பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 08

“பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்சவிகற்ப முணர்வதே வீடு அர்த்தமில்லா உணர்வை அதாவது உடலே பிரதானம் எனும் உணர்வை அறுத்து உண்மையான பொருளை தேடி தவமிருந்து பிரபஞ்சத்துடன் கலப்பதே வீடு பேற்றுக்கான வழி என்கின்றார் ஒளவையார். அழிய கூடிய உடலிலும் அதன் ஆசைகளிலும் மனதை வைத்து ஆசையினை செலுத்தி வாழ்வினை வீணாக்காமல் அழியாத நித்தியமான பிரபஞ்ச சக்தியினில் கரைந்து வீடு பேறு அடைய முயற்சிக்க வேண்டும் என்பது ஒளவை சொல்லும் போதனை

நவராத்திரி சிந்தனைகள் : 03

நவராத்திரி சிந்தனைகள் : 03 அன்னபறவை வெண்மை நிறமானது, எப்பொழுதும் முழு வெண்மையாக காட்சி அளிப்பது. வெண்மை என்பது தூய்மையின் நிறத்தை குறிப்பது, கலைகளும் அதன் பலனும் எப்பொழுதும் தூய்மையாய் உயர்ந்ததாய் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தில் அன்னபறவை சரஸ்வதிக்கு சின்னமாக்கபட்டது அன்னம் எப்பொழுதும் சுத்தமாக காட்சியளிக்கும், சுத்தமில்லாமலோ அழக்கு அடைந்தோ அதனை காண முடியாது, கலைகள் எப்பொழுதும் சுத்தமாக தூய சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்ற தத்துவம் அதில் இருந்தது அன்னம் நீர், நிலம், வானம் என […]

குமரகுருபரர் நீதி நெறி விளக்கம் : 95

“மெலியார் விழினு மொருவாற்றா னுய்பவலியார்மற் றொன்றானு முய்யார் – நிலைதப்பிநொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்உய்யுமா லுய்யா பிற” மெல்லிய பொருள் ஒன்று மேலிருந்து கீழே விழுந்தால் அது நொறுங்காது, ஆனால் கனமான பொருள் கீழே விழுந்தால் உடைந்துவிடும் , அப்படி ஒன்றுமில்லா சாமானியனோ பெரும் அறிவில்லாதவனோ வீழ்ந்தால் அவனுக்கு ஏதுமில்லை ஆனால் கற்றறிந்த பெரியோர்கள் வீழ்ந்தால் அந்த பாதிப்பு கடுமையானதாக இருக்கும் எழமுடியாதவாறு இருக்கும் என்பது பொருள் ( சழக்கு என்றால் தளர்ச்சி அல்லது சறுக்கல் என […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 07

“குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு” இப்பாடல் “குறித்து உருவமெல்லாம் குறைவின்றி மாற்றில் மறித்து பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும்உருவம் என்றால் காட்சி, மாய காட்சிகளும் ஆசைகளும் என இங்கு பொருள் கொள்ளலாம் மாய காட்சிகளும் அது கொடுக்கும் ஆசைகளின் மூலத்தை கண்டறிந்து அந்த காட்சிகளை மாற்றி அதாவது அங்கு அந்த மாய காட்சிகளுக்கு பதில் சிவசிந்தனை , உண்மை ஞானம் என மாற்றி வைத்தால் பிறப்பில்லா நிலைக்கு தடை ஏதுமில்லை […]

நவராத்திரி சிந்தனைகள் : 02

இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் வாழ ஒரு தொழில் அவசியம், ஒரு வேலையினை ஏதோ ஒரு வடிவில் அவன் செய்ய வேண்டும், அவனுக்கு ஒரு பலன் வேண்டும் மானிட வாழ்வில் அவன் இந்த சமூகத்துக்கு ஒன்றை கொடுத்து தனக்குதேவையானதை பெற வேண்டும் இதுதான் அவனுக்கு விதிக்கபட்ட வாழ்வு, மற்ற விலங்குகளில் இருந்து அவன் இங்குதான் வேறுபடுகின்றான் அவன் ஆறாம் அறிவு பெற்ற பலன் இதுதான், இங்கேதான் கூர்ந்து கவனித்தது இந்துமதம் ஆம், வேலை செய்வது என்பதை மாடும் […]

நவராத்திரி சிந்தனைகள் : 01

கலை என்பது வெறும் ரசிக்க கூடிய படைப்பினை மட்டும் கொடுக்காது, வெறும் தற்காலிக புகழை கொடுக்காது, சில இடங்களில் செல்வத்தை மட்டும் கொடுக்காது. கலையினை தெய்வ நினைவோடு ஒருவன் தொடரும் பொழுது அது அவனை முக்திக்கு சேர்க்கும் ஞான நிலைக்கு இழுத்து செல்கின்றது “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்” என தெளிவாக சொன்னான் வள்ளுவன், ஆம் கலையோ கல்வியோ அதன் உச்சபட்ட நிலை கடவுளை உணர்வது உணர்ந்ததை உணர்த்துவது. கலை படைப்பு என்பது சாமான்யம் […]

ஆர்.எஸ்.எஸ்

பிரிட்டிசாரிடம் சிக்கிய இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என தேசம் போராடியபொழுது சுதந்திரம் அடைந்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் யாரிடமும் அன்று இல்லை ஆப்கானியரோடு நடந்த இந்து விடுதலை யுத்தத்தில்தானே வெள்ளையன் புகுந்தான் அப்படியானால் விடுதலையின் நோக்கம் என்ன என்பதை யாரும் சிந்திக்கவில்லை சுதந்திரம் கிடைத்தால் இத்தேசம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும், என்னென்ன பாதிப்பு வரும், இந்தியா எப்படி சுதந்திரபோராட்ட நோக்கில் அதாவது ஆயிரமாண்டு போராட்ட பாதையின் இலக்கில் இருந்து மாறும் என யாரும் யோசிக்கவில்லை அந்த […]

நீதிநெறி விளக்கம் : 94

நீதிநெறி விளக்கம் : 94 “மறைவழிப் பட்ட பழமொழி தெய்வம்பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப்புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும்சென்றுதைக்குஞ் சேயார் முகத்து” அழுகிய மாமிசத்தை மூடி வைத்தாலும் அதலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைக்க முடியாது, அப்படியே ஒருவன் எங்கோ மறைவாக பேசிய பழிகளும் வஞ்சக மொழிகளும் தெய்வம் கண்ணை திறக்கும்பொழுது எல்லா இடத்துக்கும் பரவிவிடும் என்பது பொருள். யாரும் கண்காணிக்காத இடத்தில் இன்னொருவரை பற்றி பழிபேசுகின்றோம் என பேச வேண்டாம், தெய்வம் அவனை தண்டிக்கும் நேரத்தில் மறைவாக […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 160 – உருபாதீகம் / குறள் : 06

“நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்தனக்கொன்று மில்லை பிறப்பு” அதாவது இந்த உலக மயக்கமான விருப்பு, வெறுப்பு, பந்தம், பாசம் போன்றவற்றை மறந்தால் அவற்றில் இருந்துவிடுபட்டு ஆசை மயக்கம் கடந்த பெரு ஞானநிலையினை அடைந்தால் மீண்டும் பிறப்பில்லை என்கின்றார் ஒளவையார் மனதில் எழும் நினைவுகளும் ஆசைகளுமே எல்லா துன்பத்துக்குமே காரணம், நடந்ததை நினைப்பதும் இப்படி நடக்கவேண்டும் என நினைப்பதுமே மானிடரின் எல்லா துயரத்துக்கும் காரணம், அந்த நினைப்பை வெறுத்து அறுத்து நடந்ததையும் எதிர்கால ஆசைகளையும் துறந்தால் ஞானம் பெருகும், […]

ஆச்சரகோவை : 60

ஆச்சரகோவை : 60 “யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்குஓர் ஆறு செல்லும் இடத்து” கற்றறிந்த பெரியார்கள், அனுபவஸ்தர்கள், மூத்தவர்கள் ஆகியோர் நடந்து செல்லும்பொழுது அவர்களை நடக்கவிட்டு தான் மட்டும் குதிரை, தேர், பல்லக்கு போன்ற வாகனங்களில் அறிவுடையோர் ஏறமாட்டார்கள் அவர்கள் வெயிலில் வாடி நடக்க அறிவுடையோர் தனக்கு குடை பிடிக்கமாட்டார்கள், அவர்கள் பாதம் மண்ணில் காயும்படி இருக்க அறிவுடையோர் தன் பாதங்களுக்கு செருப்பு அணியமாட்டார்கள் அதாவது பெரியோர்களையும் அறிஞர்களையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications