பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இயல்பிலே டிரம்ப் ஒரு பிசினஸ் மேன்

டிரம்ப் ஓசைபடாமல் புதிய யுத்தத்தை அறிவித்துவிட்டார், இது ராணுவ போர் அல்ல, மாறாக பொருளாதார போர் நிச்சயம் அமெரிக்கா என்பது சர்வ வல்லமை பொருந்திய தேசம், கிடைக்கும் ஒவ்வொரு வாய்பிலும் சம்பாதிப்பார்கள். அதன் வளமும் உலகின் எந்த மூலையில் இருந்து யாரும் அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் வாய்ப்பும் அதற்கு துணைபுரிகின்றன‌ இப்பொழுது என்ன சிக்கல்? 50 வருடம் முன்புவரை அமெரிக்காதான் உற்பத்தியில் நம்பர் 1ல் இருந்தது. போர்டு கார் முதல் தாம்ஸன் டிவி என எல்லா முண்ணணி […]

துர்கா அம்மையாரும் வரகூடாது என்றால் எப்படி?

“ஆமாடா, ராணி அண்ணா அரசியல் மேடைக்கு வரல்லை, தயாளு அம்மாளும் வரவில்லை, ராசாத்தியும் வரவில்லை அதற்காக துர்கா அம்மையாரும் வரகூடாது என்றால் எப்படி?, அவர் வருவார்டா அத பாக்கமுடியலண்ணா ஓரமா போங்கடா , இது என் கட்சிடா” நீ வளர்ந்து பெரியவனான பின்னாடி உனக்கு  “மீதி கலைஞர்”னு பட்டம் கொடுத்து மேடையில வச்சிருவோம் சரியா கண்ணு” “ராசா.. “பாதி கலைஞர்”னுல்லாம் பட்டம் கொடுக்கமுடியாது   நானும் கலைஞர் பேரன் தான், ஆனா கண்டுகொள்ள யார் இருக்கா? பூரா […]

யுவர் டைம் ஸ்டார்ட் நவ்..

இந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபட்டதாகவும் இன்ன சில சிக்கல்களாலும் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்வதால் இப்பொழுது பேச்சுவார்த்தை நடக்கின்றது இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் நானும் இயக்குநர் என கலந்துகொண்டார் சிம்பு வழக்கமாக வம்பு பேசும் சிம்பு, இப்பொழுது உருப்படியாக பேசியிருக்கின்றார் நடிகர்களுக்கு வெள்ளை பணமாகவும் கருப்பு பணமாகவும் கொடுக்கபடும் சம்பளம் வெள்ளையாக மட்டும் கொடுக்கபட வேண்டும் என ஒரே போடாக போட்டிருக்கின்றார், ஆடி போய் இருக்கின்றது திரையுலகம் ஆம் கருப்பு பணம் சினிமாவில் உண்டு என […]

தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்

“வானவர் கூந்தல் கண்டு மண்ணிடை மனதை விட்டார் மீணவர் விழியை கண்டு மீனென வலையை விட்டார் மானவள் நடையை கண்டு  வேடவர் அம்பை தொட்டார் தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்”

தமிழக மணல் மாபியா பற்றி இன்னும் தலக்காட்டு மக்களுக்கு தெரியாது போல

கன்னடத்தில் தலக்காடு என்றொரு இடம் உண்டு, சிறிய ஊர். ஆனால் அது சில விஷயங்களுக்காக பரபரப்பாக பேசபடுகின்றது அதாவது அந்த ஊர் காவேரி கரையில் உள்ளது, காவேரி சிக்கல் அல்ல மாறாக சிக்கல் மணலால் வந்தது முன்பொருகாலத்தில் அலமேலு எனும் ராணி இந்த ஊர் மண்ணாய் போகட்டும் என சாபமிட்டாராம், அதிலிருந்து அந்த ஊர் மண்ணாகிவிட்டதாம் இவர்கள் அதனால் அருகில் குடியேறினார்களாம் இன்றும் எடுக்க எடுக்க மண்ணாய் வருகின்றதாம், என்ன செய்தாலும் மணல் கூடுமே தவிர குறையாதாம், […]

டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம்

டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம் பெரிய பெரிய கம்பெனிகளையே அசால்ட்டாக வாங்கிய சிதம்பரம் காபி விலை அதிகம் என்றவுடன் வாங்கவில்லையாம் சென்னை விமான நிலையத்தில் அவர் காபி விலை கேட்டாராம், உடனே ஆடிபோய் வேண்டாம் என்றாராம் வாழ்வில் முதன் முறையாக சிதம்பரம் விமான நிலையத்தின் உள்ளே சென்றார் என நம்புங்கள், முன்பு அவர் நிதியமைச்சராக இருந்தபொழுதெல்லாம் ரயிலிலும், உருளைகிழங்கு லாரியிலுமே இந்தியா முழுக்க சுற்றினார்

போராட்டம் வெல்லட்டும் , நாசகார ஸ்டெர்லைட் ஒழியட்டும்

அந்த ஸ்டெர்லைட் முதலில் மகராஷ்ட்ரா ரத்னகிரி பக்கம் அமைந்தது, அதனால் பாதிக்கபட்ட விவசாயிகள் பொங்கினர். ஒரு கட்டத்தில் உள்ளே நுழைந்து ஆலையினை அடித்து நொறுக்கினர் அன்று முதல்வரான சரத்பவாருக்கு வேறு வழி இல்லாததால் உடனே கிளம்புங்கள் என உத்தரவிட்டார், அடித்து நொறுக்கியவர் மேல் ஒரு வழக்கும் இல்லாமல் அவர் பார்த்துகொண்டார் கோவாவில் நுழைய முயன்ற ஸ்டெர்லைட் அங்கிருந்தும் விரட்டபட்டது குஜராத்திலும் இந்த அபாய ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்நிலையில்தான் அதன் கவனம் தமிழகம் மீது வந்தது இங்கோ […]

அது என்ன குருத்தோலை ஞாயிறு?

ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு ஆம் பட்டனை தொட்டால் வேலையாம் அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள் இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது கர்தரின் […]

இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்

இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என சொன்னவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள், அதுவும் மத்தியிலும், உபி மாநிலத்திலும் இருக்கின்றார்கள் அவர்கள் கழுத்தை பிடித்து வைத்து ராமர் கோவில் என்னாயிற்று என கேட்கலாம், அதை விட்டுவிட்டு இந்தியா எங்கும் ரதம் ஓட்டி விளையாடுவோம் என்பது அர்த்தமில்லாத விஷயம் இந்த அய்யாகண்ணு என்பவர் பழனிச்சாமியினை விட்டுவிட்டு டெல்லியில் அம்மண போஸ் கொடுப்பதற்கும் இந்த காவி சாமிகள் […]

அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள்

மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில‌ சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார் அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர் அதில் ஒருவர்தான் டி.எம், சவுநத்ரராஜன் தன் வெண்கல குரலால் கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் தமிழகத்தை கட்டி போட்ட பாடகர், தியாகராஜ பாகவதர் எனும் மாபெரும் பாடக பிம்பம் டி.எம். சவுந்தர ராஜன் பாடல்கள் வந்தபின் மங்கி போயிற்று ராமசந்திரன், சிவாஜி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications