பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது

கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது, இந்த புத்தகத்தினை எழுதிய எழுத்தாளனை நேரில் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் நமக்கு முன்பாக அவனே சிரித்துவிடுவான் புத்தக ஆசிரியர் யோகா சித்தராம், பாபா ராம் தேவ் வகையறா போலிருக்கின்றது இந்த புத்தகத்திற்கும் ஒரு பதிப்பகம் அதற்கு பத்திரிகையில் விளம்பரம், இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? இன்று காவேரி வேண்டும் கன்னடம் ஒழிக, கர்நாடகம் மண்ணாய் போக என கோஷ்மிடுபவன் எல்லாம் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் […]

பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா பிறந்த நாள்

இந்தியாவில் அரசியவாதிகள் தவிர வாழும் காலத்தில் இந்தியாவின் பிரதமராக கூட வந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர் ஒரே ஒருவர்தான் அவர் நாட்டிற்காய் உழைத்த உழைப்பும் அவரின் சாதனையும் அப்படி பீல்டு மார்ஷல் மானெக்க்ஷா வங்கபோரில் அவர் காட்டிய வியூகமும், அதிரடியும்தான் 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை பிடித்து போரில் வெற்றிபெற வைத்தது அவர் பெயரை கேட்டாலே பாகிஸ்தான் அலறியது, அப்படி மிரட்டி வைத்திருந்தார். வல்லரசு நாட்டு தளபதிகள் கூட பார்த்து வியந்த வியூகம் அது அந்த போருக்குபின் இந்தியா […]

புலிகளின் கொடியினை திருடினாரா சீமான்?

புலிகளின் கொடியினை திருடினாரா சீமான், பரபரப்பு குற்றசாட்டுகள் இதிலென்ன பரபரப்பு? விஷயம் ஒன்றுமில்லை, ஆங்காங்கே நாம் தமிழர் கொடியினை தமிழகத்தில் கீழே போட்டு மிதிக்கின்றார்கள், முகம் துடைக்கின்றார்கள். இன்னும் எங்கெங்கோ துடைத்து எறிகின்றார்கள். இது நமக்கு பழகிய விஷயம், தேசிய கொடியினையே எது மேல் வண்ணம் எது கீழ்வண்ணம் என்பது அமைச்சர் பெருமக்களுக்கே தெரியாது தேர்தலில் கட்சிகொடி பிடிப்பதும் பின் அதனை கீழே போட்டு மிதிப்பதும் நமது கலாச்சாரம் ஆனால் புலிகள் கொடியினை , ஈழத்தவர் அப்படி […]

உண்ணாவிரத மேடையில் ராமசந்திரனின் கொள்கை விளக்க பாடல்கள்

அதிமுக உண்ணாவிரத மேடையில் ராமசந்திரனின் கொள்கை விளக்க பாடலை ஒலிபரப்பினார்களாம் அது என்ன தமிழ்நாட்டு அரசு பாடலா? ஆனாலும் முதல்வர் இருந்த மேடையில் ராமசந்திரனின் கொள்கை பாடல்கள் ஒலித்தன‌ திடீரென துள்ளுவதோ இளமை, நாணமோ இன்னும் நாணமோ போன்ற உலக தத்துவ பாடல்களும் ஒலியேறியதாம் அந்த மேடையில் பழனிச்சாமி பக்கம் கோகுல இந்திரா இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது எல்லா தத்துவ பாடல்களையும் ஒலிபரப்பிவிட்டு, கோகுல இந்திரா இருந்த மேடையில் “அழகிய தமிழ் மகள் இவள்” பாடலை ஏன் […]

பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது

கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது பாலஸ்தீன கிராமங்கள் கிட்டதட்ட 500 கிராமங்களை 1967 போரில் இஸ்ரேல் அபகரித்தது, அது முதல் ஒவ்வொரு ஆண்டும் அதை நினைவு கூர்ந்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர் இம்முறை அந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் சுட்டு 16 பாலஸ்தீனியர் மாண்டாயிற்று கிறிஸ்தவர்களுக்கு பெரிய வெள்ளி என்பது யூதருக்கு பெரும் பண்டிகை, பாஸ் ஓவர் என்பார்கள். அந்த கொண்டாட்டத்தில்தான் இக்கொடுமை நிகழ்ந்திருக்கின்றது இம்மாதிரி மக்கள் பேரணிகளை அவர்களுக்கு சொல்லி கொடுத்தவர் […]

