி எல்லா அணிகளும் அழைக்கபட்டிருக்கின்றன‌ கனிமொழி ” ஜால்ரா அணி”, மு.க அழகிரியின் “அடிதடி அணி”, உதயநிதி ஸ்டாலினின் “அலப்பறை அணி”, தமிழன் […]

மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர்

மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர் இவரையும் மதித்து தாகூர் விழாவில் பேச அழைத்திருக்கின்றார்கள் மனிதர் சென்று என்ன சொல்லியிருக்கின்றார் என்றால் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக தன் நோபல் பரிசையே திரும்ப கொடுத்தார் தாகூர் என அளந்துவிட்டிருக்கின்றார் தாகூர் நோபல் பரிசை கொடுக்கவில்லை, ஜாலியன் வாலாபாக் படுகொலையினை மறைக்க தாகூருக்கு வீரகவிஞன் எனும் பட்டம் கொடுக்க முயன்றபொழுது அதை மறுத்தார் காரணம் வாங்கியிருந்தால் வீரவணக்கம் செலுத்தும் நிலை வந்திருக்கும் இதனால் அவர் அந்த விருதை […]

அணுகுண்டை போக்ரானில் சோதித்தது மே 11ம் நாள்

  பாஜக அப்பொழுது ஆட்சிக்கு வந்திருந்தது, பெரும் ஆரவாரத்தோடும் , கடும் எதிர்ப்பார்ப்போடும் ஆட்சிக்கு வந்தார்கள் வாஜ்பாய் பிரதமராய் இருந்தார், கூட்டணி ஆட்சி என்றாலும் இதே விளம்பர அழிச்சாட்டியத்திற்கு குறைவில்லை நாங்கள் பாகிஸ்தானை என்ன செய்யபோகின்றோம் தெரியுமா? என அணுகுண்டை போக்ரானில் சோதித்தார்கள் இதே மே 11ம் நாள் என்னாயிற்று? விளைவுகள் பயங்கரமானவை, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் சொரிந்தது போலாயிற்று அதாவது இந்தியா 1974லே அணுகுண்டை வெடிக்க செய்து தன்னை அணுசக்தி நாடாக காட்டிற்று, அப்பொழுது சோவியத் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications