பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை

இந்த இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை அதாவது இந்த டெங்கு என்பது இலுமினாட்டி தமிழகத்தில் பரப்பிவிட்ட விஷயமாம், அதற்கு முன் அப்படி நோயே இல்லையாம். நோய்பரப்பிவிட்டு சம்பாதிக்க இலுமினாட்டிகள் கிளம்பிவிட்டார்களாம் இந்த கம்முனாட்டிகள் எங்கிருந்துதான் யோசிக்குமோ தெரியாது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து நோய்களும் தோன்றின, மானிட இனம் வளர வளர நோய்களும் வளர்ந்தன மருத்துவமும் வளர்ந்தது, அது தொடர்கின்றது தமிழகத்தில் முன்பெல்லாம் ஏகபட்ட கொள்ளை நோய்கள் மிரட்டியிருக்கின்றன‌ காலரா, மலேரியா என வரும் கொள்ளை […]

கலைஞரின் செயலாளர் சன்முகநாதனின் பேட்டி

கலைஞரின் செயலாளர் சன்முகநாதனின் பேட்டி ஒன்று தி இந்து பத்திரிகையில் வந்திருக்கின்றது கலைஞருக்கு நிழலாக இருந்தவர் சன்முகநாதன், கலைஞர் சொல்ல சொல்ல எழுதியவர் அவர், கலைஞர் இருக்குமிடமெல்லாம் அவர் இருந்தார் எத்தனையோ சிக்கலான காலங்கள் வந்தபொழுதெல்லாம் அவர் வாய் திறக்கவில்லை, கலைஞரோடு இருக்கின்றார் என்ற காரணத்திற்காக அவர் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல‌ அப்பொழுதெல்லாம் வாய் திறக்கா சன்முகநாதன், கலைஞர் அமைதியான இக்காலங்களில் வாய்திறக்கின்றார் உறுதியாக சொல்லலாம் கலைஞரின் மனம் அறிந்தவர்களில் முரசொலிமாறன் போல அவரும் ஒருவர் அந்த […]

குஷ்பூ மிக அட்டகாசமாக புதிய தலைமுறைக்கு பேட்டி

குஷ்பூ மிக அட்டகாசமாக புதிய தலைமுறை டிவியில் பேசிகொண்டிருக்கின்றார் தொகுப்பாளரின் எந்த கேள்வியும் அவருக்கு சிக்கல் இல்லை, சில இடங்களில் அவர் பெண்சிங்கமாக உறுமும்பொழுது கேள்வி கேட்பவர் முகம் இருள்வதை காணமுடிகின்றது “நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு” என்ற பாரதியின் வரிகளுக்கு முழு வடிவமாய் தெரிகின்றார் புதிய தலைமுறையில் குஷ்பூ கார்த்திகை செல்வனின் கேள்விகளுக்கு கார்த்திகை மழையாக பதிலை கொட்டும் தலைவியின் தைரியத்தையும் அறிவினையும் பார்க்கவே அவ்வளவு ஆனந்தம். என்ன தவம் செய்துவிட்டது தமிழகம்? […]

திருமணம் செய்ய நயன் தாரா முடிவு?

இயக்குநர் விக்னேஷ் சிவனை  ரகசிய திருமணம் செய்ய நயன் தாரா முடிவு? : செய்தி அப்பாடா ஒருவழியாக‌ இந்த Babu Rao என்பவர் சயனைடை தேடியும், இந்த Chandran Kannan என்பவர் கடலை தேடியும் ஓடும் நேரம் வந்துவிட்டது. ஆயினும் பென்ஸ்கார் வாங்க எவனோ ஒருவன் முகவரியினை அமலாபால் கொடுத்தது போல, தன் முகவரியினை திருமண பதிவு அலுவலகத்தில் நயன் கொடுக்க மாட்டாரா? என்ற கடைசி  நம்பிக்கையில் இன்னும் சயனைடை கடிக்காமல் இருக்கின்றார் Babu Rao

சர்தார் வல்லபாய் பட்டேல்

இந்திரா காந்தியினை நினைவு கூறும் இந்நாளில் அந்த மாமனிதரையும் நினைவு கூறத்தான் வேண்டும். சுதந்திர இந்தியாவினை ஒரே இந்தியா ஆக்கிய அரும் மனிதர் அவர். சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர். காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது […]

அமெரிக்காவை விட கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

“மிஸ்டர் டிரம்ப் அமெரிக்காவினை இந்த அமைச்சர் எப்படி கேவலபடுத்துகின்றார் பார்த்தீர்களா? இப்படி யாராவது அமெரிக்காவினை அசிங்கபடுத்தியிருக்கின்றார்களா? எங்களுக்கென்னவோ நீங்கள் பதவிக்கு வந்தபின்புதான் இவர்கள் இப்படி எல்லாம் பேசுகின்றார்கள் என தோன்றுகின்றது எவ்வளவு பெரும் அமெரிக்க அவமானமிது? உடனே பின்லேடனை தூக்கிய ஸ்டைலில் வந்து இவர்களை தூக்கிகொண்டு செல்லுமாறு உங்கள் சீல் படைக்கு உத்தரவிடுங்கள் இல்லாவிட்டால் டிரம்பினை விட நல்லாட்சியினை பழனிச்சாமி கொடுக்கின்றார் என்ற அளவு பேசுவார்கள், அதனை கேட்டு உங்களுக்கு மாரடைப்பு வரலாம், வடகொரிய அதிபர் எல்லாம் […]

மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு

அந்த செய்தி விஸ்வரூபமாகின்றது அதாகபட்டது, தமிழகத்தில் மணற்கொள்ளை உலகறிந்தது. எல்லா ஆறுகளும் சுரண்டபட்டாயிற்று, இனி சுரண்ட வழியே இல்லை இனி மணல் வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகள் மண்டையினைத்தான் உடைக்க வேண்டும், அதுவும் களிமண் இருக்குமே தவிர, கட்டடம் கட்ட கூடிய மண் இருக்காது. இந்நிலையில்தான் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய கட்டடம் கட்டுவோர் முடிவெடுத்தனர், முதற்கட்டமாக 50 ஆயிரம் டன் மணல் தூத்துகுடிக்கு வந்திருக்கின்றது தமிழக மணல் விலையில் இது பாதி என்பது குறிப்பிடதக்கது இதனால் […]

பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று

பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று, இப்பொழுது கூட “கமுதி பஸ்ஸ்டாண்ட்டுக்கு வாடா..” என புறா விடு தூது எல்லாம் அனுப்புகின்றார்கள் நாதக, திக, திமுக ஸ்டாலின் அணி, அதிமுக எல்லா அணி, பக்தாள், தலித் சங்கம், பிராமணாள் சங்கம் , தமிழிசை கோஷ்டி என ஒரு இடம் பாக்கியில்லாமல் பகை வந்தாயிற்று. பிரிவினை கிறிஸ்தவர், இஸ்லாமியர், சில இந்துக்கள் எல்லாம் ஓன்றாக அடிக்க வரும் அற்புத காட்சியெல்லாம் தெரிகின்றது. இதில் அஜித், விஜய், ராமசந்திரன் […]

குஷ்பு ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

சென்னை கடும் மழை அச்சமூட்டும் விஷயம்தான், குஷ்பு அங்கிருப்பதால் உலகெல்லாம் உள்ள ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர் ஆனால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், ரசிக கண்மணிகள் பாகுபலி பிரபாஸ் போல நின்றுகொள்வார்கள், அவர்கள் மேல் கால் வைத்து தலைவி அட்டகாசமாக வெள்ளத்தை கடந்து செல்லலாம் என்ற திட்டம் Sadhu Sadhath அவர்களால் கொடுக்கபட்டு சங்கத்தால் பரிசீலிக்கபடுகின்றது ஒருவேளை நிலமை சிக்கலானால் அது நடைமுறைபடுத்தபடும் என சங்கத்து சார்பில் தெரிவிக்கபடுகின்றது  

சென்னையில் மழை தொடங்கிவிட்டது

சென்னையில் மழை தொடங்கிவிட்டது, மக்கள் குழுக்களாக பிரிந்து ஒருவேளை பெருவெள்ளம் வந்துவிட்டால் எதிர்கொள்வது எப்படி என கிளம்பிவிட்டார்கள் ஒரு தலைவன் இருந்து நடத்துவதாக தெரியவில்லை, மாறாக மக்கள் குழுக்களாக அதனை செய்கின்றார்கள், 2015 வெள்ள அனுபவ எச்சரிக்கை அவர்களை அதனை செய்ய வைக்கின்றது உண்மையில் மகா ஆச்சரியமான விஷயம் இது, இந்நகரத்து யதார்த்தத்தை புரிந்துகொண்டார்கள், நமக்கு நாமே என கிளம்பிவிட்டார்கள் மனிதநேயம், திட்டமிடல், தங்களை தற்காத்து கொள்ளும் துணிச்சல், மத இனங்களை கடந்து இயற்கை சீற்றத்தில் எப்படி […]