பெட்ரோல் விலை திடீர் விலையேற்றம்

இந்த டிரம்ப் என்பவர் சீன இரும்பு இறக்குமதிக்கான வரியினை உயர்த்தினார் அல்லவா, அதன் தாக்கம் என்னாயிற்று என்றால் எங்கோ போயிற்று அதாகபட்டது சீனா பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியினையும் அதிகரித்துவிட்டது என் பொருளுக்கு நீ வரியினை உயர்த்தினால், உன் பொருளுக்கு நான் உயர்த்தமாட்டேனா என பதிலுக்கு செய்தாயிற்று இது உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்த, என்னாகுமோ என அஞ்சிய பெட்ரோல் உற்பத்தி நாடுகள் குழப்பத்தில் உற்பத்தியினை குறைத்துவிட்டன‌ அதன் விளைவாக பெட்ரோல் விலை திடீர் விலையேற்றம் […]

காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார்

தமிழ்நாட்டில் ஈழ சர்ச்சை என்றால் அங்கிள் சைமன் கோஷ்டி குதிப்பதை போல கன்னடத்தில் காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார் இரண்டுமே ஒரே வகை, இரண்டுமே 4 வோட்டு வாங்காது, இரண்டுமே வெற்று சவுடாலில் காலம் தள்ளுபவை இப்போது தனக்கான நேரம் என்பதால் வாட்டாள் வந்துவிட்டார், ஏப்ரல் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் அப்படியே ரஜினி படத்தை விடமாட்டேன் என சவால் விட்டுகொண்டிருக்கின்றார் இதே வாட்டாள் நாகரஜிக்கு ரஜினி தீவிர ரசிகர், தனக்கு பிடித்த பேச்சாளர் (!) நாகராஜ் […]

உண்ணாவிரதம்

“பங்காளி நாம உண்ணாவிரதம் இருக்கோம் , ஆனா பூரா பயலும் டெல்லியில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யவில்லை என கேட்கிறானே ஒழிய, ஒரு பயலாவது பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என கேட்கின்றானா? இதே கலைஞராக இருந்தால் எப்படி கொதிபார்கள் தெரியுமா ஆமாம் இதிலிருந்து என்ன தெரிகின்றது பங்காளி நம்மளை ஒரு பயலும் முதலமைச்சர் , துணைமுதலமைச்சர்ணு மதிக்கவே இல்லை, அப்படி நினைக்க்கவே இல்லைன்னு தெரியுது கை குடுங்க பங்காளி, கரெக்டா சொல்லிட்டீங்க” காவேரி சர்ச்சையால் […]

காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை

நிச்சயம் காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை கலைஞர் ஆட்சியில் முதல் சிக்கல் வந்தது, அவர் போராட தொடங்கியபொழுது ராமசந்திரன் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்றே பேசிகொண்டிருந்தார் வழக்கு தொடர்ந்தார் கலைஞர் அத்தோடு மிசாவும் வந்தது தேர்தலும் வந்தது அடுத்து வந்தார் ராமசந்திரன், காவேரி கரையில் சூட்டிங் எடுத்த நினைவுகள் அவரை விடவில்லை, காவேரி எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை மாறாக உன்னை விடமாட்டேன் என லதாவுடன் ஒரு படம் எடுக்க முனைந்தார், மொரார்ஜி தேசாய் […]

தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா

பத்ருஹரி எனும் ஞானி எப்பொழுதும் நாய்குட்டியுடன் இருப்பாராம், இன்னும் சில பெரும் ஞானிகள் அப்படி உண்டு இது நமது “ஞான தலைவி” குஷ்பு வீட்டின் நாய்குட்டி பத்ருஹரியார் தன்னுடன் இருந்த நாய்குட்டி யாரென தன் ஞான திருஷ்டியால் கண்டாராம் நாமும் அப்படி கண்டுவிடுவோம் இந்த நாய்குட்டி முற்பிறவியில் கிளியோபாட்ராவாக இருந்தது நமது ஞான திருஷ்டியில் தெரிகின்றது அப்பொழுது தான் தான் அழகி என அவள் ஆடிய ஆணவம் அடங்க, தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா அவளின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications