பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம்…

அழியும் தமிழை வேகமாக அழித்தே தீரவேண்டும் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள், அதில் கமலஹாசன் தொடங்கி வைத்த ய்ய்ய்ய் இம்சை கூடுதல் வேகம். “மை”யில் முடியும் எல்லாம் இனி “மய்” என்றுதான் சொல்லபட வேண்டுமாம், மயிர் என்பது கூட மய் ஈறு என சொல்லபட வேண்டும் என்ற அளவு தமிழ் பொங்கி வழிகின்றது இனி தாய்மை என்பது தாய்மய்ய், பெண்மை என்பது பெண்மய் , செழுமை என்பது செழுமய் என்றுதான் சொல்ல வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் […]

சாகர்மாலா (கடல் மாலை) நிச்சயம் வரவேற்கதக்க திட்டம்

இந்திய அரசு சாகர்மாலா என்றொரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்த இறங்கியிருக்கின்றது அதாவது இந்திய துறைமுகங்களை எல்லாம் ஒருங்கிணைப்பது, புதிய துறைமுகங்களை உருவாக்குவது. பழைய மீன்பிடி துறைமுகம் வணிக துறைமுகங்களை இணப்பது என மாபெரும் திட்டத்தில் இறங்கியுள்ளது இந்தியா தரையில் தங்க நாற்கர சாலை என்றொரு மாபெரும் திட்டம் வந்தபின் பயணம் எளிதாயிருக்கின்றதல்லவா?, அது வந்தபின் சரக்குகளை இன்னும் வேகமாக கொண்டு செல்லமுடிகின்றது, அப்படியே இன்னும் துறைமுக தொடர்பை வலுபடுத்தி துறைமுகங்களிலிருந்து சரக்குகளை வேகமாக கையாள இந்த திட்டம் […]

இணைய பத்திரிக்கையில் நம் பதிவு…

நமது ஏர்செல் பற்றிய பதிவு பிரபல இணைய பத்திரிகையில் வந்திருக்கின்றது, அந்த குழு ஆசிரியருக்கு நன்றிகள். இப்படியே சங்கத்தினை பற்றி தலைவியிடம் எடுத்து சொல்லுமாறு கேட்டுகொள்கின்றோம் ஏர்செல்: எழுந்த – வீழ்ந்த வரலாறு நெட்டிசன்: ஸ்டான்லி ராஜன் அவர்களது முகநூல் பதிவு: கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் கைபேசி உலகில் கோலோச்சிய ஏர்செல் நிறுவ…. PATRIKAI.COM   ஸ்டான்லி ராஜன் பதிவு

தலைவியின் சோகம் …. வருத்ததில் ரசிகர்கள்…….

தலைவியின் ரசிக கண்மணிகள் எல்லாம் மிகுந்த சோகமும் துயரமும் வருத்தமும் தரும் விஷயத்தை தலைவி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் உலக பத்திரிகைகள் எல்லாம் இதனை பெரும் செய்தியினை துயரமாக பதிந்து வருகின்றன‌ தலைவியின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் உடல்நலகுறைவால் அவதிபடுகின்றார்களாம், இது தலைவியின் மிக பெரும் துயரத்திற்கு காரணமாயிற்று இத்தகவலை கேட்டவுடன் சங்க உறுப்பினர்கள் மிகுந்த துயர் அடைந்து விட்டார்கள், கண்ணீர் கோலம் பூண்டுவிட்டார்கள். உலகெமெல்லாம் தலைவியின் தொண்டர்கள் விரதம், பிரார்த்தனை , நேர்ச்சை கடன் […]

மக்கள் நீதி மய்யம் : சின்னம்

இந்த மும்பை செம்பூர் தமிழ் பாசறைக்கும், அங்கிள் சைமனின் கோஷ்டிக்கும் பெரும் தொடர்பு உண்டு அவசரத்தில் சின்னம் கிடைக்காத ஆண்டவருக்கு மும்பை தமிழ்பாசறையின் வடிவம் கிடைத்துவிட்டது. “அ” என்பதை மட்டும் மாற்றி , தமிழகத்திற்கு சினிமா நட்சத்திரம்தான் உயிரெழுத்து என்பதை குறிக்க நட்சத்திர அடையாளம் மட்டும் பொருத்திகொண்டார். மேடையில் சொல்லும்பொழுது வம்பு வந்துவிட கூடாது என்பதற்காக பாசறையின் ஒரிஜினல் ஓணர் சைமனுடன் போஸ் கொடுத்துவிட்டார் இதுதான் நடந்திருக்கின்றது. “ஆழ்வார் பேட்டை ஆண்டவா, இது பொய்யென்று வேட்டியினை போட்டு […]

கமலஹாசன் என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான காமெடிகள் கிளம்புகின்றன‌

கமலஹாசன் என்பவர் வந்தாலும் வந்தார், ஏராளமான காமெடிகள் கிளம்புகின்றன‌ பொதுவாக மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, எதிர்கட்சிகாரனுக்கும் வோட்டுரிமை உண்டு என ஒரு மாதிரி வாழ்த்தும் திமுக, இப்பொழுது காகிதபூ மணக்காது என சொல்லிவிட்டது (இதே திமுக முன்பு தங்க பூவான குஷ்பூவினை சேர்த்ததும், பின் அவரின் அதிரடியான வளர்ச்சிக்கு பயந்து விரட்டியது பற்றி எல்லாம் பேச கூடாது. ஆக தலைவி காகித பூ அல்ல என்பதை திமுக‌ புரிந்தவரைக்கும் சங்கம் மகிழ்கின்றது) “நான் பூ அல்ல […]

ஏர்செல் நிறுவணம் மூட்டையினை கட்டுகின்றது…

கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் கைபேசி உலகில் கோலோச்சிய ஏர்செல் நிறுவணம் மூட்டையினை கட்டுகின்றது என்கின்றார்கள் வியாபார உலகில் அக்கார செட்டியார்களுக்கு பின் பல தமிழர்கள் முத்திரையிட்டனர், அதில் ஒருவர் சின்னகண்ணு சிவசங்கரன், சென்னையில்தான் பிறந்தார் , 1980களில் கம்பியூட்டர் வாங்கி விற்கும் தொழிலில் இறங்கினார் , அமிர்தராஜ் குரூப்பிடம் இருந்து அவர் வாங்கிய‌ ஸ்டெர்லிங் கம்பெனி சக்கை போடு போட்டது சிங்கப்பூர் அவரின் தலமையகம் ஆனது, இப்பொழுது செஷல்ஸ் குடியுரிமை கொண்டிருக்கின்றார். தூத்துகுடி ஸ்டெர்லிங் ஆலை, மெர்கண்டைல் […]

ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம் இன்று…

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. […]

பாகிஸ்தானின் தேசிய மொழியில் ஒன்றாக்கிவிட்டது சீன மொழி …

உலக தாய்மொழி தினத்தை ஒவ்வொரு நாடும் உற்சாகமாக கொண்டாட, பாகிஸ்தான் மகா சோகத்தில் அனுசரித்திருக்கின்றது யாருக்கும் ஏற்பட கூடா அவமானம் பாகிஸ்தானுக்கு நடந்துவிட்டது, பாகிஸ்தான் சீனாவின் கூட்டாளி என முதலில் சொன்னது, பின் அடிமை ஆனது , இன்று கொத்தடிமை ஆகிவிட்டது அதாகபட்டது பாகிஸ்தானின் தேசிய மொழிகளில் ஒன்றாக சீனாவின் மாண்டரின் மொழி அறிவிக்கபட்டாயிற்று. மாண்டரினுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை லட்சம் சீன மக்கள் வசிக்கின்றார்கள்? அவர்கள் என்ன பூர்வ குடிகளா? என்றால் இல்லை, பின்னர் ஏன்? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications