பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அங்கிள் சைமன் மீது வழக்கு

அங்கிள் சைமன் மீது வழக்கு தொடர்ந்தது தமிழக காவல்துறை, அதன் அமைச்சர் முதல்வர் பழனிச்சாமி ஆனால் அங்கிள் சைமன் நடுத்தெருவில் நின்று மண் அள்ளிபோட்டு ஒப்பாரி வைப்பது யார் மீதென்றால் ரஜினிகாந்த் மீது ரஜினி அபாயம், ரஜினியினை விடமாட்டேன் என கடும் அழிச்சாட்டியம் தன்வேல் வழக்கு தொடுத்த காவல்துறை பற்றியோ பழனிச்சாமி அரசுபற்றியோ ஒரு வார்த்தை இல்லை தமிழன் தமிழகத்தை ஆள அவர் ரஜினியினை எதிர்ப்பாராம் இதனால் அங்கிள் நேரடியாக சொல்லவரும் விஷயம், பழனிச்சாமி ஆட்சி தமிழன் […]

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன் மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல‌ மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது […]

அட்சய திரிதியியை வாழ்த்துக்கள்

சயம் என்றால் தேய்தல் என்று பொருள், அட்சயம் என்றால் தேயாத, குறையாத என்ற பொருள். பாரதத்தில் பாஞ்சாலியிடமும் மணிமேகலையில் மணிமேகலையிடமும் அப்படி ஒரு அட்சய பாத்திரம் இருந்ததாக சொல்கின்றது குறிப்புகள் அம்மாவசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திரிதியை, திரி என்றால் மூன்று என பொருள். ஆங்கிலத்திலும் அதுவேதான். இந்த சித்திரை மாத பவுர்ணமி போலவே இந்த பிறை தோன்றும் திரிதியையும் விஷேஷமானது அள்ள அள்ள குறையாத திரிதியை என இந்த அட்சய திரிதியை கொண்டாடபடுகின்றது இந்நாளில் பரசுராமர் […]

ஆர்யா என்பவரின் சுயம்வர நிகழ்ச்சி

உலகில் ஒரே ஒரு மாப்பிள்ளை என்ற அளவில் ஆர்யா என்பவரின் சுயம்வர நிகழ்ச்சி இருந்தது, இறுதியில் யாரையும் கட்டமாட்டேன் என கிளம்பிவிட்டார் மனிதர் இவர் தீவிர ரஜினி ரசிகராக இருக்கலாம் ரஜினி அரசியலுக்கு வருவதாக ஆடும் நாடகங்களுக்கும், இவரின் சுயம்வர நிகழ்ச்சிக்கும் ஒரு வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை இனி இதை கண்டபின் சிம்புவிற்கு என்ன ஐடியா வருமோ தெரியாது, அவரும் சுயம்வர நிகழ்ச்சி நடத்தி தன் தந்தையோடு கலந்துகொண்டால் என்னாகும் சில பெண்கள் கொலைவழக்கில் சிறைக்கு செல்லவேண்டி […]

புரோகித்தை எளிதில் விடுமா?

அவர் போக்கில் இருந்த அன்றைய கவர்னர் சென்னா ரெட்டியினை பெண் முதல்வரே அலற வைத்த தமிழகம் இது புரோகித்தை எளிதில் விடுமா? இதில் இவர் கன்னத்தை வேறு தட்டி தொலைக்கின்றார். போனது ஒரு புகாருக்கு விளக்கம் கொடுக்க, அங்கு சென்று இன்னொரு புகாரினை இழுத்து வந்திருக்கின்றார் ஆக அந்த மோடி கூட்டத்தில் எல்லாம் ஒரு மாதிரி போல.. கவர்னர் கூட்டம் போட்டு விளக்கம் அளித்த விஷயம் சொல்ல வரும் செய்தி இதுதான் கவர்னருக்கும் முதல்வருக்கும் பல இடங்களில் […]

சிரிய விவகாரத்தில் புயலுக்கு பின்னரான அமைதி

சிரிய விவகாரத்தில் இப்பொழுது புயலுக்கு பின்னரான அமைதி, இன்னொரு புயலுக்கு முந்தைய அமைதியாக நிலை கொண்டிருக்கின்றது உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால், தீவிரவாதிகளிடமிருந்து முழு சிரியாவினையும் அந்நாட்டு ராணுவம் மீட்டாயிற்று, இத்தோடு சண்டை ஓய்ந்திருக்க வேண்டும் ஆனால் என்ன நடந்தாலும் சிரியா விவகாரம் ஓய விடமாட்டோம் எங்கள் கை அதில் இருந்துகொண்டே இருக்கும் என காட்ட வந்திருக்கின்றது அமெரிக்கா என்ன நடந்தாலும் நாங்களும் விடுவதாக இல்லை என வரிந்து கட்டுகின்றன சிரிய‌ ஈரானிய ரஷ்ய கூட்டணி […]

பழனிச்சாமி அரசு என்பது செத்துவிட்ட அரசு

பேராசிரியை ஆடியோ தொடர்பாக இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கின்றார் ஆளுநர் : செய்தி தமிழகம் மகா முக்கிய சிக்கலை சந்தித்தபொழுதெல்லாம் அமைதி காத்தவர் புரோகித் பாரதியார் பல்கலைகழக லஞ்ச வழக்கில் கூட அன்னார் அமைதி, இன்னும் ஏராளமான இடங்களில் மகா அமைதி காவேரிக்காக தமிழகம் பொங்கும் பொழுதும் அமைதிகாத்தவர், மூச் கூட விடவில்லை. பிரதமருக்கு கருப்புகொடி என்றபொழுது கூட கண்டுகொள்ளவில்லை ஆனால் பேராசிரியை விஷயத்திற்கு இவர் ஏன் பொங்குகின்றார்? கொழுந்தை கிள்ளினால் ஆணிவேர் ஏன் ஆடவேண்டும், காட்டுகோழி […]

பொறுத்து பொறுத்து பார்த்த தலைவி பொங்கிவிட்டார்

பொறுத்து பொறுத்து பார்த்த தலைவி பொங்கிவிட்டார் ஆசிபா விவகாரம், தேவாங்கு பேராசிரியை விவகாரம் என பல பெண்களுக்கு எதிரான விஷயங்களை கண்டித்து பொதுமக்களுடன் மாபெரும் போராட்டத்தை தலைவி நடத்தி இருக்கின்றார் சங்கம் இதில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது இந்தியாவே திரும்பிபார்த்த இந்த போராட்டத்தை இங்குள்ள சுயநல திருட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் உலகமே திரும்பி பார்க்கின்றது இம்மாதிரி கொடுமை செய்பவர்களை நாடற்றவர்கள் ஆக்கி சாகும்வரை தண்டிக்கவேண்டும் என முழங்கினார் தலைவி தமிழகத்தில் எந்த மாதர் சங்கமும் […]

தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்

தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம், அவ்வப்போது வாசிப்பதுண்டு அவர்களுக்கு ஆதொன் என்றொரு கடவுள் இருந்திருக்கின்றார், இது ஆதவனின் சாயலாகும், அகநாதன் என்ற பெயர் கூட எகிப்து கல்வெட்டில் வருகின்றது அவர்களின் பிரசித்திபெற்ற பிரமிடு கூட பெருமேடு என்ற வார்த்தையில் இருந்து வந்தது என்கின்றார்கள் உச்சமாக இன்றுவரை எகிப்தின் தொன்மை அடையாளமான‌ பிரமிடுகளை கூட தோண்டி முடிவினை கண்டுவிட்டார்கள் ஆனால் ஸ்பிங்க்ஸ் எனப்படும் மனிதமுகமும் சிங்க உடலும் கொண்ட சிலை ஏன் எழுந்தது என்பது பற்றி ஆராய்ச்சியாளரால் […]

2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து

2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து, அதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்துகொண்டிருப்பது அதனை விட ஆபத்து வங்கி அச்சடிக்கவில்லை, அங்கே பிரச்சினை இங்கே பிரச்சினை என தட்டுபாடு என ஆயிரம் காரணங்கள் சொல்லபடுகின்றன‌ தமிழக உள்ளாட்சி தேர்தல் மட்டும் அறிவிக்கபட்டிருந்தால் அந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏன் பதுக்கபட்டன என்பது விஷயமே அல்ல‌ ஆனால் இப்பொழுது ஏன்? கர்நாடக தேர்தலுக்காக இருக்குமோ? அரசியல் விளையாட்டில் எல்லாம் சாத்தியம் துரதிருஷ்டவசமாக‌ மோடி ஸ்வீடனில் இருக்கின்றார், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications