பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வினோத பிறவிகள்

தஞ்சாவூர் சிவன் கோவில் பற்றியே ஆளாளுக்கு பார்ப்பான் ஆதிக்கம், அடிமைகள் வதம், வெட்டி செலவு,நிலத்தை பறித்து கட்டி, இந்து அல்லாதவன் கட்டிய கோவில் என்றெலலம் 1000 ஆண்டுக்கு முந்தைய இந்து மன்னனை பற்றியே பேசுவார்களே தவிர வேறு கட்டடங்களை காட்டுவார்களா என்றால் இல்லை 500 ஆண்டுக்கு முன் ஒரு பெர்ஷிய பெண்ணுக்காக ஆப்கானிய மன்னன் எனும் அந்நியன் இந்நாட்டு செல்வம் பல்லாயிரம் கோடியில் தாஜ்மஹால் கட்டினானே அதைபற்றி பேசுவார்களா? சென்னையில் இந்திய தொழிலாளர்களை கொண்டே பிரமாண்ட கோட்டை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 03

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 03 “சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்பவநாச மாகும் பரிந்து” இக்குறள் “சிவன் உருவந்தானாய் செறிந்தடங்கி நிற்கில் பவநாசம் ஆகும் பரிந்து” என பிரிந்து பொருள் தரும் தவத்தில் நிலைத்து ஐம்புலன்களையும் அடக்கி, சித்தம் புத்தி மனம் என எங்கும் மாயைகளையும் லவுகீக மயக்கங்களையும் அகற்றி முழுக்க சிவமயமான நினைவில் நின்றால் உள்ளும் புறமும் சிவநினைவுடன் இருந்தால் அங்கு செய்த பாவமும் கர்மாவும் […]

நவராத்திரி சிந்தனைகள் : 9.2

தத்துவங்களும் போதனைகளும் இறை நம்பிக்கையும் அன்னை சக்தியின் மாபெரும் வல்லமையினையும் விளக்கி சொன்ன நவராத்திரி போதனை பண்டிகைகளின் உச்சநாள் இந்த விஜயதசமி எனும் நன்னாள்விஜய என்றால் வெற்றி, தசம் என்றால் பத்து. பத்தாம் நாள் வெற்றிநாள் என கொண்டாடும் பெருநாள் இதுஅன்னையின் மூன்று வடிவங்கள் போல லவுகீகம், ஆன்மீகம், சூட்சுமம் என மூன்று பெரும் தத்துவங்களை சொல்லும் நாள் இது முதலாவது சூட்சும விளக்கமாக தன் பக்தர்களை மிக கொடுமைபடுத்திய அசுரனை அன்னையே இறங்கி வந்து அழித்தாள், […]

நவராத்திரி சிந்தனைகள் : 9.1

நவராத்திரி பண்டிகை அன்னை மகிஷாசூரனை கொன்றாள், ராவணனை ராமன் வீழ்த்தினான் என கொண்டாடுகின்றது இது இந்த நவராத்திரியின் தத்துவம் உண்மையில் இந்துக்களுக்கு 4 நவராத்திரி உண்டு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு நவராத்திரி என நான்கு நவராத்திரிகள் வருடம் முழுக்க உண்டு, இந்த நவராத்திரிகளில் இரண்டு நவராத்திரி காலம் சிறப்பானது குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் அந்த பங்குனி சித்திரை மாத நவராத்திரி எனும் சைத்ர நவராத்திரி, வெயில்காலம் முடிந்து மழையும் குளிரும் தொடங்கும் சாரதா நவராத்திரியான […]

சுப்பிரமணிய சிவா

1884ம் ஆண்டு இதே நாளில் திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு எனும் ஊரில் பிறந்த அவர் பெயர் சுப்பராமன், பிராமண குடும்ப பிறப்பு திராவிட கும்பல் சொல்வது போல எல்லா பிராமணரும் பெரும் செல்வமும் அதிகாரமும் கொண்டிருக்கவில்லை வறுமை அங்கும் தாண்டவமாடிற்று, அப்படி வறிய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் இந்த சுப்பராமன் கொடிய வறுமையில் கல்விக்காக போராடி எங்கும் அது நிறைவுபெறாமல் திருவனந்தபுரத்திற்கு சென்று ஒரு குருகுலத்தில் சமைக்கும் வேலையினை செய்துகொண்டே கற்றார், அப்பொழுதுதான் சதானந்த சுவாமிகள் தொடர்பு […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 100

“கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்பெற்றது கொண்டு மனந்திருந்திப் – பற்றுவதேபற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்துநிற்பாரே நீணெறிச்சென் றார்” கற்றதை நன்கு தெரிந்துகொண்டு, அடக்கத்துடன், தீயனவற்றை நீக்கி, நல்லன செய்து, பெற்றிருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் திருத்தமாகப் பற்றவேண்டியதைப் பற்றி, பணி அறவழியில் நிற்க, ஒன்றாக விளங்கும் இறைவனை உணர்ந்து, நின்று ஒழுகுபவரே, நீண்ட நன்னெறியில் செல்பவர் ஆவார் என்கின்றார் குமர குருபரர்.

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 02

“அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்பிறந்துழல வேண்டா பெயர்ந்து” இக்குறள் “அறம் பாவம் ஆயும் அறிவுதனை கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து” என பிரிந்து பொருள் தரும் அறம் எனும் புண்ணியம் பாவம் எனும் தண்டனைக்குரிய காரியம் எதுவெல்லாம் என ஆய்ந்து அறியும் ஞானமான அறிவினை பெற்று அதன்படி வாழ்ந்தால் பல பிறப்புக்களாக பிறந்து உழல வேண்டிய அவசியமில்லை என்பது குறளின் பொருள் வாழும் பொழுதே அறக்காரியங்களை செய்து, தர்ம நெறிபடி வாழ்ந்து பாவங்களை விலக்கி புண்ணிய வாழ்வை […]

நவராத்திரி சிந்தனைகள் : 08

வீரம் என்பது பராக்கிரமத்தால் மற்றவர்களை வெல்லுதல் மட்டும் அல்ல, தன்னை வெல்லுதல் என அறுதியிட்டு சொன்ன மதம் இந்துமதம், எவன் தன்னை கட்டுபடுத்தி தர்மத்தையும் இறைவனையும் தேடுவானோ அவனையே உண்மையான வீரன் எனவும் அந்த ஞானமதம் குறிப்பிட்டு காட்டியது ஒவ்வொரு மனதிலும் அகங்காரம் உண்டு, பேராசை உண்டு, இன்னும் ஏகபட்ட மயக்கங்கள் உண்டு. அந்த மயக்க குரோதங்களையெல்லாம் யார் வெற்றி கொள்வானோ அவனே முக்தி அடைவான் என்றது இந்துக்கள் போதனை வீரத்தின் உச்சபட்சம் தன்னை வெல்வது தன் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 99

“கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் – முற்றத்துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே யின்பம்இறந்தவெலாந் துன்பமலா தில்” கற்றுத் துறைபோய காதலனுக்குக் கற்புடைய அவன் மனைவி பெற்றுக்கொடுத்த முதல் மகன் போன்றதே, துறந்தவர்களுக்கு மெய்யுணர்வில் தோன்றும் பேரின்பம். மற்றைய இன்பமெல்லாம் துறவிகளுக்குத் துன்பமே. நிரம்ப கற்ற ஒருவனுக்கு அவனின் பத்தினி மனைவி பெற்றுகொடுத்த தலைமகன் என்பவன் பெரும் விருப்பமானவன் இன்பமானவன், அந்த மகன் அவனின் கனவும் இன்பமுமாவான், பெருமிதமும் அவனே, அவனை காத்து வளர்த்து தன்னைபோல் உருவாக்கும் […]

அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது

அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய எல்லையும் வங்க எல்லையும் கோரமாக எரிந்தது, எரிந்தது என்பதை விட இந்துக்கள் எரிந்தனர் அவர்கள் சொத்துக்கள் எரிந்தது, இந்து பெண்களெல்லாம் கற்பிழந்து சாவை பெற்றுகொண்டும் ஓடிகொண்டுமிருந்தனர் தனக்கு அள்ள அள்ள செல்வத்தை வழங்கிய இந்தியா தன் கையினை விட்டு போகும் வெறுப்பில் வெள்ளையன் செய்த சதி அது நிச்சயம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications