பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கூத்தாடி பசங்க…

நடிகர் , நடிகையர் கலைஞர்கள், கலையுலகமெல்லாம் கருணாநிதி அரசியலுக்கு வந்து கொடுத்த பெயர்கள் பட்டங்கள். அதற்கு முன்பு அவர்கள் பெயர் கூத்தாடிகள் அதுவும் அதற்கு முந்தைய காலத்தில் சபையில் சொல்லமுடியா பட்டங்களெல்லாம் இருந்தன‌ அப்படிபட்ட கூட்டமெல்லாம் இன்று ஏதோ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் போல பேசிகொண்டிருப்பதெல்லாம் காலகொடுமை ஆயிரம் சர்ச்சை இருந்தாலும், நின்றுபோன கடிகாரம் கூட இருமுறை சரியான நேரத்தை காட்டும் என்பதுபோல ஈரோட்டு அய்யா சொன்னது சரியான வார்த்தை “கூத்தாடி பசங்களையெல்லாம் அரசியல் பேச வைக்குறானுக அந்த […]

பழமொழி நானூறு : 03

“விளக்கு விலை கொடுத்துக் கோடல் விளக்குத்துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்குமருள் படுவது ஆயின் மலை நாட என்னைபொருள் கொடுத்துக் கொள்ளார் இருள்” விளக்கினையும் அதன் திரி முதலான நெய்யினையும் விலைகொடுத்து வாங்குவதே நல்ல வெளிச்சத்தை பெறத்தான், அந்த வெளிச்சத்தில் எல்லா பொருளையும் தெளிவாக காண்பதற்குத்தான், அப்படி கல்வி என்பதும் நூல்கள் என்பதும் ஞானத்தை தருவதாக இருக்கவேண்டும், மலைநாட்டு மகனே, யாராவது பொருள் கொடுத்து இருள் வாங்குவார்களா? அப்படி ஞானவெளிச்சம் தராத நூல்களை கற்கலாமா? அதனால் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 05

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 05 “நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்அனைத்துலகும் வீடா மது” இக்குறள் “நினைப்பு மறப்பு நெடும்பசியும் அற்றால் அனைத்துலகும் வீடாம் அது” என பிரிந்து பொருள் தரும் நினைப்பு என மனதில் எழும் எல்லா ஆசைகளையும் மறந்து, பசி எனும் உடலாலும் நினைவாலும் ஆசையாலும் எழும் தீயினையும் அகற்றினால் எல்லா உடலுக்கும் உடல் உறைவிடமாகும் என்பது பொருள் எல்லா வகை லவகீக உணர்வுகளையும் […]

அந்த மெய்டன் மருத்து கம்பெனி சர்ச்சை

அந்த மெய்டன் மருத்து கம்பெனி சர்ச்சை இந்தியாவின் ஹரியானாவில் உள்ளது மெய்டன் மருந்த்து தயாரிப்பு நிறுவணம், இந்த நிறுவணத்தின் மருந்துகளை உட்கொண்ட ஆப்ரிக்க காம்பியா நாட்டு குழந்தைகள் பலர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கின்றது இந்திய கம்பெனி மருந்துகளே சாவுக்கு காரணம் என ஐ.நா சுகாதார மையம் அறிவிக்க அந்த மருந்துக்கு அனுமதிகொடுத்த இந்திய மருந்துகழகமும் இப்பொழுது சிக்கலில் உள்ளது முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்துவகை காம்பியாவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யபட்டது என்றும் இதர மக்களின் பயன்பாட்டில் […]

ஈரானில் நடக்கும்

ஈரானில் நடக்கும் பெண்கள் போராட்டம் தீவிரமடைந்து உலகத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றது, ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய பெண்களும் பெண் எம்பிக்களும் களத்தில் குதிக்கின்றனர் ஈரானில் ஷியாபிரிவு இஸ்லாமியரின் கடுமையான இறுக்கமான ஆட்சி நடக்கின்றது, அங்கு பெண்களுக்கு பெரும் கட்டுபாடு உண்டு, உடலை மறைக்கும் ஆடைகளும் தலைமுடியினை மறைக்கும் ஹிஜாப்பும் அங்கு பெண்களுக்கு கட்டுபாடானது சில வாரங்களுக்கு முன் ஒரு மாணவி சரியாக ஹிஜாப் அணியவில்லை என காவல்துறையினர் தாக்க அப்பெண் இறந்தேவிட்டாள், இதை அடுத்து ஹிஜாப் […]

தரை மேல் நடக்க வைத்தான்

கட்சியின் தூக்கம் கலையாதோஉள்ளத்தின் ஏக்கம் தொலையாதோநடப்பவர் வாழ்க்கை மலராதோஒரு நாள் பொழுதும் புலராதோ தரை மேல் நடக்க வைத்தான்எங்களைத் கண்ணீரில் தவிக்க‌ வைத்தானகரை மேல் இருக்க வைத்தான்எங்களை சாலைக்கு இறங்க வைத்தான்

தமிழகத்தில் நடக்கும்…

தமிழகத்தில் நடக்கும் இந்துதுவேஷ சர்ச்சைகளெல்லாம் 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியன் விதைத்த விதைகள், போர்ச்சுகீசியனும் அவனை தொடர்ந்து பிரிட்டிஷ்காரனும் வளர்த்த விஷ விதைகள் இந்த நச்சு செடிகள் வயலில் களைபோல இருந்து வெள்ளையனுக்கு காவல் இருந்தன, அவன் அதனை நீதிகட்சியாகவும், திராவிட கழகமாகவும் மாற்றினான் அதிகம் இஸ்லாம் இந்து மோதல் இல்லாமல் இந்து மக்கள் பெரும்பான்மையான தமிழகத்தை குழப்பவும் மதமாற்றம் செய்யவும், இந்த குழப்பத்தில் வெள்ளையன் வேண்டும் என்ற குரல் எழவும் அவனுக்கு இப்படியான ஒட்டுகுழுக்கள் தேவைபட்டன‌ மன்னர்கள் […]

பழமொழி நானூறு : 02

“சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றிக்கற்றொறும், “கல்லாதேன்” என்று, வழி இரங்கி,உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல்கற்றொறும் தான் கல்லாத வாறு” தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும், வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்படவேண்டும்.இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன் றையும் கற்குந்தொறும் தான் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 04

“உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்பிறப்பின்றி வீடாம் பரம்” இக்குறள் “உறக்கம் உணர்வோடும் உயிர்ப்பின்மை அற்றால் பிறப்பின்றி வீடாம் பரம்” உறக்கத்தை குறைத்து, பசி உள்ளிட்ட உணர்வுகள் அற்றுபோகும்படி செய்து, லவுகீக உயிர்நிலை அதாவது அங்குமிங்கும் ஓடோடி திரியும் அந்த இயக்கத்தை ஒழித்து சமாதிநிலை எனும் உன்னத நிலைக்கு வந்தால் பிறப்பில்லா நிலையினை அடையலாம் என்பது பொருள் உறக்கம், பசி, இதர உணர்வெல்லாவும் உயிர்த்திருக்கின்றோம் என்பதை காட்ட அசைவும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானவை அது இன்றி வாழ்வில்லை எனும்பொழுது […]

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன்

அந்த வெற்று மாறனுக்கு சில ஆதரவுகள் கிளம்புகின்றன, அந்த காலத்தில் சோழர்கள் அபரிமிதமான பிராமண ஆதரவு கொண்டிருந்தார்களா, அந்த கரிகாலன் விவகாரத்தில் என்னதான் நடந்தது, நிரம்ப படித்தவரான பாலகிருஷ்ணன் ஐ.ஏ.ஸ் கூட ஒருமாதிரியாக பேசுகின்றாரே ஏன் என கேட்டார்கள் அன்பர்கள் நாமும் அவர் வீடியோவினை கண்டோம், சில பதில் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம் அவர் சொல்வது போல ராஜராஜசோழனும் ராஜேந்திரமும் மட்டும் யாகமோ வழிபாடுகளோ பார்ப்பனர்களுக்கு இடமும் வீடும் கொடுக்கவில்லை அது பாரத வழமையாய் இருந்தது, அதை முற்கால […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications