பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கையினை வெட்டும் அளவு அக்கா வன்முறையாளர் இல்லை

தமிழகத்தில் பாஜகவினை யாரும் வம்புக்கு இழுத்தால் “கை” இருக்காது : தமிழசை கையினை வெட்டும் அளவு அக்கா வன்முறையாளர் இல்லை கை இருக்காது என்பது காங்கிரஸ் இருக்காது, கை சின்னம் கொண்ட காங்கிரஸ் இருக்காது என அர்த்தம் கொள்ள வேண்டியது. அக்காவின் காங்கிரஸ் வெறுப்பு கொஞ்சமா என்ன? இங்கு எங்கே காங்கிரஸ் இருக்கின்றது? அதனை தமிழிசை வேறு விரட்ட வேண்டுமா?? இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது- ராஜ்நாத் சிங் பேச்சு இவர்கள் ஆட்சி முடிய‌ இன்னும் […]

துர்கா ஸ்டாலின் எல்லாம் திமுக மாநாட்டை நடத்தும் அளவு வந்தாயிற்று

இந்த திமுகவின் ஈரோடு மாநாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, நேற்று செய்தி பார்க்கும்பொழுது கலைஞர் டிவியில் அந்த காட்சி தெரிந்தது மாநாட்டு பந்தலை பார்த்து ஆலோசனைகளை கொடுத்துகொண்டிருந்தது துர்கா ஸ்டாலினும், உதயநிதியும் இதன்பின் யாருக்காவது அம்மாநாடு நடக்கும் திசைபக்கம் தலைவைத்து படுக்க விருப்பம் வருமா? என்றாவது தயாளு அல்லது ராசாத்தி அம்மாளை கட்சி மேடைகளில் யாராவது பார்த்ததுண்டா? அம்மனிதனுக்கு கட்சியினை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற எல்லா கோணமும் பிசறின்றி தெரிந்திருக்கின்றது துர்கா […]

காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு

காவேரி மேலாண்மை வாரியம் என்பதற்கும் , மேற்பார்வை வாரியம் என்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள அதிகார வித்தியாசங்கள் உண்டு அதனால் மேலாண்மை வாரியம் எனும் உத்தரவிடும் அதிகாரம் கொண்ட அமைப்பே வேண்டுமே தவிர, மேற்பார்வை எனும் மிக்சர் தின்னும் அமைப்பெல்லாம் தேவை இல்லை காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு கலைஞர் காவேரி கரையில் வளர்ந்தவர், ஜெயாவும் அப்படியே அவர் மைசூரில் வளர்ந்தாலும் அவரின் முன்னோர்கள் திருச்சி திருவரங்கத்தார் ஜெயாவினை இயக்கியதாக சொல்லபடும் சசிகலாவும் அதே காவேரிபாயும் […]

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை

எப்பொழுதும் யாராவது ஒரு தொடர் எழுதுவார்கள், பத்திரிகை உலகில் அது சகஜம் ஆனால் தினமணியில் Pa Raghavan புதிதாக ஒரு தொடர் எழுதுகின்றார், விஷயம் ஆன்மீகம் துறவு தத்துவம் பற்றியது. உண்மையில் இந்து மத தத்துவம் மிக உயர்ந்தது, ஆழமிக்கது. துறவு என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் அது வகுத்திருந்த எல்லையும் ஆழமும் உயரமும் பெரிது சிக்கல் என்னவென்றால் யாரும் பாமரருக்கு புரியும் வகை சொல்லவில்லை எமக்கும் துறவில் ஆசை இருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஒரே மகனை ஏற்காது என்றார்கள். […]

இந்த ஆதரவு எந்நாளும் நிலைக்கட்டும்

அந்த பள்ளியின் ஆசிரியர் விவகாரத்தை எழுதியதில் ஐடி முடக்கபட்டது என்பதுதான் விஷயம் ஆனாலும் நம்மை இத்தனை பேர் தேடியிருக்கின்றார்கள் எனன்பது எனக்கே மகா ஆச்சரியமும், வியப்புமாயிருக்கின்றது தொலைபேசியில் என்னாயிற்று என்றார்கள்? உடலுக்கு ஏதும் சிக்கலா என்றார்கள், ஏராளமான விசாரிப்புகள். ஐடி முடக்கபட்டது என்றதும் போக் செய்தெல்லாம் மீட்க முயன்றார்கள் , அவர்கள் அனைவருக்கும் நன்றி தற்காலிக ஐடிக்கு சென்றாலும் ஓடிவந்து சேர்ந்தார்கள் உங்கள் அன்புக்கும் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி, எந்நாளும் உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான இதயத்தை […]

ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான்

ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான் , தந்திரமிக்க நடவடிக்கை என தும்பிகள் சிலிர்ப்பு இப்படித்தான் இலங்கையில் மருத்துவமனையில் படுத்து புலிகள் அமைதிபடையினை சுட்டார்கள், பள்ளியில் இருந்து சுட்டார்கள் எங்கெல்லாம் ராணுவம் கை வைக்க தயங்குமோ, சந்தேகம் வராதோ அங்கெல்லாம் பதுங்கி சுட்டார்கள் இதெல்லாம் அப்பாவிகள் சேவை பெறும் இடமாயிற்றே, திருப்பி தாக்கபட்டால் என்னாகும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லை அப்படி யாழ்பாண மருத்துவமனையில் இருந்து வழக்கம் போல் புலிகள் சுட, பொறுமை இழந்த ராணுவம் டேங்க் மூலம் […]

மாவீரன் பகத் சிங்கிற்கு வீர வணக்கம்…

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த அந்த‌ தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன், அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று. சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் […]

எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்

திமுகவினருக்கு மூளை அதிகமாக? இல்லையா? என்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் ரசனை அதிகம் உள்ளவன் மட்டுமே குஷ்பு சங்கத்தில் இருக்க முடியும் நெற்றிணை, கார் கூந்தல் நாற்பது, கண்களாற்றுபடை, குறுநகை, அழகு நானூறு, இனியவை நாற்பது , கனியவை நாற்பது , குறுநகை, பேரழகு பத்து, துறுதுறுநூறு எல்லாம் இந்த முகத்திலே அடக்கம், ஆக எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம் உலகின் மிக அழகிய கவிதை இந்த முகம். ஆக உலகிலே ரசனை அதிகம் கொண்டவர்கள் […]

பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?

இந்த சீமான் பய எல்லாம் என்னவெல்லாமோ பேசுறான், அவன விட்டுட்டு நம்மள பைத்தியம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டானுக‌ சில திமுககாரனவிட, அதிமுக காரன விட, சைமனின் தும்பிகள விட நாம ஒண்ணும் மோசமில்ல. ஆனா நம்மளத்தான் சொல்றானுக‌ பைத்தியம் என்ன செய்யும்னு காட்டிற வேண்டியதான், இனி அந்த வீரமணி மாதிரி ஆட்கள் காதை பிடிச்சி கடிச்சி வச்சிருவோம் பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?  

திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்

ஈழத்தில் பிரபாகரன் என்றொருவர் போராளியாக இருந்தார், தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார் ஆனால் பல போராளிகுழுக்கள் வர வர அவருக்கு என்னமோ ஆனது, எல்லோரையும் விரட்டினார் கொன்றார் தான் ஒருவன் மட்டும் சிங்களனை வெல்லலாம் என நம்பினார், பெரும் தவறுகளை செய்தார் கடைசி நேரத்தில் தன் தவறுக்கெல்லாம் காரணம் தான் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தான் மட்டும் வந்தது என்பதை உணர்ந்தார், அத்தோடு செத்தார். நல்ல வாரிசை உருவாக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அதனால் ஈழ போராட்டமே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications