ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 03
“கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்இரும்புண்ட நீரு மியல்பு” இக்குறள் “கரும்பினில் கட்டியும் காய்பாலில் நெய்யும் இருண்ட நீரும் இயல்பு” என பிரிந்து பொருள் தரும் கரும்புக்குள்தான் கட்டி வெல்லம் ஒளிந்திருக்கின்றது, ஆனால் அது கரும்போடு விளையாது. கரும்பை பிழிந்து சாறு எடுத்து அதனை காய்ச்சினால் கட்டி வெல்லம் கிடைக்கும் பாலுக்குள் நெய் உண்டு, ஆனால் பாலோடு கறக்கமுடியாது. பாலை பக்குவபடுத்தி கடைந்து எடுத்தால் நெய் கிடைக்கும் அப்படியே இரும்பு கடினமானது ஆனால் அதை வெப்பத்தில் உருக்கும் பொழுது […]